சுற்றும் உலகமும் சுழற்றும் மனிதனும்

தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .

மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .

துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.

காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .

மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைகள் கழுவி
புண்ணியம் என்கின்ற வாழ்க்கை இது .

எழுதியவர் : கயல்விழி (2-Jul-15, 5:51 am)
பார்வை : 168

மேலே