மகளதிகாரம் 2

பள்ளிக்கு இப்போது தான் செல்லத்துவங்கியிருக்கிறாள்...
படிக்கும் வகுப்பை மாற்றிக்கூறினால்
ரோஷம் பொத்துக்கொண்டு வரும்...
அதற்காகவே அடிக்கடி மாற்றிக்கூறுவேன்...
சின்னப்பூக்கள் கோபம் கொண்டால் அழகாகத்தான் இருக்கும்...

குறை கூறும் யாரையும் பிடிக்காது...
உடனே அவள் சொல்லும் முதல்வார்த்தை...
"இனிமே உங்ககிட்ட பேசவே மாட்டேன் போ..."

கொஞ்சும் வரைக்கும் அவள் உள்ளத்தில் ராஜாவாய் இருப்பேன்...
எதற்கேனும் மிரட்ட நேர்ந்தால்
அப்போதே கூஜாவாகி விடுவேன்...
"ரொம்ப மோசமான அப்பா" என பட்டப்பெயர் வைத்து விடுவாள்...

அடிக்கொருதரம் அவளது விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும்...
இப்பொழுதுதான் அழுதது போலிருக்கும் திடீரென்று சிரித்திருப்பாள்...

எல்லாரிடமும் பெரியமனுசி போலப் பேசுபவள்
தனது பொம்மைகளிடம் மட்டும் குழந்தையாகிறாள்...

அவள் பள்ளிக்குச் சென்ற பின்பு
பொம்மைகள் உணவுன்ன மறுக்கின்றன...
அவள் வரும்வரை பொம்மைகளிடம் கெஞ்சிக் கெஞ்சியே
எனது பொழுதுகள் கழிகின்றன.... .

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jan-17, 8:44 pm)
பார்வை : 1103

மேலே