சு சிவசங்கரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சு சிவசங்கரி
இடம்:  இந்தியா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  645
புள்ளி:  101

என்னைப் பற்றி...

கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.

என் படைப்புகள்
சு சிவசங்கரி செய்திகள்
சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2023 12:02 pm

தேவாதி தேவா ஸ்ரீஅருணாச்சலா !
தேவாரம் பாடி வந்தோம் ஸ்ரீஅருணாச்சலா !
கரம் குவித்து உன் புகழ் பாட வந்தோம் ஸ்ரீ அருணாச்சலா !
காத்திருந்து காத்திருந்து உன்னைச் சரணடைந்தோமே !
காலம் முழுதும் உனக்காக வணங்கி நின்றோமே !
திருமாலும் பிரம்மனும் உன் உருவைக் காண அருகில் வந்தவர்களாம் !
நீ அடி முடியாய் நீண்டிருந்தாய் ஸ்ரீஅருணாச்சலா !
ஜோதியாய் நின்ற உருவானவா !
உனக்காகவே நான் உருவானதா !

மேலும்

சு சிவசங்கரி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2023 5:20 pm

அந்தமானும் உந்தன் அழகில் மயங்கிடும்
அந்தி நிலவுமுன் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தை வெளியினில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநிலவின் கீழ்

அந்தமானும் உந்தன் அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவும் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநாம் சந்திரன்வந் திடும்பொழுதில்

அந்தமானும் உனதுசிலை அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவுமுமே ஆசைமுகத் தினைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியினில் துள்ளுகின்ற எனதுமானே
சந்திப்போ மாசொல்நாம் சந்திரன்வந் திடும்பொழுதில்

----முறையே இன்னிசை வெண்பா கலிவிருத்தம்
தரவு கொச்சகக் கலிப்பா

மேலும்

தென்றலே தன் மனதை பறிகொடுத்து விட்டு அவள் பின் செல்கிறது என்று சொல்கிறீர்கள் உண்மைதான் தன் மனதை மீட்குமா அல்லது நம் மனதை மீட்குமா ? அப்படியும் அவள் தரவில்லை என்றால் கூட்டணி அமைத்து ஆர்ப்பாட்டம்தான் நடத்த வேண்டும் மிக அழகிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சிவசங்கரி 27-Nov-2023 2:18 pm
ஒரு கவிதையில் 'தென்றலே ! மலரை பறிக்க வந்த ஒரு பெண் என் மனதை எடுத்து சென்றுவிட்டாள். எனக்கு இருப்பதோ ஒரு மனது. நான் உன்னை பற்றிய கவிதைகளை பாட வேண்டும் என்றால் என் மனதை அவளிடம் இருந்து வாங்கி வந்து விடு. என்று மொழிந்தீர்கள். அதற்கு என்னால் இயன்ற பதில் கவிதை அல்லது உரையை இங்கு இயம்பலாம் என்று மொழிகிறேன். தென்றலின் பதில் உரை : "கவி சாரா ! நானே அவள் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்று கொண்டிருக்கிறேன். நான் உனக்கு வேண்டும் என்றால் உன் மனதையும் சேர்த்து அவள் மனதையும் கவர்ந்து வந்து விடு. எனக்கும் இருப்பதோ ஒரு மனது தான். என்ன அன்பரே !" - இப்படிக்கு 'உன் தென்றல்' 27-Nov-2023 11:02 am
முயல்கிறேன் பண்ணவன் என்றால் 24-Nov-2023 9:09 pm
தங்கள் பாடல்கள் நல்ல முயற்சி! கீழேயுள்ள பாடலின் இலக்கண வாய்ப்பாட்டின்படி கடவுளைப் பற்றியும், காதலைப் பற்றியும் ஒரு பாடல் எழுதுங்களேன். நானும் எழுதுகிறேன். விநாயகர் துதி - கலிவிருத்தம் கலிவிருத்தம் (விளம் விளம் மா கூவிளம்) (மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது) மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருள்எலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்! 24-Nov-2023 8:10 pm
சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2023 1:48 pm

"போகும் இடம் தெரியாமலே கால்கள் ஓடுதே !
காற்றாக கடல் அலையாக நெஞ்சம் பதறுதே !
உறவுகளைத் தாண்டி உணர்வைத் தாண்டி உலகம் வருமா ?
அன்பைத் தாண்டி அரணைத் தாண்டி உலகம் விரும்புமா ?
கேட்கிறேன் கேட்கிறேன் கேளா மொழிகள்
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்காமலேயே ஏன் இந்த பிறப்பு ?
வறுமை உலர்ந்த இந்த உலகம்
வளமை வளர்க்க என்று வரும் இந்த உலகம்?
போகிறேன் போகிறேன் போக்கிடம் உண்டா ?
போகிறேன் போகிறேன் போகும் இடம் வருமா ?
ஆராரோ ஆரீரரோ என்று பாட வந்தேன் தூங்கு என் உலகமே !
ஆராரோ ஆரீரரோ என்று பாடி
சொல்வேன் தூங்காத என் உலகமே !
பகல் இரவாய் நீயும் நானும்
தனிமையில் இருப்போம் யாரும் அறியாமலே !!"

மேலும்

சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2023 4:55 pm

"வீடு தேடி சென்று குருவிற்கு வரும் தட்சணை குருதட்சணை
வீடு தேடி மருமகளிடமிருந்து வரும் தட்சணை வரதட்சணை"

மேலும்

சு சிவசங்கரி - சு சிவசங்கரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2023 7:52 pm

"கலகலங்குது கலகலங்குது வளையல் சிரிப்பு
குலுகுலுங்குது குலுகுலுங்குது மயிலின் ஆட்டம்
சிலிசிலிர்க்குது சிலிசிலிர்க்குது பனிமூட்ட காத்து
தகதகக்குது தகதகக்குது கோடை வெயிலு
கிடுகிடுங்குது கிடுகிடுங்குது இடியோடு மழையாம்
சலசலக்குது சலசலக்குது வெள்ளருவி ஓட்டம்
கொக்கரிக்குது கொக்கரிக்குது சேவலின் கூவல்
பதைபதைக்குது பதைபதைக்குது பாம்பின் சீற்றம்
வெடவெடக்குது வெடவெடக்குது புலியின் உறுமல்
மணமணக்குது மணமணக்குது மல்லிகையின் வாசம்
சிடுசிடுங்குது சிடுசிடுங்குது தொட்டாச்சிணுங்கி
தித்திக்குது தித்திக்குது இனிப்பு பலகாரம்
கமகமக்குது கமகமக்குது அம்மாவின் அறுசுவை ருசியா !!"

மேலும்

நன்றி! அருமை தோழரே! 21-Nov-2023 11:06 am
குதிகுதிக்குது குதிகுதிக்குது மனம் உங்கள் கவிதையில் 19-Nov-2023 8:16 pm
சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2023 8:05 pm

"எங்கள் குழந்தை சிரிக்குது !
எங்கள் குழந்தை சிரிக்குது !
வயிறு குலுங்க குலுங்க எங்கள் குழந்தை சிரிக்குது !
அம்மாவின் குரல் கேக்குது !
அப்பாவின் கைவிரலைச் சப்புது !
தாத்தாவின் மீசையை முறுக்குது !
பாட்டியின் கன்னத்தைக் கிள்ளுது !
சித்தியின் சிரிப்பைப் பார்க்குது !
சித்தப்பாவின் பணத்தைக் கசக்குது !
அத்தையின் சேலையை இழுக்குது !
மாமாவின் மடியில் ஈரமாக்குது !"

மேலும்

சு சிவசங்கரி - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2023 9:25 am

காதல் என்றால் என்ன ?

1.பதின் வயதில் உடல் உணர்வுக்கூற்றில்
ஏற்படும் மாற்றத்தில் உருவாகும் மனதின் மெல்லிய சலனமா ?
அல்லது
2 . கவிஞர்கள் கவிதையில் காவியத்தில் எழுதும் மிகையா ?
அல்லது
3 . திரை நாயகர் நாயகியர் ஆடிப் பாடிக் காட்டும் நடனக் கலையா ?
அல்லது
4 . காமம் அல்லது SEX ன் முன்னுரையா ?

மேலும்

கண்ணதாசனும் இதைத்தான் சொன்னார் இது மாலை நேரத்து மயக்கம் இதை காதல் என்பது பழக்கம் அழகிய விளக்கம் மிக்க நன்றி சிந்தனைப்பிரிய R J சுப்பிரமணியம் 12-Nov-2023 11:12 am
எதிர் பாலரிடம் எதிர் பாராத இயற்கையாக மயக்கம் kaadhal 12-Nov-2023 11:05 am
தேர்தலில் நிற்காமலே என்னை கவி அமைச்சராக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி கவிப்பிரிய சிவசங்கரி 07-Nov-2023 2:15 pm
நன்றி கவி அமைச்சரே திரு கவின் சாரலன் அய்யா அவர்களுக்கு. 07-Nov-2023 1:15 pm
சு சிவசங்கரி - சு சிவசங்கரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2023 5:27 pm

"பேசாதிருக்கும் போது மட்டுமே மனம் நிறைய பேசுகிறது"

மேலும்

நன்றி ! 08-Feb-2023 11:21 am
அருமை ! 01-Feb-2023 5:16 pm
சு சிவசங்கரி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே