மேகலை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மேகலை
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த தேதி :  05-Dec-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2011
பார்த்தவர்கள்:  1065
புள்ளி:  242

என்னைப் பற்றி...

கள்ளமௌனம் மொழியாக...
9865815903

என் படைப்புகள்
மேகலை செய்திகள்
மேகலை - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2021 4:08 pm

காதல் விதை
ஆழம் பார்க்கும்
நேரம் இது
நீ விதையாகிடு
நான் நிலமாகிறேன்

பூவுக்குள் பூகம்பம்
நீ நிகழ்த்திட
பூவிதழ்களால்
நான் களம்
அமைக்கிறேன்

தேர் போல
அசைந்தாடும்
என் மேனியில்
மார்போடு மணிகள்
உண்டு நீ இசைக்கவே

சீரான முத்தங்கள்
நீரோடும் கங்கையாக
சிதறிய மிச்சங்கள்
இரவோடு மின்னும்
நட்சத்திரங்களாக

வெள்ளிக் கிண்ணத்தில்
பருகும் பால்போலவே
பெண் நானும் அமுதமே

தங்கம் போல நான் உருகிட
துளித்துளியாய் நீயும் பருகிட
இனியும் தாமதம் வேண்டாமே...

மேலும்

மேகலை - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2021 11:59 pm

உன் நினைவே
அழகு தானடி
ஒருதலை காதலில்...

மேலும்

மேகலை - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 6:56 pm

அவள் நெஞ்சில்
கசிகிறது ஈரம்
மழைத்தேன் என
நான் மலைத்தேன்...!!

மேலும்

மேகலை - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2021 10:01 am

பருவமழை
பொழிகிறது
பருவமெல்லாம்
நனைகிறது

பாய் விரிக்க
இடமில்லை
உன்மடியே
பஞ்சுமெத்தை

பகல் இரவாக
நீள்கிறது
இரவு உறவாக
தொடர்கிறது

என் அட்சய
பாத்திரம்
நிறைகிறது
மழையில் உன்
சூத்திரமும்
புரிகிறது

உன்னை கேள்வி
கேட்டால் பதில்
"ம்ம் தானா"
அதிலும்
மழையின் ஈரம்
பிசுபிசுக்கிறது...!

மேலும்

மேகலை - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2021 11:10 am

மெல்ல சூடேற்றி
கொதிக்கவைத்து
பின் ஆறவைத்து
வடிகட்டி பருகிடும்
மழைநீரும் காமமும்
தனிச்சுவையன்றோ...

ருசித்ததில் பிடித்தது...

மேலும்

மேகலை - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2021 10:41 pm

என்னால் எப்படி
சாத்தியமாகிறது
உன் அன்பின்
பெருவெளியில்

குடையில்லாமல்
நனைவதற்கும்
வெயிலில்லாமல்
காய்வதற்கும்

உன் மென்மையான
தீண்டலில் நான்
முகிழ்ந்திருப்பதும்
அதிசயம் தான்

எடுப்பான
என் மலர்களின்
தர்க்கமும் என்னை
ஏதோ செய்கிறது

இன்னும் இன்னும்
இறுக்கமான
அணைப்பின் ஆழமும்

துடிப்பில் மலர்ந்திடும்
வேகமும் கரைமீறிடும்
நதிபோல் வேகமெடுக்க

துள்ளிய நான் துயில்
கொள்ள பஞ்சணை
வேண்டாமே உன்
நெஞ்சணை போதுமே
இக்கணத்தில்...

மேலும்

நன்றி 04-Sep-2021 3:37 pm
ரசனைன மிகு கவி....... வாழ்த்துக்கள் 💐💐 31-Aug-2021 11:46 am
மேகலை - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2021 12:18 am

ராதே:

இமைகளை
தழுவிடும் காற்றே
என் தனிமையை
திருடிச் செல்வாயா?

இதயம்
நுழைந்த காற்றே
என் வலிகளை
திருடிச் செல்வாயா?

கோடைகால
காற்றே என்னை
கோபுரத்தின் உச்சிக்கு
அழைத்துச் செல்வாயா?

தலைகோதும்
இளமைக் காற்றே
குழந்தையாய்
வாரி அணைப்பாயா?

முத்தமிடும்
மோகன காற்றே
மென் சிணுங்கல்கள்
என்னிடம் மட்டும் ஏனோ?

கண்களுக்கு
அகப்படாத காற்றே
என் மஞ்சத்தில்
உனக்கென்ன வேலை?

(காற்று = கிருஷ்ணா)💞💕

மேலும்

நன்றி 30-Aug-2021 10:47 pm
கவிதையாயினுமி அதில் கடவுளை சேர்க்க தனி மெருகு கூடுகிறதைப் பாருங்கள் உணரலாம். 30-Aug-2021 7:50 pm
மேகலை - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2019 7:06 pm

உன் பார்வையில்
நானே துளிதேனாய் ஆனேன்
உன் நாவினால்
நீ என்னை தீண்டினால்
என் உயிர் உருகுமே ஆவலாய்

மழை சாரலின் ஊடே
பறந்திடும் கார் தும்பி போலவே
உணர்வுக்குள் இழையோடும்
காதலும் கள் போதை
ஏற்றியே தள்ளாடுமே ஆவலாய்

இரு இதயங்களை படித்த
பக்கங்களாய் கலைத்துபோட
துடிக்கின்றதே காற்றும்
ஆடை அணிந்தும் பயனிலையே
அதிகாரமும் மண்டியிடுமே இயற்கையாய்

