கவிதாயினி அமுதா பொற்கொடி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கவிதாயினி அமுதா பொற்கொடி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  17-Aug-1965
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2011
பார்த்தவர்கள்:  6526
புள்ளி:  1865

என்னைப் பற்றி...

என்னுயிரே நீ எங்கு சென்றாய்...?
எனைக் காத்த கரங்கள் ஓய்ந்தன
நடந்து தேய்ந்த கால்கள் நின்றன
எனை அழைத்த குரல் அடங்கியது
உன்னில் என் இதயம் துடிப்பை இழந்தது

பாசம் என்னும் வலையால்
எனை சுற்றி வேலியிட்டாய்
சற்றும் நான் அசையாமல்
உன் இதயக் கூட்டில் பூட்டி வைத்தாய்

துன்பம் எனை அண்டாமல்
நீயே வாசலில் காவலிட்டாய்
அன்பு என்னும் சுக தைலத்தால்
நிதமும் எனை அபிஷேகித்தாய்

ஆகாயத்தில் ஊசல் கட்டி
அதில் எனை அமர வைத்து ஆட்டி விட்டாய்
ஆடிய ஊஞ்சல் அசைவின்றி நிற்கிறது
இயக்கிய உன் கரங்கள் நின்றதால்

எனை ஆக்கிய கர்த்தரும் நீயே
எங்கும் எதிலும் எப்பொழுதும்
எனை இயக்கிய சக்தியும் நீயே
ஆயிரம் உறவுகள் இருப்பினும்
எனை ஆட்டி வைக்கும் புத்தியும் நீயே

இன்று தடுமாறுகிறேன் உன் பிரிவால்
தாங்கிய உன் கரங்கள் எங்கே?
என் விழி நனைந்த போது
உன் இதயம் உதிரம் சிந்தியதே
இன்று கதறுகிறேன் உன் நினைவால்

உன் நினைவுகளை விட்டு விட்டு
சுவடுகளை ஏன் மறைத்தாய்
எங்கு சென்றினும் விடைபெறும் நீ
இன்று மட்டும் ஏன் மறந்தாய்

கலங்கும் என் முகம் காண முடியாமல்
சொல்லாமல் நீ சென்றனையோ
எத்தனை முறை எனை அழைத்திடுவாய்
இன்று ஏன் அதை மறந்தாய்

காற்றில் கலந்த உன் குரல் அலையை
தேடி தேடித் பார்க்கிறேன்
என் கவிதைக்கு உயிரோட்டமாய் இருந்தவன் நீ
இன்று கருப்பொருளாய் மாறிவிட்டாய்

அகக்கண்ணில் காண்கிறேன்
மறைந்த உன் திருமுகத்தை
இறைந்து உன்னிடம் வேண்டுகிறேன்
எனக்கு ஒரு வரம் தந்தருள்வாய்

மீண்டும் ஒரு ஜென்மம் உண்டென்றால்
எனை சுமந்த உன்னை சுமப்பதற்கு!

- மகள். வை.அமுதா
http://www.facebook.com/Amutha17

என் படைப்புகள்
கவிதாயினி அமுதா பொற்கொடி செய்திகள்

என் ஐவிரல்களின் இடைவெளி
உனக்காகவே படைக்கப் பட்டவை....
விலகி நான் நின்றாலும்
விரும்பி வந்துப் பற்றிக்கொள்..,
வா! வாழ்க்கையின் இறுதிவரை பயணிக்க.......

காட்சிப் பிழையாய் தோன்றும் பாதை
இன்னும் இன்னும் தொடரட்டும் .....
கடைசி எல்லை கண்படாமலே தொலையட்டும்

கைகோர்த்து உலவும் போது
உன் விரல் நுனிகளுக்கு எச்சரிக்கை விடு
நான் எப்போதும் வேண்டுவது சைவக் காதலை

உன் பார்வை உரசலின் வீரியத்தைக் குறை
என் வைராக்கியத்தை வீழ்த்தும் வஜ்ராயுதம் அவை....

இடையே உள்ள காந்தக் கோடுகள்
நம் இதயத்துடிப்பால் அதிர்கிறது
மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை

தவிப்புகளோடு தடம்

மேலும்

மழைக்கால நினைவுகள்...

வெட்டவெளி வானில்
முட்ட நிறைந்தன
கார்கால மேகங்கள்

கொட்டித் தீர்க்க காத்திருக்கும் வானம்
சொட்ட நனைய ஏங்கித்
தவிக்கும் மனம்

அன்பின் அதீரா....

எட்டியும் எட்டா தொலைவில்
தொடர்ந்து என்னை வந்திடு
பட்டும் படா பார்வையால்
ஊடுருவிக் கொன்றிடு

தொட்டும் தொடா விரல் நுனியால்
கட்டவிழத் துணிந்திடு
தட்டாது தட்டும் பாவத்தில்
தடையின்றி பின் தொடர்வேன்....

பட்டான என் தேகம்
பரிசல் கட்டி ஓடட்டும்
கட்டடங்கா உன் மோகச் சுழலில்
உழன்றேதான் மூழ்கட்டும்...
வெட வெடப்பான மழைக்காலம்
கத கதப்பாய் கடக்கட்டும் . ...

மேலும்

சகனே! சகனே!
தொத்தித் தொங்கும் வெண்ணிலவை
தத்தித் தாவி இழுத்து வந்து
பொத்திப் பொதிந்து ஒளித்து வைத்தேன்...

அந்தியில் நீ வரும் வேளையில்
பந்திப் பாய்விரித்து
நிலைமொழி நானாக
வருமொழி நீயாக
சந்திப் பிழையின்றி
இணைந்தே இன்புற...

வேற்றுமை உருபாகி உணர் பொருள் தருவாயோ ...?
இயல்பு திரிந்து விகாரம் ஆவாயோ ....?
ஓரெழுத்து ஒருமொழியாய்
என்னில் தனிமையை விதைப்பாயோ?
இல் பொருள் உவமையாய்
தவித்து நிற்கின்றேன்....

சகனே! சாகனே!
புணர்ச்சி விதி அறிந்து
அருகில் வா.
அசை சீர் தொடையாகி
உயிருடன் மெய் கலந்து
கவிதைகள் பிரசவிப்போம்...
இந்த பிபஞ்சம் நிறையட்டும் ....

மேலும்

பரிதவிக்கும் மனம்....

நீரிலிட்ட உப்பாய் கரைந்தது வெள்ளி
நிர்மூலமாய் வெறித்த வெண்சாம்பல் படலமாய் வானம்
நித்திரையிலிருந்து விழித்தும் விழிக்காமலும் பூமி
நிசப்தத்தின் நடுவே நீண்ட ஒரு ஒற்றைக் குரல்
அடிவயிற்றிலிருந்து புரப்பட்ட ஆழ்மன சோகம் தாங்கி
மௌனக் காற்றை அதிரவைத்து
மரண பயத்தை உதிர்த்தது.....

எங்கிருந்து வந்தது...?
ஏன் என் இதயத்தை கனக்க வைத்தது...?
அது மனித இனக் குரலே அல்ல...
மரணத்தின் கோரப்பசிக்கு
தன் துணைப் பெண்டை பறிகொடுத்த
ஆண்பறவை பாடிய முகாரியின் ஓலமிது...
அடைகாத்துக் கிடந்த முட்டைகள் அங்கே
அனாதையாய் ஜனனக் கதவை முட்டிக் கொண்டிருக்க

மண்டிய அவலத்தின் ஆற்றாமையில்

மேலும்

பாஞ்சாலியின் பரிகாசத்தை துரியோதனன் மன்னித்திருந்தால்
பாஞ்சசன்யம் முழங்கியிராது பாரதப்போர் நிகழ்ந்திராது
சரச சூர்ப்பநகையை சீண்டாது இலக்குவன் மன்னித்திருந்தால்
சுந்தர காண்டத்துடன் சுபமாய் இராமகாவியம் தொடர்ந்திருக்கும்
விரோதத்திற்கு விரோதம் உதிரத்திற்கு உதிரமென
மனிதனுள் உறங்கும் மிருககுணம் விழித்தெழ
மகாயுத்தங்கள் வெடித்து பூமியெங்கும் பிணக்காடு நிரவும்
மன்னிப்பெனும் சமரசமொழியே சமாதானத்தின் வாயிலை திறக்கும்

யாது குற்றமும் இவனிடம்யான் கண்டிடவில்லையென
ஏதும்பிழை தம்மீது வீழாத வண்ணம்
தோதுவாய் தீர்ப்பை மக்களிடம் ஒப்படைத்தான் பிலாத்து
தீதான பரபாசை விடுவித்தது மக்கள்மன்றம்
தேதுவாய் பூதலபாவத

மேலும்

வன்மங்கள் நிறைந்த நிகழ்கால வாழ்வியல் போராட்டத்தில் மன்னிக்கப்படும் நோக்கங்கள் கூட வன்முறையில் தான் முடிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 9:22 pm
கவிதாயினி அமுதா பொற்கொடி - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 10:32 am

புதியதொரு வீீணை செய்ய

எங்கே உள்ளது மரங்கள்

வெந்து தனிந்ததே காடு

மேலும்

அருமை 28-Oct-2015 2:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (342)

ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
GOPI.M

GOPI.M

Tirupattur
செல்ல கார்த்திக்

செல்ல கார்த்திக்

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (343)

இவரை பின்தொடர்பவர்கள் (351)

user photo

sethuramalingam u

vickramasingapuram
மேலே