kokila makan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kokila makan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Nov-2017
பார்த்தவர்கள்:  317
புள்ளி:  53

என் படைப்புகள்
kokila makan செய்திகள்
kokila makan - kokila makan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2018 11:14 am

எதிரே இருக்கும் வீட்டுக்குள்
....எப்படி வந்தது தங்கச்சிலை ?
புதிரின் விளக்கம் பிறகறிந்தேன்
.....பார்த்தது குமரி நின்றநிலை


இருசெவி கேட்கும் ஒலியெல்லாம்
.....இசையாய் இன்று மாறியதேன் ?
கருமுகிற் குழலி இன்மொழிகள்
....காலையில் என்னிடம் கூறியதால்.

செய்யும் செயல்கள் அனைத்திலுமே
.....சிறப்பு இன்று கூடியதேன் ?
மைவிழிப் பாவையின் பார்வையாம்
....மாலையைக் காலையில் சூடியதால்.


எதையும் வெல்ல முடியுமென்னும்
....எண்ணம் வந்தது எப்பொழுது ?
இதழின் ஓரப் புன்னகையால்
....இதயம் அவள்தொட்ட அப்பொழுது

மேலும்

நன்றி நண்பரே 07-Feb-2019 7:01 pm
மிகவும் அருமை... 07-Feb-2019 1:49 pm
kokila makan - Yuvaraj அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2018 12:41 pm

"கவினாள்" இதற்கு சரியான பெயர் விளக்கம் வேண்டும்

மேலும்

கவின் என்றால் அழகு என்று பொருள் . ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது "" மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும், நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலரும், கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே". குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் . குறிப்பு கீழே உள்ள பதிவில் முதல் வரி இடம் மாறி விட்டது, அதை சரி செய்ய முடியவில்லை. அதை நீக்கப்பட்ட பதிவாகக் கருதவும் 22-Aug-2018 11:16 pm
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை கவின் என்றால் அழகு என்று பொருள் . ஐங்குறுநூறு , 94 ம் பாட்டு கீழே உள்ளது "மகளிர் அன்ன துணையோடு வதியும், நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலரும், கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே". குழல் உடையவள் குழலாள் , விழி கொண்டவள் விழியாள் என்பது போல கவின் ( அழகு) கொண்டவள் கவினாள் . 22-Aug-2018 11:01 pm
கவின் +அள் = கவினள் -----அழகியவள் என்று பொருள் தரும். அன் ஆணுக்கும் அள் பெண்ணுக்கும் விகுதிகள் கவினாள் என்று சொன்னாலும் தவறில்லை . ஆள் பெண்பால் விகுதி எப்படி ஆகும் சகோ.மோகா? RMS சொல்லியிருப்பதும் மிகவும் சரியே ! கவினளுக்கு இன்று கவிதை நாள் கவின் கவிதைகளுக்கு ரசிகை ஆனாள் ! (PUN INDENTED ----இருபொருள் விரும்பியே ) 21-Aug-2018 9:11 am
கவினாள்- கவின்+ஆள். கவின் என்றால் அழகு, ஆள் - பெண்பால் விகுதி கவினாள் என்றால் அழகு பெண். 21-Aug-2018 3:38 am
kokila makan - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2018 11:57 am

சரியான வாழ்க்கை துணையை எவ்வாறு தேர்ந்து எடுப்பது ?

