உன்னருகில் நான் இல்லை என்று

அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;

கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;

நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;

உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...

எழுதியவர் : ராஜா (21-Apr-16, 11:29 pm)
பார்வை : 137

மேலே