கற்றவை பற்றவை
கற்றவை பற்றவை
கண்கள் காணோம்
விண்கள் காண
மண்ணும் இல்லை
மனிதனும் இல்லை
என்னை மதிக்க.
காற்று வழிகாட்ட
கை மிதக்க
ஒலி சொன்னது
வழி இதுவென்று.
நெருப்பு எதுவோ
கருப்பு எதுவோ
காணாத கனவுகள்
எது எதுவோ.
கை உண்டு
கால் உண்டு
உடல் உண்டு
உயிர் உண்டு
உணர்வு சொல்லும்
இதன் உருவமெல்லாம்.
பணம் தொட்டு
மதிப்பு அறிந்தேன்
கனவோடு வாழ்தவனை
கால் குழியில்
விழ செய்து
கட்டெறும்பு மண்மூட
காப்பாற்ற எவனுமில்லை
கண் மூடாமல்
பார்த்தே சாகிறேன்
உலக விடியல்
எப்ப வென்று..
ஆ.சத்தியபிரபு.