இமைகளின் சுமைகள்

இமைகளின் சுமைகளை இறக்கிவை !

இமைகளின் சுமைகளை
இறக்கிவை போதும்
இதயத்தின் அறைகளில்
இன்பங்கள் மோதும் !

நிகழ்ந்தவை கணத்தினில்
நீங்குதலே இயற்கை
அகழ்ந்தெடுத்து தினந்தினமும்
அவதியுறல் மடமை !

கடந்தவற்றைத் திருப்புதலோ
கவைக்குதவா வேலை
நடந்தவற்றைப் புறந்தள்ளி
நடப்பவற்றைக் கவனி !

ஒவ்வொன்றாய்க் கணங்களெலாம்
உன்னைவிட்டே செல்லும்
கவனமாகக் கைப்பற்றிக்
களித்தாலே வெல்லும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (3-Aug-25, 8:44 am)
பார்வை : 65

மேலே