ஆனந்தி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆனந்தி |
இடம் | : வடலூர்/கடலூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 1423 |
புள்ளி | : 679 |
உலகத்தை திரும்பி பார்க்க வை....
பாசத்தை பணமாக்கி
கருணையை காசாக்கி
வறுமையை விலைபேசி
நேசத்தை தெருவில் வீசி
விவேகியாய் வீற்றிருக்கும்
வீனருக்கெல்லாம் வணக்கம்
செய்தே வீழுது மனிதம் !!!
அனுதினமும் எனை "கொல்லுது " மனம்....
*பணமா..... * குணமா ...... *மனமா .....
இதில் எதை நான் தேர்ந்தெடுக்க இக்காலத்தில் !!!!!!!!!!!!!!
- உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ................
பாசத்தை பணமாக்கி
கருணையை காசாக்கி
வறுமையை விலைபேசி
நேசத்தை தெருவில் வீசி
விவேகியாய் வீற்றிருக்கும்
வீனருக்கெல்லாம் வணக்கம்
செய்தே வீழுது மனிதம் !!!
அனுதினமும் எனை "கொல்லுது " மனம்....
*பணமா..... * குணமா ...... *மனமா .....
இதில் எதை நான் தேர்ந்தெடுக்க இக்காலத்தில் !!!!!!!!!!!!!!
- உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ................
("தடி ஊன்றும் எழுதுகோல்"எனும் தொடர் கவிதைகளை தளத்தில் எழுத இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.உங்களை ஆதரவை பொறுத்து நான் இன்னும் என்னை வளர்த்துக் கொள்வேன்)
1.மூங்கில் காட்டில்
வெட்டப்பட்ட புல்லாங்குழல்கள்
பூக்களின் தோட்டத்தில்
இனிமையை யாசிக்கிறது..,
2.பட்டாம்பூச்சிகளின்
அழைப்புக் கடிதத்தில்
பூக்களின் மரணக் கவிதை
கண்ணீருடன் வாசிக்கப்படுகிறது
3.பூக்களை ஆயுதம் கொண்டு வெட்டி
அறுவடை செய்வதும் கொலை தான்
4.நேற்று இன்று நாளை நான் ரசித்து
வாழ்ந்து வாழப்போகும் வாழ்க்கை
என்னை பார்த்து முட்டாள்தனமாய்
சிரிக்கிறது.,
5.உலகமெனும் கலை மேடை மேல்
நின்று கொண்டிருக்கும் உயிரோட்டமான
("தடி ஊன்றும் எழுதுகோல்"எனும் தொடர் கவிதைகளை தளத்தில் எழுத இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.உங்களை ஆதரவை பொறுத்து நான் இன்னும் என்னை வளர்த்துக் கொள்வேன்)
1.மூங்கில் காட்டில்
வெட்டப்பட்ட புல்லாங்குழல்கள்
பூக்களின் தோட்டத்தில்
இனிமையை யாசிக்கிறது..,
2.பட்டாம்பூச்சிகளின்
அழைப்புக் கடிதத்தில்
பூக்களின் மரணக் கவிதை
கண்ணீருடன் வாசிக்கப்படுகிறது
3.பூக்களை ஆயுதம் கொண்டு வெட்டி
அறுவடை செய்வதும் கொலை தான்
4.நேற்று இன்று நாளை நான் ரசித்து
வாழ்ந்து வாழப்போகும் வாழ்க்கை
என்னை பார்த்து முட்டாள்தனமாய்
சிரிக்கிறது.,
5.உலகமெனும் கலை மேடை மேல்
நின்று கொண்டிருக்கும் உயிரோட்டமான
தீப்பொறி – தெய்வநெறி !
நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
புதுமை பதிப்பகம், 343, வது ஸ்கொயர், ஆஸ்டின் டவுன், பெங்களூரு – 560 047.
*****
நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து வருபவர். பாவலர் இராம. இளங்கோவன் அவர்களுடன் பெங்களூரு அலுவலகம் வந்து என்னை சந்தித்து மகிழ்ந்தவர். இல்லம் சென்று உடன் இந்நூலை அஞ்சலில் அனுப்பி வைத்தார். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கில் தவறாமல் கலந்து கொண்டு கவிதை பாடும் வல்லவர். கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதை எழுதி வருபவர்.
பருவமோ பதினாறு
ருசியோ பலநூறு !
அள்ளி பருகவே அத்தான் நானுண்டு...
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியை !
யாரென்று நானறியேன்..
ஆனால்.....
என் ஆயுள் முழுதும் வாங்கிய
அழகிய சிறுபூவை நீ !
என நான் அறிவேன் ....
என்னிடம் உன்னை விட்டுவிடு
இல்லை...
பறித்த என் உள்ளத்தை
என்னிடமே விட்டுகொடு .....
* உன்னை தென்றல் காற்றென்றேன் - நான் என்ன
அயலாரைஎல்லாம் தொட்டு
தழுவுகுறேனா என முறைக்கிறாய் !
* உன்னை மலர் என்றேன் - நான் என்ன
வாடி வதங்கி மாலையில்
மடிகிறேனா என முனுமுனுக்கிறாய் !
* உன்னை மதி என்றால் - நான் என்ன
குன்றி பெருகும் குணம்
கொண்டவளா என குறைகூறுகிறாய்
*
என் செல்லமே...
உன்னை பெற்ற பொழுதில்
என் வெட்கம் துறந்ததென்னவோ..
அந்த கதைதான் நான் சொல்லவோ..
இதுவரை நான் காத்த பெண்மை தொலைந்த கதை
என் தாய்மையை நான் உணர்ந்த கதை ...
கண்ணே!!!!!
மழலை பூத்த மொட்டாய் மலர்ந்தேன் !
பசுந்தமிழ் கற்றே பதுமையாய் மிளிர்ந்தேன் !
நாளும் பொழுதும் வான்மேகமாய் தவழ்ந்தேன் !
கன்னித்தமிழால் பருவம் தொட்டு பாவையானேன்...
மணியே!!!
நாணமும் நளினமும் ததும்ப ததும்ப
பெண்மையின் வாசம் கொண்டு
சொக்கியே நான் நின்றேன் !
முத்தே !!!!
யெவரும்யெவரும் கானா வண்ணம்
ஆடையை சரிசெய்தே அயர்ந்த கைகளுண்டு !
மாணிக்கமே !!!
தென்றல் காற்றால் சேலை விலகக்கண்டு
பத
நாதியற்றவர் என்றும் வீதிகளில்
--நானிலத்தில் எழுதாத விதிதானே !
நாய்மட்டும் என்ன விதிவிலக்கா
--நாளும் காண்கின்ற காட்சிதானே !
பிறப்பதும் வளர்வதும் ஓரிடம்
--பிரிந்து வருவதோ வேறிடம் !
பிடித்தவர் வளர்ப்பர் கருணையில்
--பிரிந்திட மனமின்றி வீட்டினில் !
உருவமும் உண்டு நன்றிக்கன்றோ
--உலகில் அதுவும் நாயன்றோ !
உள்ளவரை நினைக்கும் உள்ளமது
--உப்பிட்ட உள்ளத்தை உண்மையிது !
காத்திடும் காவலன் நாள்முழுதும்
--காத்தவரை நினைக்கும் காலமும் !
காசில்லாக் காப்பீட்டுக் கழகமது
--காலாவதியும் ஆகாது நிச்சயமது !
மனிதரில் இல்லையே நன்றியுடன்
--மண்ணில் குறைவே குணமுடன் !
மனங்கள் மறுக்காது
செயலற்று இயங்குகிறேன்
பாதாளத்தின் ஆழத்தில்
சில கணம்
வானத்து விண்மீன்களில்
சிலகணம்
இதம் தரும் தென்றலோடு
சில கணம்
இம்சிக்கும் சித்திரையின்
வெம்மையோடு சில கணம்...
என் எண்ணங்கள் எதிர்
தாக்குதல் இன்றியே
சமாதானக் கொடியை
நீட்டி நிற்கிறது
சமாதானமின்மைக்கு....
எனக்குள் நானே எதிரியாய்
பிடிப்பு குறையாமலிருக்க,
பிடித்ததைப்
புரட்டிப் போட எண்ணப்படுகிறேன்
புலப்படவில்லை
முடிவற்றுப்போனதா? - என்
ஆரம்பமே முடிவாய் திருத்தமற்று.
என் திருத்தமோ, குழப்பமுற்று.
மரணித்தது
வீழ்ந்தோம் நானும்
என் எழுதுகோலும் இனி
மீண்டெழ எண்ணமில்லை
இருவருக்கும்.
நாங்கள் இன்னும் மீதமிருக்கிறோம்....
இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...
நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...
கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...
இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...
பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...
முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...
சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...
ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...
நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...
பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...
உன் செய்கை-கள்
எனக்கு புரியவேயில்லை
நான் எழுதும் கவிதை
போலவே.....
என் பெயரை சொல்லும்
போதெல்லாம் வருத்தம்
இன்னும் ஒரு முறை
சொல்(லேன்).....
என் தூக்க விற்பனை அற்புதம்
குறைச்சொல்ல வழியின்றி
உன் கண்களுக்குள்.....
கனவுக்குள் புன்னகைக்கும்
உன் பிம்பம்
நினைவினில் முறைக்கும்
என் பிம்பத்தை.
எது உண்மை நீ தான்
சொல்ல வேண்டும்......
தயங்காமல் தள்ளிவிடுகிறாய்
நெருப்பின் மீது
நானோ விழுகிறேன்
பூக்களின் மீது......
ஒரே நேரத்தில்
தூண்டிலும் போடுகிறாய்
தூக்கிலும் போடுகிறாய்
என்ன தான் செய்ய நான்
நீயே சொல்.......
உனக்கான என்
வார்த்தைகள்
மொழி பெயர்த்தாலும்
மௌனமாகவே
இருந்து விடுகிறது......
என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்........
உனக்கு மட்டும்
புரிந்து விடுகிறது
என் தேவைகளின்
நீளமும் அவசியமும்
என்னவென
சில நேரங்களில்
புரியாமலும்.....
என்னை விட்டு நீ
விலகி நிற்பதும்
ஒருவித
நேசமாகவே இருக்கலாம்.....
என் மௌனம்
உடைக்க மலையை
தகர்க்கிறாய் - உன்
கண் அசைவில்
கரைவேன் இப்பதுமை
என தெரியாத
அப்பாவியாக......
பின்னொரு நாளில்,
இன்னொரு
பிரபஞ்சத்திற்குள்
புரட்டியும் போடலாம்
முடிந்தால்,
நம் நேசத்தை.......
நண்பர்கள் (206)

krishnan hari
chennai

அர்த்தனன்
ஸ்ரீலங்கா.வவுனியா

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு
