மல்லி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மல்லி
இடம்:  சிங்கார சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2019
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  4

என் படைப்புகள்
மல்லி செய்திகள்
மல்லி - எண்ணம் (public)
28-Aug-2023 6:37 am

என் மன வானில் 
பூத்த வானவில்லே..!

எண்ணங்களில்
 வண்ணங்கள் தூவி 
சட்டென  மறைந்தது ஏனோ ...?

 மனதினை 
தொட்டது ஏனோ ...?

உயிரினை 
சுட்டது ஏனோ ...?

 ஓ..! நீயும் சூரியனின்
 பிரதிபலிப்பு தானோ ...!

மேலும்

மல்லி - எண்ணம் (public)
28-Aug-2023 6:30 am

உன் கைகளுக்குள் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறேன்.....

பறக்க விடு...
 இல்லையெனில் 
இறக்க விடு  ....

வார்த்தைகளில் சிலுவை ஏற்றி வதைக்காதே ....

உன் சினம் தாங்கும் மனம் எனக்கில்லை ....
சிதைந்து போகிறேன்...

காதல் கூட கசக்கும் 
காயங்கள் அதிகமானால்...!

மேலும்

மல்லி - எண்ணம் (public)
28-Aug-2023 6:28 am

காதோடு உன் குரல் இசைத்திட ....

காற்றோடு என் மனம் அசைந்திட  ....

முகிலாய் உன் முகம்  வந்து வந்து கலைகிறது ....
என் வானத்தில்!

 நிலை கொள்ளச் செய்ய ஒரு முறை வா
 நிஜத்தில்...!

மேலும்

மல்லி - ஆரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2012 5:29 pm

பாதையில் காத்திருந்து
பார்வைக்காய் பூத்திருந்து
காதலித்தேன்
அவள் அழகுபாவை;
காதலின் ஓட்டத்திலே
கால கனாக்களை
காரைத்துவிட்டால்
வாடி..,போடி.. என
நான் சொல்ல இன்று
"வாடிபோடா" என்று
வாய்கூசாமல் சொல்லிவிட்டாள்
என்றோ..என் பாதையில்
அடி மாறிமாற்றினாள்;
இன்றோ.. போதைக்கு
அடிமையாக்கினாள்;

இன்று உணர்ந்து கொண்டேன்
காதலும் சொறிதான் என;
சொறிய சொறிய இன்பம்
சொறிந்தபின் துன்பம்

தோல்வியால் துவண்டுவிட்டேன்
அவளின் மூடிவைத்த பேச்சுக்கள்
தாடிவைத்து கையில்
பீடி ஏந்த வைத்தன;
அவள் இல்லாத காதல்
கசக்கும்மென்பேன் இன்று
அவளால் தான் காதல்
கசக்குது என்கிறேன்;

தேவதை என நினைத்தேன்
தேவையா இந்த வதை

மேலும்

உங்களின் அன்பிற்கும் கைதட்டலும் என் அன்பு கலந்த வணக்கங்கள் 16-Sep-2021 5:43 pm
👏👏👏👌 16-Sep-2021 7:45 am
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2021 11:31 am


நற்பண்பின் தாயகம்!
நபிகள் நாயகம்!
 

ஓடையாக உள்ளம்
துள்ளுமே..! 
ஒரு பெயரை
உச்சரிக்கவே ...

கோடையில் மழை
சிந்துமே...!
கோமான் நபியை
நினைக்கவே ...!

ஏடு போதாது
ஏந்தலுக்கு 
கவி சொல்ல ....

ஈடு ஆகாது
இவருக்கு 
இணை சொல்ல ...

எந்தன் நபி 
பண்புகளை பாட..

 எந்த நூலெடுத்து
வார்த்தைகளை தேட ...?

அனுதினம் 
அண்ணல்
நபி மீது..

குப்பை 
கொட்டும்
கிழ மாது..

ஒரு தினம்
போயினள்
காணாது..

என்ன நேர்ந்தது இன்று
ஏன் வரவில்லை என்று
உடன்  விரைந்து சென்று  
நலம் அறிந்த உயர்
நபிக்கு ஈடேது...??

வந்துவிட்டார்
 தூதர் என்று ..

