சு சிவசங்கரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சு சிவசங்கரி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 645 |
புள்ளி | : 101 |
கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.
தேவாதி தேவா ஸ்ரீஅருணாச்சலா !
தேவாரம் பாடி வந்தோம் ஸ்ரீஅருணாச்சலா !
கரம் குவித்து உன் புகழ் பாட வந்தோம் ஸ்ரீ அருணாச்சலா !
காத்திருந்து காத்திருந்து உன்னைச் சரணடைந்தோமே !
காலம் முழுதும் உனக்காக வணங்கி நின்றோமே !
திருமாலும் பிரம்மனும் உன் உருவைக் காண அருகில் வந்தவர்களாம் !
நீ அடி முடியாய் நீண்டிருந்தாய் ஸ்ரீஅருணாச்சலா !
ஜோதியாய் நின்ற உருவானவா !
உனக்காகவே நான் உருவானதா !
அந்தமானும் உந்தன் அழகில் மயங்கிடும்
அந்தி நிலவுமுன் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தை வெளியினில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநிலவின் கீழ்
அந்தமானும் உந்தன் அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவும் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
அந்தமானும் உனதுசிலை அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவுமுமே ஆசைமுகத் தினைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியினில் துள்ளுகின்ற எனதுமானே
சந்திப்போ மாசொல்நாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
----முறையே இன்னிசை வெண்பா கலிவிருத்தம்
தரவு கொச்சகக் கலிப்பா
"போகும் இடம் தெரியாமலே கால்கள் ஓடுதே !
காற்றாக கடல் அலையாக நெஞ்சம் பதறுதே !
உறவுகளைத் தாண்டி உணர்வைத் தாண்டி உலகம் வருமா ?
அன்பைத் தாண்டி அரணைத் தாண்டி உலகம் விரும்புமா ?
கேட்கிறேன் கேட்கிறேன் கேளா மொழிகள்
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்காமலேயே ஏன் இந்த பிறப்பு ?
வறுமை உலர்ந்த இந்த உலகம்
வளமை வளர்க்க என்று வரும் இந்த உலகம்?
போகிறேன் போகிறேன் போக்கிடம் உண்டா ?
போகிறேன் போகிறேன் போகும் இடம் வருமா ?
ஆராரோ ஆரீரரோ என்று பாட வந்தேன் தூங்கு என் உலகமே !
ஆராரோ ஆரீரரோ என்று பாடி
சொல்வேன் தூங்காத என் உலகமே !
பகல் இரவாய் நீயும் நானும்
தனிமையில் இருப்போம் யாரும் அறியாமலே !!"
"வீடு தேடி சென்று குருவிற்கு வரும் தட்சணை குருதட்சணை
வீடு தேடி மருமகளிடமிருந்து வரும் தட்சணை வரதட்சணை"
"கலகலங்குது கலகலங்குது வளையல் சிரிப்பு
குலுகுலுங்குது குலுகுலுங்குது மயிலின் ஆட்டம்
சிலிசிலிர்க்குது சிலிசிலிர்க்குது பனிமூட்ட காத்து
தகதகக்குது தகதகக்குது கோடை வெயிலு
கிடுகிடுங்குது கிடுகிடுங்குது இடியோடு மழையாம்
சலசலக்குது சலசலக்குது வெள்ளருவி ஓட்டம்
கொக்கரிக்குது கொக்கரிக்குது சேவலின் கூவல்
பதைபதைக்குது பதைபதைக்குது பாம்பின் சீற்றம்
வெடவெடக்குது வெடவெடக்குது புலியின் உறுமல்
மணமணக்குது மணமணக்குது மல்லிகையின் வாசம்
சிடுசிடுங்குது சிடுசிடுங்குது தொட்டாச்சிணுங்கி
தித்திக்குது தித்திக்குது இனிப்பு பலகாரம்
கமகமக்குது கமகமக்குது அம்மாவின் அறுசுவை ருசியா !!"
"எங்கள் குழந்தை சிரிக்குது !
எங்கள் குழந்தை சிரிக்குது !
வயிறு குலுங்க குலுங்க எங்கள் குழந்தை சிரிக்குது !
அம்மாவின் குரல் கேக்குது !
அப்பாவின் கைவிரலைச் சப்புது !
தாத்தாவின் மீசையை முறுக்குது !
பாட்டியின் கன்னத்தைக் கிள்ளுது !
சித்தியின் சிரிப்பைப் பார்க்குது !
சித்தப்பாவின் பணத்தைக் கசக்குது !
அத்தையின் சேலையை இழுக்குது !
மாமாவின் மடியில் ஈரமாக்குது !"
காதல் என்றால் என்ன ?
1.பதின் வயதில் உடல் உணர்வுக்கூற்றில்
ஏற்படும் மாற்றத்தில் உருவாகும் மனதின் மெல்லிய சலனமா ?
அல்லது
2 . கவிஞர்கள் கவிதையில் காவியத்தில் எழுதும் மிகையா ?
அல்லது
3 . திரை நாயகர் நாயகியர் ஆடிப் பாடிக் காட்டும் நடனக் கலையா ?
அல்லது
4 . காமம் அல்லது SEX ன் முன்னுரையா ?
"பேசாதிருக்கும் போது மட்டுமே மனம் நிறைய பேசுகிறது"
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....