பகவதி லட்சுமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பகவதி லட்சுமி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  29-Jan-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2015
பார்த்தவர்கள்:  1235
புள்ளி:  219

என்னைப் பற்றி...

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..!! --இவ்வரியை அனைவருக்கும் உணர்த்த முயற்சிப்பவள்..!!

என் படைப்புகள்
பகவதி லட்சுமி செய்திகள்
பகவதி லட்சுமி - பகவதி லட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2023 10:25 pm

மதியில் ஓர் மதி


முழுமதி தன்னை.. நிழற்மதி மறைக்க..!!
எழிற்மதி எண்ணம்..
இடர் மதி தருமாம்..!!

கடற்மதி காற்றாய்..
வான்மதி மகளாய்..
நிலமதி நாட்கள்..
நிறைமதி நிரம்ப..!!

சுடர் மதி நானும்..
படர் மதி படரும்..
தளிர் மதி தருணம்‌..
என் மலர்மதி மகிழ..!!

சிலர் மதி மயங்க..
பலர் மதி வியங்க..
கவிமதி தன்னை..
புவிமதி சேர்த்தேன்..!!

மகிழ்மதி வாழ்க்கை..
புகழ்மதி பூக்க..
கலைமதி களிப்பு.. நிலைமதி கொள்ள..
என் மதி உன்னில் நிம்மதி நிலைக்க..
கண்மதி கடவுள்
என்றும் உன் மதி நிற்க பிரார்த்திக்கிறேன்..

இங்ஙனம்
என் குணமதிக்கு..
உன் இனைமதி😘

மேலும்

பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2023 10:25 pm

மதியில் ஓர் மதி


முழுமதி தன்னை.. நிழற்மதி மறைக்க..!!
எழிற்மதி எண்ணம்..
இடர் மதி தருமாம்..!!

கடற்மதி காற்றாய்..
வான்மதி மகளாய்..
நிலமதி நாட்கள்..
நிறைமதி நிரம்ப..!!

சுடர் மதி நானும்..
படர் மதி படரும்..
தளிர் மதி தருணம்‌..
என் மலர்மதி மகிழ..!!

சிலர் மதி மயங்க..
பலர் மதி வியங்க..
கவிமதி தன்னை..
புவிமதி சேர்த்தேன்..!!

மகிழ்மதி வாழ்க்கை..
புகழ்மதி பூக்க..
கலைமதி களிப்பு.. நிலைமதி கொள்ள..
என் மதி உன்னில் நிம்மதி நிலைக்க..
கண்மதி கடவுள்
என்றும் உன் மதி நிற்க பிரார்த்திக்கிறேன்..

இங்ஙனம்
என் குணமதிக்கு..
உன் இனைமதி😘

மேலும்

பகவதி லட்சுமி - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2020 9:47 pm

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
பருகுநீர் சேரின் என்னாம்
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
படிகமணி கோக்கின்என்னாம்

மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை
மேடமது சேரின்என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
வெண்கல் அழுத்தின்என்னாம்

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
வளைகிழவர் சேரின்என்னாம்
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
வருகயவர் சேரின்என்னாம்

மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
வள்ளிக்கு வாய்த்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 98

-

மேலும்

அருமையான பதிவு 27-Sep-2020 12:25 am
பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2019 7:07 pm

இன்று மிக்க மகிழ்ச்சியுடன்
நான்காம் முறை தரிசனம் செய்தேன்‌..!!

என் உள்ளம் கவர்ந்த
கள்ளமற்ற நல்ல உள்ளங்களுடன்..!!!

கருமேனி பெரும் ஆள் அவர்..!!
கடைக்கண்கள் அருந்தேன்...!!
மலர் கமழ் செவ்வாய்
எழில் கொஞ்சும் புன்னகை..!!
சங்கு சக்கர தடக்கையன்..!!
திமிர் திறளும் திடத்தோளன்..!!
பச்சை பட்டழகன்..!!
பதக்கை மொட்டழகன்..!!
தாமரைத் திருவடிகள்..!!
செல்ல புன்னகை
நல்ல தரிசனம்..!!

மனம் குளிர தரிசனம் செய்தேன்‌..!!

மிக்க நன்றி என் ஆசிரியை அவர்களுக்கு..!!
💚🙏சுனந்தா பிரேம்குமார்💚🙏

ஒன்று மட்டும் புரிந்தது..!!
குரு அருள் இல்லையேல்
திருவருள் இல்லை..!!

குருவின் வழிகாட்டல் மட்டுமே
உன்னை தெய்வத்திடம் நெ

மேலும்

பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2019 1:22 am

சீதாதேவி கரோடியா..

நான் பார்த்து பார்த்து ரசித்த புனித பூமி இது..!!

தேவதைகள் போல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் ஆசிரியைகள்..!!!

