இந்திரஜித் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இந்திரஜித்
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  30-Apr-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2020
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  16

என்னைப் பற்றி...

உயிர் ஊட்டபட்ட எழுத்துக்களை வரிசை படுத்துவது கவிதை...!!
உவமை எடுத்துரைத்து உயிரான எழுத்தை கோர்ப்பது எமது கடமை...!!!

என் படைப்புகள்
இந்திரஜித் செய்திகள்
இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2023 10:34 am

நீ...
ஓடிய ஓட்டம் ஒரு நாள் நிற்கும்
பாடிய பாட்டும் பள்ளக்கில் ஏறும்
ஆடிய ஆட்டம் ஆறடியில் அடங்கும்
உன்னை தேடிய உறவுகள் வாடும்
உன்னை சாடிய உறவுகள் சப்பரத்தை தாங்கும்....
உன்னை நாடிய கூட்டம் கூடும்
நாள் ஒன்று வரும்....
-இந்திரா

மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2023 6:41 am

கொடியது கொடியது கோபம் கொடியது...
பாச நேரத்திலும் பாவ வார்த்தைகளை
காட்ட துடிக்கும் கோபம் கொடியது...
குணம் கொண்ட மனமும் சினம் கண்டவரை விட்டு விளகும்...
பனிந்து பழகும் பாங்கனை கூட பகைவனாய் மாற்றும் கோபம் கொடியது.....
குணத்தை கண்டு
தேகம் சிலிர்த்தாலும்
பாகமாய் சினம் இருந்தால்
மோகமும் மறையும்....
மீன் மறைத்த கதிரை வான் விடிய கண்டேன்....
என் மதி மறைத்த சினத்தை நான் மடிய காண்கிறேன்....
கொடியது கோபம்...
-இந்திரா

மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2023 9:02 am

சற்று உற்று நோக்கிய இரு விழிகள்
என்னை பற்ற வினையும் அவள் விழிகள்
சற்றும் தளராமல் அவள் அழகை செதுக்கிய உளிகள் யாதோ....
தங்கமயிலே தன்னை சிலைவடிக்கும் அழகு அவளிடம்
பெண்மையின் உவமை கண்ட பெண் அழகு அவளிடம்
தாமரை இதழ் கண்டு மொட்டும் புலம்பியது ஊன் உயிரை தாங்கும் நீரில் நீர் எப்படி மிதக்கிராயோ
அவள் தாமரை பாதம் சற்றும் விகிதம் மாறாமல் என் மனதில் பதிய
போதிய இடம் உண்டு
நான் எழுதிய மடல் ஓன்று
அவள் செவியோரம் ஓதும் நாள் ஒன்று
வருமென நாணிய முகம் ஒன்று என்னிடம் உண்டு....
-இந்திரா

மேலும்

இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2023 6:25 pm

*காதல் குருத்து*

முக்கண்ணன் வரும்
குருத்தை கண்டேன்
கண்ணனாக நான் செல்ல
தென்னை போல் வளையும்
பெண்ணையும் கண்டேன்.....

கள்ளாய் அவள் விழி என்னை
மதி மயக்க
பதமாய் பதனிபோல் அருந்த முற்பட்டேன்....

அவளும்
தித்திக்கும் கருப்பட்டியை
என் மனதில் ஊட்ட
உணர்ந்தேன் அவளின் இளஞ்சிரிப்பை...

கிட்டிய இனிப்பு
சொட்டும் காதல் கணிப்பு....
-இந்திரா

மேலும்

இனிது. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள் 24-Jun-2023 10:49 am
இந்திரஜித் - இந்திரஜித் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2023 1:03 pm

இறுக்கமான மனம் கொண்டவளுக்கு ....
ராமனாக யாம் இருக்க மடல் எழுதினேன்...
பாட்டுக்கு மெட்டு எழுதும் கவிங்கன் அல்ல நான்….
பாட்டுக்கும் விரல் மெட்டுக்கும் கேட்டு எழுதும் கவிஞனும் இல்லை நான்....
என் கூற்றுக்குள் உதிப்பதை பாவையய் போற்றி பாடும் மணாளன் நான்....
மனதை பறிகொடுத்து உறவாட விளையும் ….
நான் உன் வரும்காலமாய்.....!!
-இந்திரா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே