கேப்டன் யாசீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கேப்டன் யாசீன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2015
பார்த்தவர்கள்:  2553
புள்ளி:  477

என்னைப் பற்றி...

கேப்டன் யாசீன்
இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.
கேப்டனின் வெளிவந்த நூல் :- நெருப்பு நிலா என்ற பெயரில் கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்.
விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-
1. தேவதையோடு கவியாடல் 2. கஜல் நூல் - 3 3. புதுக்கவிதை நூல் - 3 4. அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)
சொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்
படிப்பு :- M.A., M.Phil., B.Ed., M.Sc. (Psychology)
தொடர்புக்கு 9500699024 9942052069 captainyaseenzi@gmail.com

என் படைப்புகள்
கேப்டன் யாசீன் செய்திகள்
கேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2021 10:20 pm

நான்
நானாக இருந்தபோது
நான்
நானாக இல்லை.
நான்
நீயாக ஆனபோது
நான்
நானாகிப் போனேன்.

- கேப்டன் யாசீன்

மேலும்

கேப்டன் யாசீன் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

கேப்டன் பதிப்பகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முஹம்மது நபிகளார் கவிதைப் போட்டி.

முஹம்மது நபிகளார் பற்றிய தலைப்பில் கவிதைகள் அமைய வேண்டும்.

கவிதைகள் அனுப்ப கடைசி தேதி 30 - 10 - ௨௦௨௧

விபரங்களுக்கு
தொடர்பு கொள்க
கேப்டன் யாசீன்
99420 52069

மேலும்

கேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2021 11:22 am

காதல்
மூன்று எழுத்தில்
நான்கு வேதங்களை உள்ளடக்கிய
ஐந்தாவது வேதம்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
9942052069

மேலும்

கேப்டன் யாசீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2021 8:05 am

போதி மரம்
தேடி அலைய
வேண்டியது இல்லை
புத்தக மரத்தில்
அமர்ந்து
இளைப்பாறினால் போதும்
புத்தனாகலாம்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

மேலும்

கேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 3:35 pm

நெருப்பு நிலா - கேப்டன் யாசீன்

இந்நூலில் கவிஞர் யாசீன் அவர்கள்
காதலுக்கும் இலட்சியத்திற்குமான
போராட்டத்தை நாவலாக
அதுவும் கவிதை நடையில் மிக அழகாக
நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்...

உங்க கால பழைய
கதைகளை மட்டுமே
இலக்கிய நடையில் படித்துள்ள நமக்கு
ஒரு புதிய கதைக்கருவை மையமாக வைத்து நடைமுறையில் உள்ள
வார்த்தைகளை கொண்டு மிக அழகான நாவலை தந்திருக்கிறார்...

கதையின் நாயகியின்
மென்மையாகட்டும்.. கதாநாயகனின் காதலாகட்டும் அவனது லட்சியமாகட்டும் அனைத்தும்
கவிதையாக சொல்லுவதில் இங்கு கவிஞரின் கற்பனை திறனை வியக்க வைக்கிறது..

வார்த்தைகளுடன் விளையாடி இருக்கிறார்...

இந்த புதிய முயற்சியை

மேலும்

நன்றி 19-Nov-2020 10:59 pm
அருமை 03-Nov-2020 9:49 pm
கேப்டன் யாசீன் - Thamildheeran அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2020 12:30 pm

Which Publishers who are supporting upcoming new authors...???

மேலும்

கேப்டன் பதிப்பகம் முன்னணி பதிப்பகம் இல்லை. ஆனால் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறோம். எனவே புதிய எழுத்தாளர்கள் எங்களை அணுகலாம். கேப்டன் பதிப்பகம் - 9942052069 14-Aug-2020 1:31 am
கேப்டன் யாசீன் - துரைராஜ் ஜீவிதா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2020 8:53 am

நான் முன்பே கவிதைகளை பதிவு செய்து உள்ளேன் பதிவு பக்கம் திறக்க முடியவில்லை

மேலும்

எனக்கும் இதே பிரச்னைதான் 14-Aug-2020 1:24 am
எழுது வில் சொடுக்கி பின் கீழே வரும் கவிதை யில் சொடுக்கினால் பதிவு செய்ய இரண்டு கட்டங்கள் வெள்ளையாய் விரியும் . அப்படி வரவில்லை என்றால் தள தொழில் நுட்ப அண்ணாச்சிமார்கள்தான் வழிகாட்ட வேண்டும் . 12-Aug-2020 10:10 am
கேப்டன் யாசீன் - மல்லி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2020 6:09 am

முகமது நபியே..!
முழுமதி ஒளியே ..!

ஒருமுறை வந்தால் போதுமே ..!
என் வாழ்வே வானவில் ஆகுமே..!

அகமது நபியே..!
அன்பின் விழியே ..!

என்னை ஒருமுறை பார்த்தால் போதுமே ..!
என் உயிர் உம்மை சேருமே ..!

அந்த மண் செய்த தவம் தான் என்னவோ ..!

உம் பொன்னான மேனியை சுமக்கிறதே..!

இந்த  கண் செய்த பாவம் தான் என்னவோ..!

உம்மை காணாமல் புண்ணாக வலிக்கிறதே ..!

வான் பிறையாய் உம் பற்கள் ஒளிர ..
தேன் நிறையாய் இறை சொற்கள் மிளிர..

ஒருமுறை கேட்கும் வரம் கிடைக்காதோ..?
என் செவி குளிர ..!

நீர் தவம் புரிய வேண்டும்  என்று அந்த ஹீரா குகை எத்தனை யுகம் தவம் புரிந்ததோ..!

நரை எல்லாம் கதறும்...
 நமக்கு ஏதோ குறை   என்று..!
அறுபது தாண்டியும் 
இருபது கூட  
 நாயகத்திடம் நெருங்க முடியவில்லையே அன்று ..

விண்ணில் தவழும் மேகம் ..
மண்ணில் கமழும் உங்கள் முகம் கண்டு... 
கண்ணில் நீரை சிந்தும் ..!
நான் தழுவ வழி இல்லையே என்று ..!

அந்த நிலவும் ஒளிந்துவிடும் ..
நீர் உலவும் வீதியிலே ..!

மலர்ந்த மலரும் மூடிக்கொள்ளும்...
உம் வாசம் வீசுகையிலே..!

வான் புகழை என்ன சொல்லி 
நான் புகழ்வேன்..?

 வார்த்தைகள் இல்லை.. உலகமொழிகளில் இன்று!

கர்த்தாவே புகழ்ந்து விட்டான்..
முழுவதுமாய் முஹம்மத் என்று!

மேலும்

டுயமான என்று கைத் தவருதாலாக எழு திவிட்டேன். முகமதுவைக்குரானில் படித்தீரா அல்லது ஹதீஸில் படித்தீரா. முகமது இறைத்தூதரா, பாதுஷாவா. ஹசேன் ஹுசேனின் பாட்டனரா. அவர் என்ன செய் தார் என்று ஒன்றும் சொல்ல வில்லை உமது பாடலில் எதை உணர்த்த முயலுகிறீர். உங்கள் கருத்து குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்ட தா அல்லது ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்ட தா. ? கர்த்தா முகமதுவை என்ன புகழ்ந்தார். தயவுசெய்து விளக்குங்கள். நீங்கள் முஸ்லீமா ? 07-Jul-2020 8:06 pm
அருமை 06-Jul-2020 11:56 pm
அபாரமான கற்பனை. ஹிரா குகை வரலாறும் அற்புதம்..ஹதீஸ்களிலும் காண முடியஎ கற்பனை. டுயமானை கற்பனை. உண்மையில் அற்புதம் 05-Jul-2020 5:58 pm
அழகான பதிவு, நபி (ஸல் ) அழகிய முன்மாதிரி 05-Jul-2020 1:36 pm
கேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலாவுக்கு நூல் விமர்சனம் எழுத வேண்டும்.

2. சிறந்த விமர்சனத்திற்குப் பரிசக்கப்படும்.

3. போட்டி ஆரம்ப நாள் :- 27 - 03 - 2018

4. போட்டிக்கு விமர்சனம் அனுப்ப கடைசி தேதி :- 30 - 04 - 2018.

5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் :- 21 - 05 - 2018

மேலும்

சென்னை திண்டுக்கல் பட்டுக்கோட்டை சேலம் மேட்டுப்பாளையம் உத்தமபாளையம் கம்பம் போன்ற ஊர்களில் கிடைக்கும் 11-May-2018 10:32 am
நெருப்பு நிலாவின் புத்தகம் எதில் படிப்பது..? 26-Apr-2018 6:10 pm
கேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2016 11:42 am

உன் நினைவுகளோடு
படுக்கைக்குப் போனேன்.
மறந்துபோனது உறக்கம்.

- கேப்டன் யாசீன்.

மேலும்

ஆம் சகோ 18-Jul-2016 6:45 pm
உறக்கம் என்பது காதலின் அகராதியில் தொலைந்து போன் சொல் ஓவியம் 18-Jul-2016 4:46 pm
கேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2016 9:18 pm

என் விழியில்
வழிகிறது காதலாய்-
கண்ணீர்.

- கேப்டன் யாசீன்.

மேலும்

நன்றி சர்ஃபான் ஜி 31-May-2016 1:30 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-May-2016 6:02 am
கேப்டன் யாசீன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2015 10:12 pm

நீரின்றியமையாதது.
எனவே
நீரின்றியமையாது உலகு.
நீரே உலகானாலும்
அமையாது உலகு.

மேலும்

Leave Your Comments... நன்றி தோழரே 11-Dec-2015 7:59 am
உண்மைதான் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:38 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (36)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (38)

வித்யா

வித்யா

சென்னை
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
user photo

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே