இந்திரஜித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இந்திரஜித்
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  30-Apr-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2020
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  19

என்னைப் பற்றி...

உயிர் ஊட்டபட்ட எழுத்துக்களை வரிசை படுத்துவது கவிதை...!!
உவமை எடுத்துரைத்து உயிரான எழுத்தை கோர்ப்பது எமது கடமை...!!!

என் படைப்புகள்
இந்திரஜித் செய்திகள்
இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2025 4:51 pm

வெறும் சோகம் கண்ட மனம்
கரு மேகம் கண்ட வானம்
அது கோழையோ, மழலையோ, மழையோ
உதிரும் நீர் உயிர்துளியே
தயங்கிய மனம் கொண்டு
உளியாய் எழுதுகோலில்
குருதிபோல் மைவழிய
செதுக்கினேன் என் வரிகளை
வாடிய பூ
பூ தேடும் தேனீ
வரண்ட நா
நா தேடும் சொற்கள்
வாடிய உன் மனம்
என்னை தேடும் நீ
உன்னை நாடும் நான்.....

சுழன்றது காலம்

என்‌ மனம் வாடியது
என் விழி தேடியது
மிஞ்சியது காந்தமாய்
ஏகாந்தமே...

மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2025 7:00 pm

கண்மை‌ அழியா‌‌ கண்‌மூடி
இளம்‌‌பிறை இதழ்‌ இரண்டும் இனைந்தே இருக்க...

கொடி போல் முன் நெற்றியில்
சிகை படர
பஞ்சணையில்
படுத்திருக்க...

ஒற்றை வெண்விழி
பார்வை அவளின் மேல்‌
படர்ந்தது

அறையின்‌ தாழ்வார முகட்டிலிருந்து....

ஒற்றை கண்ணனுக்கு எட்டிய பார்வை
இருவிழி இருந்தும்‌
குறுடான கணமே எனக்கு....
‌‌ -இந்திரா



மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2025 9:47 pm

இறுக்கமான பிடி
இருண்ட மனதில்....
உருக்கமான துனை உடைந்த சிந்தனையில்...
உற்ற தோழனாய் அவன்...
மாலை நேரத்தில் மெளன பேச்சும் மரத்தடி நிழலும் அவனுடன்...
அந்தி வேளையில் வரும் அவன் நேசம்
வழுக்காத பாசம்....
சித்தனாய் அவன் வருகை
புத்தனாய் என் மாற்றம்....
ஆருயிர் நண்பா 'தனிமை'...
தனியாக வந்தாய் என்னுடன் இனையானாய் தனியாக செல்கிறாய்...
வஞ்சகன் நானே....
-இந்திரா

மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2023 10:34 am

நீ...
ஓடிய ஓட்டம் ஒரு நாள் நிற்கும்
பாடிய பாட்டும் பள்ளக்கில் ஏறும்
ஆடிய ஆட்டம் ஆறடியில் அடங்கும்
உன்னை தேடிய உறவுகள் வாடும்
உன்னை சாடிய உறவுகள் சப்பரத்தை தாங்கும்....
உன்னை நாடிய கூட்டம் கூடும்
நாள் ஒன்று வரும்....
-இந்திரா

மேலும்

இந்திரஜித் - இந்திரஜித் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2023 1:03 pm

இறுக்கமான மனம் கொண்டவளுக்கு ....
ராமனாக யாம் இருக்க மடல் எழுதினேன்...
பாட்டுக்கு மெட்டு எழுதும் கவிங்கன் அல்ல நான்….
பாட்டுக்கும் விரல் மெட்டுக்கும் கேட்டு எழுதும் கவிஞனும் இல்லை நான்....
என் கூற்றுக்குள் உதிப்பதை பாவையய் போற்றி பாடும் மணாளன் நான்....
மனதை பறிகொடுத்து உறவாட விளையும் ….
நான் உன் வரும்காலமாய்.....!!
-இந்திரா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே