காதல் மனைவி

கனவுகளுக்குள் இறங்கி
தூர் வார தொடங்கினேன்
மீண்டும் பெய்யத்தொடங்கியது
பெருமழை
அவள் நினைவுகளாய்
என்னை சூழ்ந்தபடி

குறை சொல்லாமல்
இரவுகளை கடந்திட
பழக்கியவள் அவள் தான்

அப்படியே தாலாட்டில்
தாய்மடியென தன் நெஞ்சில்
என்னை அவள் புதைத்ததும்
அறிய மழைநாள் தான்

முழுதாய் ஒரு முத்தத்தை
நீலசோறெனவே ஊட்டியவள்

வேம்பு நிழலாய் வீழ்ந்து கிடந்தாலும்
பூமியையும் என்னையும் குளிர்ச்சியாய்
வாரி அணைக்கும் பெருந்தகையாள்

தினவெடுத்த நேரங்களில்
எல்லாம் வேள்வித்தீயாய் சூழ்ந்து
வியர்வை மழையாய்
பொழிய தவறாதவள்

ஒரு பொய் சொல்லிக்கொள்கிறேன்
என கெஞ்சும் போதும் கொஞ்சும் போதும்
போதுமென்று சொல்லும் வரை
மனதை குழையவிடுபவள்

எப்போதுமே ஒப்பனை இல்லாத
பேரழகாய் மனதை வசியம் செய்பவள்

சிந்தனைகளற்று நீளும்
இரவில் ஆடை அணியாத
முழு நிலவாய் தொடர்கிறது
இன்றும் அவள் திவ்ய த(க)ரிசனம்!!..........

எழுதியவர் : மேகலை (19-Jan-19, 8:40 pm)
Tanglish : kaadhal manaivi
பார்வை : 562

மேலே