சுசிவசங்கரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுசிவசங்கரி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 0 |
கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.
"உறவும் உரிமையும் உனக்கென வாழட்டும்
அன்பும் நன்மையும் உனக்காக வாழட்டும்
நன்றியும் கருணையும் உன்னாலே மலரட்டும்
நாணமும் வீரமும் உன்னுயிர் ஆகட்டும்
அறிவும் அடக்கமும் உன்னுள்ளே வளரட்டும்
உண்மையும் நேர்மையும் உன்னாலே நடக்கட்டும்
அழகும் ஒழுக்கமும் உன்னாலே பேசட்டும்
ஒற்றுமையும் மேன்மையும் உனக்கே உரித்தாகட்டும்
பகுத்தறிவும் பட்டறிவும் உனைத்தேடி அடைந்திடட்டும்
முயற்சியும் வெற்றியும் உனக்கே விழுதாகட்டும்
நம்பிக்கையும் மன உறுதியும் உனக்கான உரமாகட்டும்
உலகும் உள்ளமும் உன்னையே வாழ்த்தட்டும்"
"குளிர் காய்கிறேன் உன்னை அள்ளியே
உன் தோள் சாய்கிறேன் என்னைத் தாங்கவே
என் மடி மீது உறங்கினாய் என் தாலாட்டிலே
நான் முதலில் உறங்கினேன் உன் மழலைப் பாட்டிலே
என் ஆயிரம் முத்தத்தில் நீ நனைகிறாய்
உன் சரீரம் தீண்டவே நான் மலர்கிறேன்
உன் சிறுநடை காணவே நான் கருவிழி ஆகிறேன்
உன்னை கருப்பையில் சுமந்ததால் நானும் குழந்தை ஆகிறேன்
உன் கைகளில் என் கண்ணீரின் சுவாசம்
என் கை விரல்களில் உன் கைகளை ஏந்தியே
என் பின்னால் நீ மறைகிறாய்
உன்னுள் நான் கரைகிறேன்
நான் போகிறேன் ஊர்கோலமே என்றும் கார்காலமே அதில் புதுவெள்ளமே
மறவாதே கலங்காதே அட அத்தனையும் பாராமுகமே
மணல் மணலாய் உடைகிறேன்
அனல் அனலாய் தகிக்கிறேன்
துளி த
"சிந்து பாடும் இதழோரம்
எந்நாளும் நதியாகும்
வண்ணத்தமிழ் இசையாலே
அலங்காரம் அழகாகும்
குயில்பாட்டும் மெய்ஞ்ஞானமும்
உணர்விலே குளிராகும்"
"கண் சிமிட்டும் வரை
காத்திருக்கும் நேரங்கள்
இறக்கும் பொழுது
காத்திருப்பதில்லை !"
"பேசாதிருக்கும் போது மட்டுமே மனம் நிறைய பேசுகிறது"
இடமிருந்து வலமாக படித்தாலும்,வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே வார்த்தை அல்லது வாக்கியம் வர வேண்டும்..........
எடுத்துக்காட்டு -
மாலா போலாமா
ஆண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் ந , நா , நி ,நீ வரிசையில் குறிப்பிடவும்
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....