ம்ம்ஹ்ஹூம்ம்

மறுப்பு சொல்லை தலைப்பாக்க
நீயே காரணம் ...

விலகி செல்ல
உன் இதழ் உத்தரவிட
உன்விழிகளோ
விலங்கிடுகிறது..

கடுமையை
வார்த்தையில் காட்டி
விலகிப்போவென
சொல்ல
நானோ வெட்கம் கெட்டவனாக
உன் வெட்கம் கெட
யுத்தம் தொடர்ந்தேன் ..
என்ன செய்ய ..
மீறாதே என் வார்த்தையை
என்றாய் ...
கவிதைக்கு கூட
இலக்கணம் மீறி
பழக்கம்...
இதில் மட்டும் மீறாமலா..

இறுதியில் நீ சொன்னதே
ம்ம்ஹ்ஹூம்ம் !
பலமாய் யுத்தம் செய்ய
பணித்ததாக வீறு கொண்டேன்!

எழுதியவர் : பொன்னரசு (9-Jul-15, 1:18 pm)
பார்வை : 247

மேலே