விழா விருந்தினர் அனைவரும்..
அதிர்ஷ்ட லஷ்மிகள் அறுவத்திமூவர் என மனம் நெகிழ பாராட்டும் பாக்கியம் பெற்ற கோவில் அது..!!!

கல்லூரி தொடங்கி
இன்று வேலைசெய்யும் அலுவலகம் வரை தோள் உயர்த்தி உள்ளத்தில் பெரும் அன்புடன் சொல்வேன்
நான் சீதாதேவி கரோடியா மாணவி என..!!

அத்தனை பிரியம் என் பள்ளியின் மேல்..!!

வீட்டின் கஷ்டங்களை மறக்க தாய் மடி தந்து தலை வருடிய இடம் அது..!!

ஒவ்வொரு ஆசிரியரிடமும்
ஒன்றொன்று பிடிக்கும் எனக்கு..!!!

கற்றுக்கொள்ளவும்

மேலும்

பகவதி லட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2019 8:56 am

இரண்டாம் முறை தரிசனம் செய்தேன்‌ இன்று..!!

பெற்றோர்களுடன்..!!


என்னதான் சிறப்பு தரிசனம் என பெயரிட்டாலும் அதே நேரம் அதே தூரம் நின்றுதான் ஆக வேண்டும்..!!

பெரியோர்கள் திடமுடன் நிற்க வேண்டும் என பிரார்த்தித்தபடி நான்..!!
(சம்சாரம் யாரைவிட்டது..?)

பக்தியில்லை
பயம் தான் இருந்தது..!!
பதட்டம் இருந்தது..!!
இவர்களை எண்ணி..!!

வரிசை பிரிந்தது..!!
எங்கு இருப்பார்களோ என்ற கவலையுடன் நகர்ந்தேன்..!! கூட்டத்தில் ஒருத்தர் கைப்பிடித்து இழுத்தார்..!
அவர்களுக்கு பின் அம்மா அப்பா..!!
தரிசனம் செய்யும் இரு நிமிடம் முன் சேர்த்து கொண்டோம்..!!

நிம்மதியுடன் பெருமாளை நெருங்கினேன்..!!

கொ

மேலும்

தரிசனம் இனிமையான பதிவு இறை தரிசனம் கூட இக்காலங்களில் இருக்கத்துடன்தான் செய்ய வேண்டியிருக்கிறது. திருச்சுற்று சுற்றி வந்தால் பலனுண்டு தரிசனம் செய்த பின்பு திருமுன்பு சென்று நின்று தரிப்பதற்கே எத்தனை சுற்று சுற்ற வேண்டியிருக்கிறது வரிசையில் கட்டணமோ கட்டணமின்றியோ இதுவும் பலன் தரும் ! பகிர்கிறேன் 11-Jul-2019 9:52 am
பகவதி லட்சுமி - பகவதி லட்சுமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 3:16 pm

அடிக்கடி கடந்தகால கீறல்கள் விடாமல் சண்டையிடுகிறது.. கோபம் என்னை அழிக்கிறது.. பாசம் வைத்திருந்தவள் ஏசி விட்டாரே என.. பேசவேண்டும் என்று தோன்றுகிறது.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் மறக்கவில்லை.. அவை பேசவேண்டாம் என்று தடுக்கிறது..!!! என் செய்வேன் இந்நிலையில்..!!

மேலும்

ஆழம் இல்லாததால் தான் இந்த கேள்வியே என் யோசிக்க வைத்தீர்கள்.. நன்றி 09-Jul-2018 8:17 am
அறிந்தோ அறியாமலோ பேசி விடுவோம். ஆனால் பேசிய பின்னர் கவலைப்படுவோம்.. உண்மை.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:16 am
நல்ல அறிவுரை.. நிச்சயம் செய்கிறேன்.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:15 am
கோபம் மிகவும் மோசமான குணங்களில் ஒன்று. தீய குணங்கள் அதிகம் தீமையைத் தான் தரும் என நாம் அறிந்ததால் தான் இக்கேள்வியே எழுந்துள்ளது. மனைவி மீது கோபம் வந்தால் அங்கே அவளை காதலியாக எண்ணிப்பாருங்கள்.கோபம் மறையும்.மகன்மீது கோபம் வந்தால் அவனை நம் தந்தையாகவும்..மகள் மீது கோபம் வந்தால் தாயாகவும் மானசீகமாக எண்ணுங்கள்.கோபமும் பாசமாகும்.நேசமாகி இன்பம் பெருகக் காரணமாகும். புலவர் களந்தை மணியன்.. சிறுமுகை 08-Jul-2018 7:31 am
பகவதி லட்சுமி - smart sowmya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 7:37 am

வகுப்பரை கேள்விகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

மேலும்

இருபதை நெருங்கும் பெண்ணின் ...இதயம் தனக்கோ பிறர்க்கோ வருகிற தடையை எதிர்கொளும் ....வழிவகை கேட்டால், பதில்மொழி தருவது மூத்தவர் கடமை .....தப்பித்தல் குறித்து அறியக் கருதும் பொழுது குட்டு ....கொடுத்தல் தானே முறைமை, .... 09-Jul-2018 12:02 pm
நான் மெல்லிய நகைச்சுவையுடன் சொன்னேன் .அவ்வளவுதான் . இவர் இளையவதினர் . படிக்கும் மாணவியாய் இருக்கலாம் . ஆசிரியர் நம்மிடம் கேள்வி கேட்டுவிடக் கூடாதே என்ற பயம் நம்மில் பலருக்கும் உண்டு கவி smarto என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் . சொன்னால் எனது அனுபவத்தைப் பகிருவேன் 09-Jul-2018 7:49 am
கட்டித் தங்கம் நிகர்த்த ......காலம் விரயம் ஆகிட வெட்டிக் கேள்வி எழுப்பும் ......வீணர் தலையில் பலமாய்க் குட்டு வைத்தது போலக் ......கொடுத்த கருத்து.கைகளைத் தட்டி மகிழும் வண்ணம் .....தந்தது எனக்குள் வேகமே, 08-Jul-2018 11:34 pm
நீங்கள் கேட்க வருவது வகுப்பறையா(classroom) அல்லது வகுப்பரை(classhalf)... வகுப்பறை கேள்விகளுக்கு பதிலளிக்க தன்னம்பிக்கை போதுமானது... வகுப்பரை(பாதி) கேள்விகள் கேட்போரையும், பதில் அளிப்போரையும் முட்டளாக்குகிறது... 06-Jul-2018 1:10 am

உயர்வாய் எண்ணி இருந்தேன் உனை பற்றி
மறைமுகம் கண்டேன் உடைந்து போனேன்...

இதுவரையில் நன்மை இல்லை உன்னால்
இருந்தும் விலக இயலவில்லை என்னால்...

நன்மைகளை மறந்தாய்
மனம் நோக வைத்தாய் - புரிதல்
வந்தது எனக்கும் – அன்பை
தேவை இன்றி கொடுக்காதே
தேவைக்கு மறுக்காதே...

உறவுகள் தொடர்கதை என்பது பழமொழி
உறவுகள் விடுகதை என்பது என் மொழி

அன்பை எதிர்பார்த்தேன்
அனுபவம் கிடைத்தது--- நன்றி....

மேலும்

உங்கள் பாராட்டுக்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
என் முயற்சிக்கு உங்கள் கருத்தை தந்ததற்கு நன்றி... 27-Sep-2017 10:56 pm
உங்கள் கருத்துக்கு நன்றி .... 27-Sep-2017 10:54 pm
வாழ்க்கை என்றால் என்னவென்று ஒவ்வொரு இதயத்திற்கும் அனுபமாய் காலம் கற்றுக் கொடுத்து விட்டுப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 6:24 pm
பகவதி லட்சுமி - தமணிவண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 12:37 am

படைத்தவன் கூட மிரண்டு போவான் என் பார்வையில் பட்ட ,
அவள் அழகை கண்ட போது .....!!!
நிலவோடு ஒப்பிட்டேன் அவள் நிழலுக்கு ஈடில்லை....
கனவோடு வருகின்றாள் என் கற்பனைக்கு அளவில்லை.....
பூக்களின் பிறப்பிடம்,புது வித மலர் அவள் ....
பூமியில் தோன்றினால் இங்கு பூகம்பம் தோன்றுமே....
கலியுக கன்னியில் இவள் கால் அளவு இல்லையே.....
சிலை என நினைக்கவே என் சிந்தையும் மறுக்குதே....
என் ஒரு மனம் பேசிடும் புது வித கவிதையே ....
மனதுக்குள் ஆயிரம் மாற்றங்கள் தோன்றுதே....
கலை அழகு நீயுமென்,கண்முன்னே தோண்றடி.....!!!!!!பேரழகே .....!!!

மேலும்

அழகியல் காதல் கவிதை கற்பனையும் & அழகு ஓவியமும் போற்றுதற்குரியவை பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 25-Nov-2016 4:42 pm
அழகின் அழகு! வாழ்த்துக்கள் .... 07-Jul-2016 3:31 pm
அழகின் தேசம் அவள் என்றும் காதல் வயப்பட்ட மனமும் ஏற்றுக் கொள்ளும் 07-Jul-2016 7:02 am
பகவதி லட்சுமி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 10:00 pm

உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!

எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!

கே இனியவன்

மேலும்

மரணத்தை கூட காதல் நேசமாய் ஏற்றுக் கொள்கிறது 08-Jul-2016 11:43 am
மிக்க நன்றி 07-Jul-2016 10:24 pm
Arumai 07-Jul-2016 10:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே