தனிமையில் காதல்

காதல் விதை
ஆழம் பார்க்கும்
நேரம் இது
நீ விதையாகிடு
நான் நிலமாகிறேன்

பூவுக்குள் பூகம்பம்
நீ நிகழ்த்திட
பூவிதழ்களால்
நான் களம்
அமைக்கிறேன்

தேர் போல
அசைந்தாடும்
என் மேனியில்
மார்போடு மணிகள்
உண்டு நீ இசைக்கவே

சீரான முத்தங்கள்
நீரோடும் கங்கையாக
சிதறிய மிச்சங்கள்
இரவோடு மின்னும்
நட்சத்திரங்களாக

வெள்ளிக் கிண்ணத்தில்
பருகும் பால்போலவே
பெண் நானும் அமுதமே

தங்கம் போல நான் உருகிட
துளித்துளியாய் நீயும் பருகிட
இனியும் தாமதம் வேண்டாமே...

எழுதியவர் : மேகலை (8-Dec-21, 4:08 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 183

மேலே