மேலும்

சரியான வாழ்க்கைத் துணையாக எவ்வாறு நான் அமைவது என்ற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடியுங்கள் .அந்தப் பதிலில் சொல்லப்படும் தகுதியில் குறைந்தது 70 % உங்களிடம் அமையும் வகையில் உங்களைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு வாழ்க்கைத்துணையைத் தேடுங்கள் .சரியான வாழ்க்கைத் துணையை உங்களால் அடையாளம் காண முடியும்.( அவரே உங்களுக்குக் கிடைப்பாரா என்பது வேறு விஷயம். அதை முடிவு செய்யும் காரணிகள் வேறு ) அடையாளம் காண்பதற்கு மட்டுமே இந்த ஆலோசனை . 12-Jul-2018 8:23 am
காதல் திருமணமோ பெற்றோர் நிச்சயித்த திருமணமோ, ஒன்றை நினைவில் கொள்ளல் நலம். கணவன் மனைவி இருவரும் தங்கள் தனிமனித வாழ்வில் நல்லவர்களாகவே இருந்திருப்பர். ஆனால் முற்றிலும் வேறொரு வாழ்க்கை வாழ்ந்த இரு மனங்கள் இணையும் போது நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அன்பு ஒன்றே அதை வெல்லும். 06-Jul-2018 6:07 pm
நிலவே வாழ்க்கை என்பது வாதங்களின் மேடை, குழப்பத்தின் குடிசை, அதில் வாழ்ந்து கழித்தவர்ள் நம் பெற்றோர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் 06-Jul-2018 4:37 pm
"நான்" என்னும் உச்சகட்ட எதிர்பார்ப்பை தவிருங்கள்... கற்பனைகளை விலக்கி, எதார்த்தத்துக்கு இடம்கொடுங்கள்... உணர்வுகள் அனைத்து மனிதர்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... "நாம்" என்னும் வாழ்க்கை நலமாக அமையும்... வாழ்த்துக்கள்... 06-Jul-2018 1:21 am
kokila makan - smart sowmya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 7:37 am

வகுப்பரை கேள்விகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

மேலும்

இருபதை நெருங்கும் பெண்ணின் ...இதயம் தனக்கோ பிறர்க்கோ வருகிற தடையை எதிர்கொளும் ....வழிவகை கேட்டால், பதில்மொழி தருவது மூத்தவர் கடமை .....தப்பித்தல் குறித்து அறியக் கருதும் பொழுது குட்டு ....கொடுத்தல் தானே முறைமை, .... 09-Jul-2018 12:02 pm
நான் மெல்லிய நகைச்சுவையுடன் சொன்னேன் .அவ்வளவுதான் . இவர் இளையவதினர் . படிக்கும் மாணவியாய் இருக்கலாம் . ஆசிரியர் நம்மிடம் கேள்வி கேட்டுவிடக் கூடாதே என்ற பயம் நம்மில் பலருக்கும் உண்டு கவி smarto என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் . சொன்னால் எனது அனுபவத்தைப் பகிருவேன் 09-Jul-2018 7:49 am
கட்டித் தங்கம் நிகர்த்த ......காலம் விரயம் ஆகிட வெட்டிக் கேள்வி எழுப்பும் ......வீணர் தலையில் பலமாய்க் குட்டு வைத்தது போலக் ......கொடுத்த கருத்து.கைகளைத் தட்டி மகிழும் வண்ணம் .....தந்தது எனக்குள் வேகமே, 08-Jul-2018 11:34 pm
நீங்கள் கேட்க வருவது வகுப்பறையா(classroom) அல்லது வகுப்பரை(classhalf)... வகுப்பறை கேள்விகளுக்கு பதிலளிக்க தன்னம்பிக்கை போதுமானது... வகுப்பரை(பாதி) கேள்விகள் கேட்போரையும், பதில் அளிப்போரையும் முட்டளாக்குகிறது... 06-Jul-2018 1:10 am
kokila makan - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Apr-2018 10:01 am

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது சரியா? கொண்டாடியிருக்க வேண்டியது தமிழ்ப் புத்தாண்டு அல்லவா?

மேலும்

kokila makan - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Apr-2018 12:06 pm

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை "

இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால்
இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர் தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமோ என்று ஒரு ஐயம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் இந்த உறுத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அந்த உறுத்தலைப் போக்கிக் கொள்ள எனக்கு நானே சில சமாதானங்களைச் சொல்லிக் கொண்டேன்.


சமாதானம் 1
------------------------
அந்தக் கால கட

மேலும்

நன்றி நண்பரே 02-Apr-2018 4:29 pm
நீங்களே சரியாக இரண்டு சமாதானம் சொல்லி விட்டீர்கள். "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் -----அப்படியா ? ஈன் --சான் எதுகைக்குப் போதுமானது .ஆயினும் றோர் இன்னும் ஓசை இனிமை தரும் என்பது உங்கள் எண்ணம் . சொல்லிலும் பொருள் முக்கியமன்றோ ! ஈன்றாள் இலக்கியச் சொல் . வழக்கில் அதன் பொருள் பிரசவித்தவள் . யார் பிரசவிக்க முடியும் ,யார் பாலூட்ட முடியும் ? தாய் ! பிறந்த உடனேயே பாலூட்டி உன் வயிற்றுப்பசி ஆற்றிய தாய் பசியால் வாடினும் தீமையைச் செய்யாதே . பெற்றோர் பொதுச் சொல் . 02-Apr-2018 3:53 pm
kokila makan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2018 10:26 am

காது கிழிபடும் ஒலியுடன் கத்தி வெட்டுகிறது.
கனிவிட்டுச் சாறு சொட்டுகிறது.
இடிமின்னலுடன் மழை கொட்டுகிறது.

உறுமிக்கொண்டு நரசிங்கம் நகங்களால் இரணியன்
உடலைக் கிழித்திட உதிரம் வழிகிறது.
இடிமின்னலுடன் மழை பொழிகிறது.

கசையடிகள் வாங்கிக் கதறும் கார்மேகத்தின்
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன..
இடி,மின்னல், மழை, நிகழ்வுகள் நடக்கின்றன.


விளக்கம்

1 . கத்தி--------------------------மின்னல்
வெட்டும் ஒலி-----------இடி
சாறு --------------------------மழை
கனி ---------------------------மேகம்

2 .நகம் --------------------------மின்னல்
உறுமும் ஒலி ----------இ

மேலும்

நன்றி நண்பரே 23-Mar-2018 7:09 pm
படைப்பு அருமை.............. தகவலுக்கு நன்றி நட்பே ...... 23-Mar-2018 3:12 pm
kokila makan - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Mar-2018 7:51 pm

அற்புதமான எழுத்தாளரான கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் பலமுறை
நான் படித்திருக்கிறேன் .வியந்திருக்கிறேன் .

அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்,பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில், முப்பதாம் அத்தியாயத்தில் வந்தியத்தேவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் நடக்கும் துவந்த யுத்தத்தை விவரிக்கையில் ஒரு சிறிய தவறு செய்திருக்கிறார் .

" கடோத்கஜனும் இடும்பனும் சண்டை போடுவது போல் போட்டார்கள் "" என்று எழுதியிருக்கிறார் .

கடோத்கஜன் , இடும்பனின் சகோதரி மகன்.
பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த போரில் , இடும்பன் பீமனால் கொல்லப்படுகையில்
தனது சகோதரியை மணம் செய்து கொள்ளுமாறு இடும்பன் பீமனை வேண்ட , அதன் படி

மேலும்

நன்றி நண்பரே. கல்கி அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பது பிரச்சினை அல்ல. கல்கி அவர்களின் பரம ரசிகன் நான். அச்சில் வந்த கருத்து சரியா தவறா என்பது தான் கேள்வி. நமக்கு நூறு சதவீதம் சரியாகத் தெரிந்த சில கருத்துக்கள் கூட , அவைகள் நம்மால் எழுதப்படும்பொழுது , சந்தர்ப்ப சூழ்நிலைகளால் , எழுதப்படும்பொழுது ஏற்படும் எதிர்பாராத இடைஞ்சல்களால் , எழுதியதைச் சரிபார்ப்பதற்கு நேரமின்மையால் , பிழையான கருத்துக்களாக மாறுவது உண்டு. இதுவும் அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதால் தான் நானே வழுவமைதி என்ற சமாதானத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன் . இது எந்த விதத்திலும் கல்கியின் திறமையையோ அறிவாற்றலையோ குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. இது ஒரு அலசல் . அவ்வளவே. அடுத்தபடியாக இரண்டு ராட்சதர்கள் சண்டை போட்டுக்கொள்ளுவதைப் போல் இருந்தது என்ற அர்த்தத்தில் தான் கல்கி அவர்கள் அப்படி குறிப்பிட்டுள்ளார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஏற்கத் தக்கதாக இல்லை.இது உங்கள் அனுமானம் .அவ்வளவே. கல்கி அவர்களால் சொல்லப்படும் கருத்து, சமமான திறமை கொண்ட இரண்டு மல்யுத்த வீரர்கள் மோதிக் கொண்டார்கள் என்பதே. இதில் இராட்சசர்களைத் தான் உவமை சொல்ல வேண்டும் என்ற அவசியம் என்ன? பீமனுக்குச் சமமான திறமை மல்யுத்தத்தில் கொண்டவர்களாக மகாபாரதத்தில் சொல்லப்படும் ஜராசந்தன், கீசகன் , இடும்பன் ஆகியவர்களோடு பீமன் மல்யுத்தம் புரிந்ததாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பீமனும் ஜராசந்தனும் ,போல , பீமனும் இடும்பனும் போல , பீமனும் கீசகனும் போல என்றெல்லாம் சொல்லியிருக்கலாமே. இன்னொன்றும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . மகாபாரதத்தில் , மல்யுத்த மகாபராக்கிரமசாலிகள் என்று குறிப்பிடப்படுபவர்களில் இடும்பனும் ஒருவன். கடோத்கஜனின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. அதனால் கல்கி அவர்கள் , கடோத்கஜனும் இடும்பனும், மல்யுத்தத் திறமையில் சமமானவர்கள் என்று நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார். 18-Mar-2018 8:01 pm
கடோத்கஜனும் இடும்பனும் போல் சண்டை போட்டார்கள் என்பது முன்னே கடோதகஜனும் இடும்பனும் சண்டை போட்டார்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை. பொன்னியின் செல்வனுக்கும் வந்தியத்தேவனுக்கும் நடந்த யுத்தத்தில் இரண்டு ராட்சதர்கள் சண்டை போட்டு கொள்வதை போல் இருந்தது என்ற அர்த்தத்தில்தான் கல்கி அவர்கள் அப்படி குறிப்பிட்டுள்ளார்கள் . இடும்பன் இறந்த பிறகு கடோத்கஜன் பிறந்த கதை கல்கிக்கு தெரியாது என்பது பெரும் அபத்தம். 18-Mar-2018 5:39 pm
நன்றி நண்பரே 17-Mar-2018 10:28 pm
இதற்கு சமாதானம் எதற்கு ? கல்கியின் தவறைச் சுட்டிக் காட்டிவிட்டு அணி இலக்கணத்தின் அமைதி நாடுவதேனோ ? உரைநடை புதினத்திற்கு காவியத்தின் அணி இலக்கணமா ? பிறிதெந்தச் சமாதானமும் இல்லை எனக்கு மனதில் எழுவது நக்கீரனின் இலக்கணம்தான் . குற்றம் குற்றமே ! தவறு தவறே ! ஹோமருக்கும் தவறு வரும் என்பார்கள் . கல்கிக்கு வரக்கூடாதா ? 17-Mar-2018 9:39 pm
kokila makan - kokila makan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2017 5:21 pm

நிலவும் கவிஞனும்

நிலவைப் பற்றிக் கவிதை பாடென
நெஞ்சில் நிறைந்தவள் கேட்டாள்.
நிலவைப் பாடாத கவிஞனே இல்லை
நிலத்தில் என்பதாலா என்று கேட்டேன்.
நிலவைப் பாடாதவன் கவிஞனே இல்லை
என்பதால் கேட்டேன் என்றாள்.

மேலும்

kokila makan - kokila makan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2017 9:42 pm

  ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை "இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால் எதுகைப் பொருத்தம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர், தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?  

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே