அற்புத பணி ஆசான் பணி

மாணாட்கர் மனக்கண்
அறியாமை அகற்றும்
அற்புத பணி .
ஒழுக்கத்தை போதிக்கும்
உன்னத பணி .
கற்றலில்
கசடு களையும்
கண்ணிய பணி .
அகிம்சை உணர்வை
உள்ளத்தில் பதிக்கும்
உயரிய பணி .
துலாக் கோல் போல்
மாணாட்கரிடம் சமநிலை
நடத்தும் நுண்ணிய பணி .
சாதி ,மத வேறுபாடில்லா
சமத்துவத்தை போதிக்கும்
உயரிய பணி .
கற்றலை
அகத்தில் நிறுத்தி
புதுமையாய் ,எளிமையாய்
இன்முகத்துடன் அவன் வசம்
உட்புகுத்தும் நுட்பமான பணி .
வேற்றுமை நீக்கி
ஒற்றுமை உணர்வை
உள்ளத்துள் ஊட்டும்
உணர்வு பூர்வ பணி .
கற்றல் சுமைக்கண்டு
கலங்கும் நெஞ்சங்களை
தட்டிக்கொடுத்து
தடைகளை அகற்றும்
அழகிய பணி .
கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு
மும்மந்திரமும் செவி பாய்ச்சி
வாழ்வியல் வழிநடத்தும்
வளமான பணி .
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
எனும் மெய் மொழிக்கேற்ப
அவசரத்தில் கற்றதை கற்பிக்காது
நுண்மான் நுழை புலம் காணும் பணி .
பாகற்காயாய் கசக்கும் பாடங்களை
தித்திக்கும் தேனாய்
இனிப்பாய் எடுத்தியம்பும் பணி .
ஏன் ,எதற்கு ,எப்படி
எனும் வினா தொகுத்து
விடையறியும் மெய்ஞான பணி
விஞ்ஞான பணி .-ஆசிரியர் பணி
இப்பொன்னாளில்
ஆசிரியர் அனைவரும்
மன உறுதி பூண்டு
உண்மையாய் உழைத்தால்
வெல்லலாம் -நல்லாசிரியர்
விருதினை நாமும்
அரசிடம் மட்டுமல்ல
மாணாட்கர் உள்ளத்திலும் ........................




இளையகவி

எழுதியவர் : கா .இளையராஜா .பரமக்குடி (3-Sep-15, 3:24 pm)
பார்வை : 162

மேலே