வெளியேறிய
 மாதர் அன்று...

வாழ இடம் 
தேடி நடக்க ...

வழி சென்ற 
நாதர் கடக்க ...

அன்னையாய்
அவர் சுமை 
தான் சுமக்க ...

தன்னையோ
வழியெல்லாம் 
திட்டி தீர்க்க ...

நெஞ்சத்தில் 
வஞ்சனை
வைக்கவில்லை...

கொஞ்சமும் 
கோபத்தை
காட்டவில்லை ...

எண்ணிய இடம்
எட்டிய நேரம் ...

கண்ணியம் காட்டி
இத்தனை தூரம் ...

எம்பாரம் தாங்கி வந்த
தாங்கள் யார் ..??

பெண்மணி வினா
தொடுக்க....

வழி எல்லாம் 
பழி சொல்லி
வந்த பொல்லா 
நபி நான் தான் ...

கண்மணி விடை
கொடுக்க ...

விழி ஓரம்
ஈரம் நனைக்க....
விருட்டென்று 
உடல் சிலிர்க்க...
விரல் உயர்த்தி 
கலிமா உரைக்க ...

வியப்பூட்டும் 
விந்தை நபி
குணம் கண்டு 
சிந்தை மயங்காதார்
உண்டோ..???

மேலும்

மல்லி - எண்ணம் (public)
14-Sep-2021 11:31 am


நற்பண்பின் தாயகம்!
நபிகள் நாயகம்!
 

ஓடையாக உள்ளம்
துள்ளுமே..! 
ஒரு பெயரை
உச்சரிக்கவே ...

கோடையில் மழை
சிந்துமே...!
கோமான் நபியை
நினைக்கவே ...!

ஏடு போதாது
ஏந்தலுக்கு 
கவி சொல்ல ....

ஈடு ஆகாது
இவருக்கு 
இணை சொல்ல ...

எந்தன் நபி 
பண்புகளை பாட..

 எந்த நூலெடுத்து
வார்த்தைகளை தேட ...?

அனுதினம் 
அண்ணல்
நபி மீது..

குப்பை 
கொட்டும்
கிழ மாது..

ஒரு தினம்
போயினள்
காணாது..

என்ன நேர்ந்தது இன்று
ஏன் வரவில்லை என்று
உடன்  விரைந்து சென்று  
நலம் அறிந்த உயர்
நபிக்கு ஈடேது...??

வந்துவிட்டார்
 தூதர் என்று ..

வெளியேறிய
 மாதர் அன்று...

வாழ இடம் 
தேடி நடக்க ...

வழி சென்ற 
நாதர் கடக்க ...

அன்னையாய்
அவர் சுமை 
தான் சுமக்க ...

தன்னையோ
வழியெல்லாம் 
திட்டி தீர்க்க ...

நெஞ்சத்தில் 
வஞ்சனை
வைக்கவில்லை...

கொஞ்சமும் 
கோபத்தை
காட்டவில்லை ...

எண்ணிய இடம்
எட்டிய நேரம் ...

கண்ணியம் காட்டி
இத்தனை தூரம் ...

எம்பாரம் தாங்கி வந்த
தாங்கள் யார் ..??

பெண்மணி வினா
தொடுக்க....

வழி எல்லாம் 
பழி சொல்லி
வந்த பொல்லா 
நபி நான் தான் ...

கண்மணி விடை
கொடுக்க ...

விழி ஓரம்
ஈரம் நனைக்க....
விருட்டென்று 
உடல் சிலிர்க்க...
விரல் உயர்த்தி 
கலிமா உரைக்க ...

வியப்பூட்டும் 
விந்தை நபி
குணம் கண்டு 
சிந்தை மயங்காதார்
உண்டோ..???

மேலும்

மல்லி - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2015 12:46 am

கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************

சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே

கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுத

மேலும்

அழகாக செதுக்கபட்ட அறிவுரை .. 19-Aug-2021 5:09 pm
விஞ்ஞானம் விதைத்திடும் விஷம் , அறிந்தே அருந்திடும் அவலங்கள் சொன்னாலும் கேட்காது பட்டாலும் திருந்தாது இந்த பாழும் உலகம் ! முத்தான கருத்து, யாருக்கும் எட்டாத கருத்து 14-Oct-2015 11:47 am
அற்புதம் நட்பே!! நிகழ்கால உலகிற்கு தேவையான தெளிவான அறிவுரை 14-Oct-2015 6:29 am
மல்லி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2021 11:01 pm

புல்லாங்குழல் இசை நீ பேசும் மொழியோ
புன்னகை ஓவியன் வரையாத சித்திரமோ
கனவுடன் கைகோர்த்து நடக்குதோ உன் விழிகள்
என் கவிதைத் தமிழோடும் நடந்து வருமோ ?

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய மல்லி சில்லென்று பூத்துக் குலுங்கும் மல்லி செல்லி ஏன் வரவில்லை சொல் நீ 18-Aug-2021 9:00 am
அழகு அருமை நிப்பான் பெயின்ட்டில்நீ அடங்காத கலரோ ஜப்பான் ஹைக்கூபோல் சிரிக்கும் சிரிப்போ மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 18-Aug-2021 8:58 am
அருமை! 18-Aug-2021 12:03 am
அருமை ஐயா குழலிடும் கீதங்கள் நீமொழிந்த வகையோ நிப்பான் பெயின்ட்டில்நீ அடங்காத கலரோ இமைக்காத விழிகளுள் நேர்கின்ற கனவுகள் செந்தமிழ்க் கவிதை யாய்கை கூடி வருமோ 17-Aug-2021 11:26 pm
மல்லி அளித்த எண்ணத்தில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jun-2019 8:35 am

விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்....
விடுப்பின்றி.
 
அனலில் அவிந்து போகின்றேன் நான்....
அடுப்பின்றி.
 
கறுத்தாலும்
வெறுத்தாலும்
மறுத்தாலும்
உன் வேலையை செய்கிறாய் ..
கடுப்பின்றி.
 
நீ உழைக்க...
நாங்கள் களைக்க...
கொஞ்சம் இளைப்பாறு  கதிரவனே....
 
வெயிலே 
சற்று 
 துயில் கொள்...
மயிலும் ஆடட்டும்...
மழை பொழியட்டும்...

மேலும்

நன்றி தம்பி.. 01-Jul-2019 8:17 pm
நன்றி நட்பே.. 01-Jul-2019 8:16 pm
மல்லி, நான் உங்களை உடன்பிறபாகவே எண்ணுகிறேன், ஆனாலும் சகோதரன், சகோதரி என்ற வார்த்தையின் சுருக்கமான சகோ என்ற வார்த்தையை தவிர்த்து. அண்ணா என்றோ அல்லது தம்பி என்றோ அழையுங்கள். ஏனென்றால் சகோதரன், சகோதரி என்ற வார்த்தைகள் வடமொழி சொற்கள். நன்றி 25-Jun-2019 12:24 pm
வெயிலே சற்று துயில் கொள்... மயிலும் ஆடட்டும்... மழை பொழியட்டும்... ----அருமை 21-Jun-2019 10:11 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2019 12:57 pm

இரண்டாம் காதல் போர்

 என் காதலை எப்படி சொல்வேன்..?


 முதல் முறை என்றால் வெட்கத்தோடு சொல்லிடுவேன்..
 
 இரண்டாம் முறை என்பதால் தயக்கத்தோடு சொல்கிறேன்...
 
இருண்ட உன் வாழ்வில்  இரண்டாம் ஒளியாக நான் வந்தால் ஏற்பாயா..?

 உன் திருமண வாழ்வில் தோற்று போனாய் என வருந்தாதே..

வெற்றி இடம் சொல்லாதே நான் வெற்று இடம் இனி என்னிடம் வராதே என்று...
உன் மீது பற்றோடு நான் ஒருத்தி இருக்கிறேன்..
சற்று என்னையும் எண்ணி பார் இன்று...

உன் தாரமாக வந்தால் பாரமாக மாட்டேன்...
தூரமாகி போகாதே..!
என் விழி ஈரமாகி போகுதடா..

 வெயில் படும் திசையில் உன் நிழலாவேன்...
குயில் பாடும் இசையில் உன் குழலாவேன்...

கண்ணீராய் நிறைந்த உன் விழியில் இனி..
கானல்நீராய் மறையும் உன் வலி.. என் வழியில்..

என் காதலை எப்படி உனக்கு சொல்வேன்... ?

சித்தியாக சீற மாட்டேன்..
கத்தியாக கீற மாட்டேன்..
சக்தியாக மாறுவேன் உங்களை காக்க...

தாயாராக வர தயாராக உள்ளேன்... உன் பிள்ளைக்கு மட்டுமல்ல உனக்கும்...

மேலும்

“இரண்டாம் காதல் போர்” என்ற தலைப்பை படித்தவுடன் இதுவும் வழக்கமான காதல் பாட்டு (கவிதை) என்று நினைத்துவிட்டேன்; படித்த பின்புதான் உங்களின் பாட்டின் நிலையும் அதில் சொல்ல வந்த அன்பின் வெளிப்பாடும் என்னை வியப்புக்குள்ளாக்கி விட்டது. நல்ல பாட்டு, தொடர்ந்து நல்ல பாட்டை தந்து எங்களை மகிழ்விக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். #பாட்டு - கவிதை என்ற வார்த்தையின் தமிழ் சொல். கவிதை என்பது வடமொழிச் சொல். 25-Jun-2019 3:56 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 11:45 pm

எங்கே சென்றாய் நட்பே..?

வாட்ஸ்அப்பில் வருவதில்லை.... 

முகநூலில் முகமும் இல்லை...
 
கால் செய்ய காலமும் இல்லை...
 
தொலைதூரம் சென்றாலும் தொலைந்து விடவில்லை... 

தொடர்பில்லையென்றாலும் தொலைத்து விடவுமில்லை.... 

என் மனதில் உன் நினைவுகள் கலைந்து போவதும் இல்லை...
 
உன்னை நினைத்து நினைத்து 
நான் களைத்து போவதும் இல்லை... 

உன்னை நினைவூட்டும் பல பொருட்கள் என்னிடம் உண்டு.. 
உன்னைத் தவிர. 

எங்கே சென்றாய் நட்பே... 

நீ உயிரோடு இருப்பதை உணர்கிறேன்... 

ஏனென்றால் நான் இன்னும் சாகவில்லையே..!!!

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2019 11:38 pm

தேர்தல் நேரம்..

வாராவாரம் ஆரவாரம்....!!
ஆங்காங்கே அலறும் பிரச்சாரம்...!!

கண்கொண்டு பார்க்க கூட நேரமில்லாதவர்
நேரில் வந்து காலில் விழுவார்..!

வணங்கி விட்டுச் செல்லவா..?
வாரி விட்டுச் செல்லவா..?
நான் என்ன சொல்ல..?
இது தேர்தல் நேரம்!

அனல் பறக்கும் பேச்சு ...

போனமுறை அள்ளிவிட்டதெல்லாம் 
என்ன ஆச்சு..?

கானல் நீராய் காணாமல் போச்சு..

"திருடர்கள் ஜாக்கிரதை"
திருடப்படுவது பணம்
              அல்ல
              மனம்..

 இது தேர்தல் நேரம்!

மாறி மாறி பழி போட்டு ..
வெளிவரும் பல குட்டு..
கட்டுக் கட்டாய் காந்தி நேட்டு..
வாங்கப்படும் கள்ள ஓட்டு..
பொல்லா ஆட்சியில்
இருந்து நாட்டை மீட்டு..
நீ யாரென்று காட்டு..

இது தேர்தல் நேரம்!

இந்த முறை மயங்க போவதில்லை..
தங்கள் விந்தைகளில்..!

எந்த வாக்கும் விற்கப் படுவதில்லை..
எங்கள் சந்தைகளில்..!

தந்த வாக்கும் நிற்கப் போவதில்லை..
ஜெயித்த பின்
உங்கள் சிந்தைகளில்..!

இது தேர்தல் நேரம்..!

இது நம் நேரம்..!
 என் வாக்கு என் உரிமை!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கேப்டன் யாசீன்

கேப்டன் யாசீன்

திண்டுக்கல்
பிரியா

பிரியா

பெங்களூரு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே