காலம் போன பின்பு

"கண்கள் ரெண்டும் தூங்குதே
நெஞ்சம் தானா ஏங்குதே
உறவை தூக்க நினைக்குதே
உள்ளம் உருகிப் போகுதே
காலங் கெட்ட பின்னே எம் மனசு
கண்ணீரில் உயிரைக் கரைக்கப் பாக்குதே
அன்றைய வசையடியில் தூக்கம் வந்துச்சு
இன்றைய வசையடியில் தூக்கம் போச்சுது
கல்வீடு தோட்டத்துக்குள்ள
கல்லாங்கா ஆட்டமென்ன
கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க
நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக
கண்ணேறுபட்ட வாழ்க்கை
களவாடி போனதென்ன ?"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-Jul-24, 7:30 pm)
Tanglish : kaalam pona pinpu
பார்வை : 28

மேலே