கவிதாயினி அமுதா பொற்கொடி - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : கவிதாயினி அமுதா பொற்கொடி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 17-Aug-1965 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 6439 |
புள்ளி | : 1853 |
என்னுயிரே நீ எங்கு சென்றாய்...?
எனைக் காத்த கரங்கள் ஓய்ந்தன
நடந்து தேய்ந்த கால்கள் நின்றன
எனை அழைத்த குரல் அடங்கியது
உன்னில் என் இதயம் துடிப்பை இழந்தது
பாசம் என்னும் வலையால்
எனை சுற்றி வேலியிட்டாய்
சற்றும் நான் அசையாமல்
உன் இதயக் கூட்டில் பூட்டி வைத்தாய்
துன்பம் எனை அண்டாமல்
நீயே வாசலில் காவலிட்டாய்
அன்பு என்னும் சுக தைலத்தால்
நிதமும் எனை அபிஷேகித்தாய்
ஆகாயத்தில் ஊசல் கட்டி
அதில் எனை அமர வைத்து ஆட்டி விட்டாய்
ஆடிய ஊஞ்சல் அசைவின்றி நிற்கிறது
இயக்கிய உன் கரங்கள் நின்றதால்
எனை ஆக்கிய கர்த்தரும் நீயே
எங்கும் எதிலும் எப்பொழுதும்
எனை இயக்கிய சக்தியும் நீயே
ஆயிரம் உறவுகள் இருப்பினும்
எனை ஆட்டி வைக்கும் புத்தியும் நீயே
இன்று தடுமாறுகிறேன் உன் பிரிவால்
தாங்கிய உன் கரங்கள் எங்கே?
என் விழி நனைந்த போது
உன் இதயம் உதிரம் சிந்தியதே
இன்று கதறுகிறேன் உன் நினைவால்
உன் நினைவுகளை விட்டு விட்டு
சுவடுகளை ஏன் மறைத்தாய்
எங்கு சென்றினும் விடைபெறும் நீ
இன்று மட்டும் ஏன் மறந்தாய்
கலங்கும் என் முகம் காண முடியாமல்
சொல்லாமல் நீ சென்றனையோ
எத்தனை முறை எனை அழைத்திடுவாய்
இன்று ஏன் அதை மறந்தாய்
காற்றில் கலந்த உன் குரல் அலையை
தேடி தேடித் பார்க்கிறேன்
என் கவிதைக்கு உயிரோட்டமாய் இருந்தவன் நீ
இன்று கருப்பொருளாய் மாறிவிட்டாய்
அகக்கண்ணில் காண்கிறேன்
மறைந்த உன் திருமுகத்தை
இறைந்து உன்னிடம் வேண்டுகிறேன்
எனக்கு ஒரு வரம் தந்தருள்வாய்
மீண்டும் ஒரு ஜென்மம் உண்டென்றால்
எனை சுமந்த உன்னை சுமப்பதற்கு!
- மகள். வை.அமுதா
http://www.facebook.com/Amutha17
தான் செய்வது தனித்துத் தெரியவேண்டும்
தான் அதனால் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும்
தான் சிறப்பாக செய்ய வேண்டும்
தான் அதனால் தான் மட்டுமே நன்மை அடைய வேண்டும்....
இதுபோன்ற சிந்தனை உன்னிடம் உள்ளதா?
அப்படியென்றால் நீ மிகப் பெரிய சுயநலவாதி
தான் செய்வது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்
தன்னை சார்ந்த சமூகம் அதனால் முன்னிலை படுத்தப்பட வேண்டும்
தான் செய்வது சிறப்பாக இருக்கவேண்டும்
தன்னை சார்ந்த அனைவரும் அதனால் பயன் பெறவேண்டும்.
இதுபோன்ற சிந்தனை உன்னிடம் உள்ளதா?
அப்படியென்றால் நீ ஒரு பொதுநலவாதி.
நொறுங்கிய உண் துகள்களை
பல்லக்குத் தூக்கி ஊர்ந்திடும் எறும்புகள்
பதுக்கும் புற்றின் பாதுகாவலன் எவரோ?
நறுக்குத் துண்டாய் வான்பொதி நிலவை
வெண்பஞ்சிடை காட்சிப் பிழையாய் நகர்த்தி
தடுக்கி விழாது தாங்குவது எவரோ?
நேற்றைய முன்தினம் நிகழ்ந்த பொழிவில்
இன்று செழித்த மென்குடை காளான்களில்
உயிரணுவாகி நிமிர்ந்தது எவரோ?
காற்றுடன் அதிர்ந்து அரூபமான ஒலிக்கற்றை
சாற்றும் மொழியில் இன்னிசை ஆகிட
மாற்றுத் திறன் தந்தவர் எவரோ?
கூற்றவன் கயிற்றில் நியதியாய் நிலைத்து
குற்றம்குறை பொறுக்கும் அருட்கடலான
போற்றுதலுக்கு உரிய அவனே ஆவான்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
அனுபவம் கூடக் கூட, ஒன்றன் மீதான நம்முடைய எண்ணம் கருத்தும் மாறுபடுகின்றது... அதன்பிறகு மற்றவற்றின் மீதான நம்முடைய பார்வையும் முழுதாய் மாறுபடுகிறது.....
ம்ம்ம்! மாற்றம் ஒன்றே மாறாதது.
வெகுநாட்களுக்குப் பின்.. அக்கா திருமதி. கோகிலா சமுத்திரம் அவர்களை அவர்கள் இல்லம் சென்று சந்தித்தேன். எப்போதும்போல அளப்பரிய அன்பு. வீடு முழுவதும் அத்தான் வாங்கிய விருதுகள் நினைவுப் பரிசுகளுடன், சாகித்ய அகாடமி விருது அழகு சேர்த்தது..... அக்கா, அத்தான் சு.சமுத்திரம் பற்றி நிறைய பேசினார்கள்.
"உங்க அத்தான் கலந்துக்கிட்ட விழா எல்லாத்தையும் பாரு" மிகுந்த ஆர்வத்துடன் பழைய ஃபோட்டோ ஆல்பங்களை எல்லாம் கொடுத்தார்கள். அவற்றை பார்க்கும் போதுதான், தமிழகம் மட்டுமல்ல தேசிய அளவில் எவ்வளவு பெரிய மனிதர்களிடம் எல்லாம் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது...
"இந்தா , இதெல்லா ஒங்க அத்தான
பாஞ்சாலியின் பரிகாசத்தை துரியோதனன் மன்னித்திருந்தால்
பாஞ்சசன்யம் முழங்கியிராது பாரதப்போர் நிகழ்ந்திராது
சரச சூர்ப்பநகையை சீண்டாது இலக்குவன் மன்னித்திருந்தால்
சுந்தர காண்டத்துடன் சுபமாய் இராமகாவியம் தொடர்ந்திருக்கும்
விரோதத்திற்கு விரோதம் உதிரத்திற்கு உதிரமென
மனிதனுள் உறங்கும் மிருககுணம் விழித்தெழ
மகாயுத்தங்கள் வெடித்து பூமியெங்கும் பிணக்காடு நிரவும்
மன்னிப்பெனும் சமரசமொழியே சமாதானத்தின் வாயிலை திறக்கும்
யாது குற்றமும் இவனிடம்யான் கண்டிடவில்லையென
ஏதும்பிழை தம்மீது வீழாத வண்ணம்
தோதுவாய் தீர்ப்பை மக்களிடம் ஒப்படைத்தான் பிலாத்து
தீதான பரபாசை விடுவித்தது மக்கள்மன்றம்
தேதுவாய் பூதலபாவத
புதியதொரு வீீணை செய்ய
எங்கே உள்ளது மரங்கள்
வெந்து தனிந்ததே காடு
நண்பர்கள் (342)

ஆசத்தியபிரபு
கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

கேசவன் புருசோத்தமன்
இராமநாதபுரம்

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

GOPI.M
Tirupattur