இருநிலவுகளை சுமக்கவே
கடிவாளம் போடும் காதலை
நாம் கூடி வீழ்த்தி சிலையான பின்னும்
வழியுதே காமமும் வியர்வையாய்
அதிகாலையும் தொடருமே ஆவலாய்

மழை காலத்தின் சுவடுகள்
மறையும் முன்னே எதிர்கால
பனியாய் நடுநிசியில் நாமும்
உறைவோம் இணைவோம்
சுட்டு விரலாலே கட்டி இழு

மேலும்

நன்றி 09-Jul-2019 10:09 am
இறவிக் காவியம் இனிக்கும் இருதயம் பார்வைப் பசியினை பகிரும் காவியம்... --- அருமை 07-Jul-2019 4:58 pm
மேகலை - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2019 7:06 pm

உன் பார்வையில்
நானே துளிதேனாய் ஆனேன்
உன் நாவினால்
நீ என்னை தீண்டினால்
என் உயிர் உருகுமே ஆவலாய்

மழை சாரலின் ஊடே
பறந்திடும் கார் தும்பி போலவே
உணர்வுக்குள் இழையோடும்
காதலும் கள் போதை
ஏற்றியே தள்ளாடுமே ஆவலாய்

இரு இதயங்களை படித்த
பக்கங்களாய் கலைத்துபோட
துடிக்கின்றதே காற்றும்
ஆடை அணிந்தும் பயனிலையே
அதிகாரமும் மண்டியிடுமே இயற்கையாய்

இருநிலவுகளை சுமக்கவே
கடிவாளம் போடும் காதலை
நாம் கூடி வீழ்த்தி சிலையான பின்னும்
வழியுதே காமமும் வியர்வையாய்
அதிகாலையும் தொடருமே ஆவலாய்

மழை காலத்தின் சுவடுகள்
மறையும் முன்னே எதிர்கால
பனியாய் நடுநிசியில் நாமும்
உறைவோம் இணைவோம்
சுட்டு விரலாலே கட்டி இழு

மேலும்

நன்றி 09-Jul-2019 10:09 am
இறவிக் காவியம் இனிக்கும் இருதயம் பார்வைப் பசியினை பகிரும் காவியம்... --- அருமை 07-Jul-2019 4:58 pm
மேகலை - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2019 8:40 pm

கனவுகளுக்குள் இறங்கி
தூர் வார தொடங்கினேன்
மீண்டும் பெய்யத்தொடங்கியது
பெருமழை
அவள் நினைவுகளாய்
என்னை சூழ்ந்தபடி

குறை சொல்லாமல்
இரவுகளை கடந்திட
பழக்கியவள் அவள் தான்

அப்படியே தாலாட்டில்
தாய்மடியென தன் நெஞ்சில்
என்னை அவள் புதைத்ததும்
அறிய மழைநாள் தான்

முழுதாய் ஒரு முத்தத்தை
நீலசோறெனவே ஊட்டியவள்

வேம்பு நிழலாய் வீழ்ந்து கிடந்தாலும்
பூமியையும் என்னையும் குளிர்ச்சியாய்
வாரி அணைக்கும் பெருந்தகையாள்

தினவெடுத்த நேரங்களில்
எல்லாம் வேள்வித்தீயாய் சூழ்ந்து
வியர்வை மழையாய்
பொழிய தவறாதவள்

ஒரு பொய் சொல்லிக்கொள்கிறேன்
என கெஞ்சும் போதும் கொஞ்சும் போதும்
போதுமென்று சொல்லும் வரை
மனதை குழையவ

மேலும்

கவியின் சாரல் மிக அழகாக வரிகளாக! அடடா இனிமை!! நீலசோறெனவே ஊட்டியவள் = நிலாசோறெனவே ஊட்டினாள் 07-May-2019 2:07 pm
மேகலை - மேகலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2018 7:27 pm

ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா

நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி

சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்

அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று

எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டத

மேலும்

நன்றி 17-Jun-2019 3:00 pm
அருமை 16-Jun-2019 5:54 pm
நன்றி 11-Jun-2019 1:50 pm
விண்ணிலவும் பொன்னொளியில் முத்தம் ஒன்று - மேக வெள்ளாடை விலக்கியவள் என்னைக் கேட்க, என்மனதில் ஊறியெழும் ஆசைதன்னை - மீறி எப்படிநான் தருவதென்று கூசும் போது, மின்மினிதன் கண்மூடிக் கொண்டா ளஅங்கே - வாச மெல்லியலாள் அல்லிவிழி விரியப் பார்த்தாள்! தன்மணத்தால் உன்மனத்தை வெல்லும் - வ்ஞ்சி மல்லிகையும் இதழ்விரிய மலர்ந்து நின்றாள்! இன்னவர்கள் எனைச்சுற்றிப் பார்த்து நிற்க - எனக்குள் எழுந்தாடும் வெட்கத்தை மெல்ல வென்று எண்ணுகையில் முத்தாட இதயந்தன்னில் - பொங்கி இறங்கியதே தாழையெனும் காதல் காதல்! --- நல்ல கவிதைக்கு வெறும் வார்த்தைகள் தக்க பரிசாகாதல்லவா? அதனால் உங்களது கவிக்கருவினையே என் கவிவிதையாக்கி ஒரு சிறிய "பாமாலைப் பரிசு! கவிஞர் மேகலை! 08-Jun-2019 11:40 am
மேகலை - மேகலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2018 7:55 pm

ஒவ்வொரு வார்த்தைக்கும்
இடையில் இடைவெளி விட்டு நீ
பேசிக்கொண்டிரு முத்தங்களால் நான்
நிரப்பிக்கொள்கிறேன்!.....(காதலை)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே