உன்னருகில் நான் இல்லை என்று
அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;
கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;
நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;
உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...