ஆசத்தியபிரபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆசத்தியபிரபு |
இடம் | : கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச |
பிறந்த தேதி | : 29-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 211 |
புள்ளி | : 24 |
உந்தன் சிறகொன்றில்
பறந்து திரி
சுதந்திரம் என்ற சொல்லை
உன்னில் காண்...
உன்னைக் காண
தண்ணீரும்
சண்டையிடுகிறது
ஒன்றுக் கொன்று முந்தி
நுரைத்தபடி...
நீயற்ற இரவுகள்
எனக்கு செம
போரு பா...
வா சண்டையிடலாம்
சிறிது நேரம்...
தேன்சிட்டின் குடில்கள் தொங்கிக் கொண்டிருந்தது
அந்த மின்வேலிக் கம்பிகளில்.
உள்நுழைந்த படியும் வெளியே பறந்தபடியும்
சிட்டுக்கள் சிலிர்த்துப் பறந்தன...
யாதொரு தீண்டலுமின்றி அதன் குடில்கள்
இன்றும் அங்கேயேதான் தொங்குகிறது.
அதில் வாழ சிட்டுகள் தான் இல்லை
மெல்லலைகள் மென்றுவிட்டன அதனுயிரை
மனிதனின் சுவைக்காய்...
தவமிருந்து பெற்றேன்
உன்னை மகனே
பல வாய் கேலிக்கு பிறகு
உன்னை கண்டெடுத்தேன்
இன்னல்கள் பல கடந்து
எனக்கு கிடைத்திட்ட
வரம் நீ மகனே!!!!!
என் சிறு இன்னல்
பாகற்காய் போல் மாறியதோ
என் செல்ல மகனே!!!!!
பேர் சொல்ல வைப்பாய்
ஆசைப்பட்டேன்
ஆனால்
அனாதையாய் போக
முதியோர் இல்ல வாசலில்
என் பெயர் சொல்லுவாய் - என்று
தெரியாமல் போனது
என் அன்பு மகனே!!!!!
என் கையொப்பம் அழகோ
சோதிக்கிறாயோ ???
முதியவர் இல்ல பதிவில்
கையொப்பம் இட சொல்லி.......
முதுமை வாசலில் இருப்பது
என் தவறல்ல - மகனே
ஓடாய் போனதெல்லாம்
உனக்காகத்தான்
நியாபகம் வரவில்லையோ!!!!!!!
என் முக சுருக்கம்
உன் வீட்டின
இத்தனை கோடி இளைஞர்கள் கூடி
எதனை படைத்தோம் இத்தனை நாளாய்
உணவு படைக்கும் இப்பெரும் பரப்பில்
கழிவினை திறந்து காணிக்கை இட்டோம்
எப்படி வளர்ந்தது இப்பெரும் மாற்றம்
எதற்கு தயார் இப்பெரும் கூட்டம்
காக்கை குருவிக்கும் காவல் போட்டோம்
இப்பெரும் பரப்பிற்கு எக்காவல் அமைத்தோம்
நாசம் கொண்ட நஞ்சுரு தீவாய்
உருபெற்று வருதே இன்றைய நாடு
வறுமையின் காரணம் எவரிங்கு அறிந்தார்
விளைநிலம் அழிதலில் பெரும்பங்கு உண்டு
மழையின் மாற்றத்தை யாரிங்கு செய்தார்
கொடுமையிலும் கொடுமை இப்பெரும் ஆட்டம்
யார்தான் வந்து நல்வழி செய்வார்
எழுந்திரு இளைஞா இது உனதுபொறுப்பு.
அன்னைபோல் எம்மீது
அக்கறைக் கொண்டாய் ,
தந்தைபோல் எமக்கு
தைரியம் தந்தாய்,
குருவாய் கொஞ்சம்
கோபமும் கொண்டாய்
கொண்ட கோபம் அனைத்திலும்
அன்பையே ஆதாரமாய் வைத்தாய் !
நாங்கள் மலர்களாய்
விண்தொட்டோம்
நீ வேறாய்
மண்புதைந்ததால் !
நாங்கள் கல்வி
முத்தேடுத்தோம்
நீ களைப்பின்றி
மூச்சடகியதால் !
கணிதத்தின் கடினத்தை
உம் கரம் பற்றியே
நாங்கள் கடந்தோம்
வானளவு உயர்ந்தாலும்
வாகை பல சூடினாலும்
யாம் கர்வம் கொள்வதென்னவோ??
உம் மாணவர் என்பதில் மட்டுமே …
எங்கள் கனவுசிற்பம்
உறுபெற
நீயே உளியாய்
உடன் வந்தாய்
உளி தந்த வலி
ஒளிக்கான வழி
ஏதோவொரு
மழைக்காலத்தில்
என் காதலுக்கு நீ கண்ணசைத்த
கணத்தில் உன் கன்னத்தோடு
நான் சேர்த்த சத்தம் !
நம் காதல் கடிதம்
கல்யாண முகவரியையடைய
உன் வீட்டார் ஒப்புக்கொள்ள
ஓடிவந்து எந்தன்
உச்சியோடு நீ பதித்த சத்தம் !
உன் கரம்
பற்றிய முதற்பகுதியில்
காதலோடு குறைவாக
களவோடு மிகுதியாக
சிலபல கட்டவிழ்த்த சத்தங்கள் !
ஓர் உயிர்கவி சொன்ன
உன் மயங்கிய விழியோடு
எனைப் பெற்றவளின்
பெருந்துயர் உற்றவனாய்
நான் இட்ட சத்தம் !
நாட்கள் நகர
நரைமயிர் வளர
எப்போதாவது
எனை எட்டிப்பார்த்தன
உன் இதழ் சத்தங்கள் !
மரணத்திற்கு
ந
தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .
மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .
துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.
காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .
மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைக
கற்றவை பற்றவை
கண்கள் காணோம்
விண்கள் காண
மண்ணும் இல்லை
மனிதனும் இல்லை
என்னை மதிக்க.
காற்று வழிகாட்ட
கை மிதக்க
ஒலி சொன்னது
வழி இதுவென்று.
நெருப்பு எதுவோ
கருப்பு எதுவோ
காணாத கனவுகள்
எது எதுவோ.
கை உண்டு
கால் உண்டு
உடல் உண்டு
உயிர் உண்டு
உணர்வு சொல்லும்
இதன் உருவமெல்லாம்.
பணம் தொட்டு
மதிப்பு அறிந்தேன்
கனவோடு வாழ்தவனை
கால் குழியில்
விழ செய்து
கட்டெறும்பு மண்மூட
காப்பாற்ற எவனுமில்லை
கண் மூடாமல்
பார்த்தே சாகிறேன்
உலக விடியல்
எப்ப வென்று..
ஆ.சத்தியபிரபு.
சானை பிடித்த மூளையால்
சந்திரனை தொட்டோம்
வாலை தீட்டி ஓலையனுப்பி
கோளை செய்தோம்
கண் கண்ட நிலவில்
கையழைக்கும் ஒருவர்
புவி மட்டும் போதாது
புதனிலும் வசிப்போம்
எட்டடியும் கேட்கா குறலை
விண் வரை அனுப்பி
வேரொரு மண்ணிலும் கேட்டோம்
பச்சை கட்டையும் மிதக்கா நீரில்
இரும்பு வண்டி ஓடுது
இலையும் கூட நிற்கா காற்றில்
இயந்திர வண்டி பறக்குது
நம் தந்திரத்தால் பெற்ற இயந்திரங்கள்
எத்தனை எத்தனை
பொறியாலனே இன்னும் தீட்டு மூளையை
தொடா கோளையும் தொட்டுவிடலாம்
அறியா இயந்திரத்தையும் அறிந்து விடலாம்
இனி வரும் காலங்களில்.
அகநானூற்றுப் பாடல்களின் அமுதம் சுவைக்க இயன்றவர் இந்நாளில் தமிழறிஞர்களை தவிர்த்து மிகச்சிலரே. பரபரக்கும் இயந்திர வாழ்வில், வாசிப்பில் எளிதில் புரிந்துவிட இயலாத சங்க இலக்கியங்களின் சுவை காண முடியாமல் ஏங்கித் தவிக்கும் தவிப்பில்.., தாகம் தணிக்க காதல் கவிதைகளை / அகத்துறை பாடல்களை இனிய குறள்களில் தந்து முதல் ஆசானாக விளங்குபவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர்தான். அறம், பொருட் பால்களில் ஒட்டுமொத்த உலக நீதியை உள்ளடக்கித் தந்த வள்ளுவர் காமத்துப்பாலில் இன்ப ரசமாக சொட்டிய யுகம் கடந்த புதுக்கவிஞன் .
"பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாயெயி றூறிய நீர் "
என்ற வள்ளுவனின் காதல் ரச