பார்வையில் பட்ட காதல்

உன் பார்வையில்
நானே துளிதேனாய் ஆனேன்
உன் நாவினால்
நீ என்னை தீண்டினால்
என் உயிர் உருகுமே ஆவலாய்

மழை சாரலின் ஊடே
பறந்திடும் கார் தும்பி போலவே
உணர்வுக்குள் இழையோடும்
காதலும் கள் போதை
ஏற்றியே தள்ளாடுமே ஆவலாய்

இரு இதயங்களை படித்த
பக்கங்களாய் கலைத்துபோட
துடிக்கின்றதே காற்றும்
ஆடை அணிந்தும் பயனிலையே
அதிகாரமும் மண்டியிடுமே இயற்கையாய்

இருநிலவுகளை சுமக்கவே
கடிவாளம் போடும் காதலை
நாம் கூடி வீழ்த்தி சிலையான பின்னும்
வழியுதே காமமும் வியர்வையாய்
அதிகாலையும் தொடருமே ஆவலாய்

மழை காலத்தின் சுவடுகள்
மறையும் முன்னே எதிர்கால
பனியாய் நடுநிசியில் நாமும்
உறைவோம் இணைவோம்
சுட்டு விரலாலே கட்டி இழுப்போம்
கட்டி இழுத்தே கட்டிலில் கட்டிவைப்போம்
திமிர்கின்ற இரவை ஆவலாய்!!!.............

எழுதியவர் : மேகலை (1-Jul-19, 7:06 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : un paarvaiyil
பார்வை : 400

மேலே