கிறுக்கன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கிறுக்கன் |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 09-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 370 |
புள்ளி | : 258 |
தகவல் தொழிலநுட்ப பொறியாளன்
விடைபெறும் நேரத்தில்விதைத்து விட்டாள் ஒரு முத்தத்தைஅடுத்த முறை சந்திப்பில்அறுவடை அளிக்க வேண்டுமாம்ஆயிரம் முத்தங்கள்
தொட்டும் தொடாமலும் நகரும் - உன்
பட்டிழை ஸ்பரிசத்துக்காக
விட்டும் விடாமலும் தொடருது - என்
எட்டுநாள் காய்ச்சல்
பிரிந்திருந்த பொழுதுகளில்
நிகழ்ந்த பெருங்கதையை
சந்தித்த சில நொடிகளில்
சொல்லி விட துடிக்கிறதோ
இரட்டிப்பாய்
இதய துடிப்பு
ஆசை மொத்தமும்
தேக்கி வைத்தேன்
சிரத்தி்ல் சிக்கனமாய்
சின்ன பொண்ணின்
சேலை தீண்டலில்
பற்றிற்று காய்ச்சலாய்
தீக்குச்சி
மாரன் அம்பு
மார்பினில் வந்து
நூறு நூறாய்
நுழைந்து இருக்குமோ?
கால்கள் ரெண்டும்
தரையில் இல்லை
காதல் நோயில்
துவண்டு விட்டேன்!
என்றும் இல்லாத
ஏதோ ஓர் தவிப்பு
இன்று ஏனோ என்
இதய துடிப்புக்குள்
பிணிக்கு மருந்து
பிறந்ததுதான் இருப்பாள்
நேரில் காணும் நேரம்
நெருங்கி விட்டதோ ?
ஆதியிலே வார்த்தை இருந்தது
அது அவள் இதயத்திலே இருந்தது
அது என் வாழ்வின் ஜீவனாய் இருந்தது
வார்த்தையே வாழ்க்கை ஆனது
நல்லதோர் வீணை அவள்
கானம் பாடிய காலங்களில்
கண்மூடி தூங்கி விட்டு
மௌனம் கடைபிடித்த பின்னர்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்
ஓராயிரம் வண்ணங்களால்
ஒளிர்விடும் வானமும்கூட
ஓரளவுக்கு அழகு குறைவுதான்
ஒப்பனையில்லாத இவள் முகத்துடன்
ஒப்பிட்டு பார்க்கும் பொழுதில்
உன்னோடு பழகிய
உன்னத நினைவுகளை
ஒரு மாத காலமாய்
உறிஞ்சி வெளியேற்றி
கவிழ்த்திய குடமாய்
வெற்றிடம் செய்தபின்
குழுவாய் எடுத்துகொண்ட
அழகிய புகைப்படம் ஒன்றில்
ஏதோ ஓரு மூலையில்
ஏகாந்த முகம் கண்டபின்
ஒரு நொடி பொழிதில்
ஓரு கோடி ஜாலமாய்
மூளை முகட்டின்
மூலை முடுக்கெல்லாம்
முழுதாய் நிரம்பிற்று
மொத்த நினைவுகளும்
ஐந்திணை நிலத்திலும்
அறுசுவையும் உண்டு
அகம் மகிழ இருந்தவனுக்கு
உறைபனி தேசமிதில்
உறுதுணை எவருமின்றி
உறக்கமும் எதிரியாயிற்று
நடுநிசி இரவில்
நடுங்கும் குளிரில்
நங்கையின் நினைவாயிருக்கையில்
துயர் மறக்கும் மருந்தென
துளி வார்த்தை பேசிடு
தூங்கும் வரம் தந்திடு