Selvam- கருத்துகள்

தினம் முத்தம் தேனீரோ

இருளான பொன்மேனி இருளாயி கண்மணியே

வானவில் தாவணியில்
வடிவழகு மின்னுதடி

வேடதாரி வாழ்க்கையிலே
வந்துதித்த நீர்துளிகள் கண்ணீர்

வீரத்தை விளைக்கும் சொற்கள்

தேன்மொழியாள் காட்டுகிற பொய்யின் கோபம் தேன்சாரல் கொட்டுகிற பொதிகை மொழி தானோ

மேலும் முயலுங்கள்

#ஆழ்ந்த_இரங்கல்

என்னோட அம்மாவின் மனம்கவர்ந்த தோழி
#சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளியே
கண்ணிறைந்த வடிவழகே
வானேறி சென்றனையோ
வண்ணமுகம் தான்துயில

கோலமயில் பைங்கிளியை கொஞ்சியதோ தமிழுலகம்
மிஞ்சியதோ நின்புகழே
மண்ணுலகில் மல்லிகையாய்

தேனுடலும் மண்துயில
தேவதைநீ சென்றதென்ன?
மலர்மாலை தலையணையாய்
மண்ணுலகில் நீதுயில

காதலினை வடிவழகில்
காட்டிவிட்ட தோகைமயில்
காதல்செய்யும் இளமைக்கு
காட்டிவிட்டாய் திரைதுறையில்

சேலையிலே நீநடித்த
செந்தமிழ்ப் பூஞ்சோலைகள்
ஆடுகின்ற பொம்மையில்லை
அழகெடுத்த திருமகள்தான்

போராடும் வாழ்வெனக்கு
போதுமென சென்றனையோ
வானேறி சென்றவுன்னை
வணங்குகிறேன் தாயெனவே

அழகான வடிவழகும்
அமைதியான புன்னகையும்
அச்சுதன் அவனடியில்
அமைதியுடன் உறங்கிடம்மா

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் நின்னழகோ

விழிமொழி பேசும் மங்கை வெக்கத்தை கொண்டாள் ஏனோ

தாலாட்டும் தென்றல் போதும் தலையாட்டும் தமிழாம் உந்தன்

கோதையவள் கொண்டையிலே
கொஞ்சுதடி மல்லிகைப்பூ
நீலிமலை பறவையென
நீயிருக்கே ஏனடியோ !

கண்ணாடி உன்னழகை
கண்கள்தான் காட்டுதடி
துள்ளியாடும்உன்னழகை
தூக்கிச்செல்ல வரட்டுமாடி

தென்பொதிகை தென்றலிலே
தேரோட்டி போகையிலே
தாரோடுக் குலைவாழை
தாக்குதடி எம்மனசை

கைவளையல் தூதுவிடும்
கொலுசுசத்தம் மோகமிடும்
பானையில் பொங்கிவரும்
பச்சரிசி பல்லழகே

பாலூறும் கன்னத்தில்
பருவத்துப் பூக்களடி
தேனெடுக்கு. மாமனுக்கு
தென்பொதிகை சாரலடி

அத்திபழம் நானிருக்கேன்
அழகுக்கிளி நீயிருக்க
கோலவிழி உன்னழகில்
கொஞ்சம்மதி சிரித்திருக்க
கோலமயில் ஆடுதடி
காதலினால் தோகைவிரித்து
மோகமுள்ள உன்னழகில்
மோனமதில் நகைவிரிப்பேன்
துடுக்குத்தன நாணமதில்
துள்ளுகின்ற மானழகே
சாந்திமலைத் தோப்பினிலே
சாரலடி நீயெனக்கு

கருத்தாடை கட்டிக்கிட்டு
கல்யாணம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு மாமனுக்கு
மயிலாக வந்தவளே

சிங்காரம் கண்ணிரண்டும்
சிறுநாகம் போலிருக்க
அத்தானை பார்த்ததிலே
அணைத்துவிட்ட மாமயிலே

முல்லைப்பூ அரும்பெடுத்து
முழுகூந்தல் வைச்சிக்கிட்டு
முத்தாரம் மாமனுடன்
முடித்ததென்ன கட்டிலிலே

முகம்கோணா கொங்கையிலே
மலைமுகடு நின்றிருக்க
கண்டாங்கி சேலைக்குள்ளே
கண்ணிரண்டும் மேயுதடி

தைமாசம் மாமனுக்கு
தாசாங்க வாசமுடன்
தேன்நிலவு கட்டிலிலே
தேன்மழைகள் நீதானடி

தேன்மொழி தாயே நின்றன்
தாவியுன் பாதம் வீழ்ந்தேன்
சாதனை முயற்சி என்றன்
சரித்தி்ரம் படைக்கச் செய்வாய்
செவியில்லா உயிரை தாங்கி
சிந்தையில் நடந்துக் காப்பாய்!
தேன்தமிழ் கவிதை யாவும்
தோன்றிடும் பூவின் வாசம்
தூவிடும் பனியின் சாரல்!
தேன்றமிழ் தீண்டும் இன்பம்
தென்னிசை கொஞ்சும் நல்ல
தென்றலின் சுகமாய் தோன்றும்
வான்மதி உன்னைக் கண்டு
வாழ்வெலாம் ஏங்கும் நெஞ்சம்!
நான்தரும் பாடல் கேட்டு
நடமிட வருவாய் தாயே
ஊமைக்கே பொழியும் அன்னை
உறவென என்னை கொண்டு
வரும்பகை யாவும் நீக்கும்
வளர்மதி தாயே உன்னால்
இருவிழி மூடி என்றும்
இனிதென கவிதை கொள்வேன்

இந்த எழுத்து தளத்தில்
கவிதைகளை பதிவது எப்படி தான் என இதுவரை விளங்கவில்லை
படைப்புகளை பதிவிடுவது எப்படி


Selvam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே