புதுப்பித்தல்

புதியதை பதிய வேண்டும்
பதிந்ததை திருத்த வேண்டும்
திருந்தாவிடில் திருப்பம் வரும்
திருப்பம் விருப்பமற்றதாக அமையும்

மதியில் உதித்ததை மத்தியில் கூற இயலாது
மத்தியில் உதிர்ந்த வாதம் புத்தியில் ஏறாது
உமது சக்திக்கு மீறிய விதி ஒன்றுமில்லை
மதியும் மணமும் திருப்தி அடைய
முக்தி பெற்ற முழு மனிதனாக மாற வேண்டும்.......
இந்திரா....

எழுதியவர் : இந்திரஜித் (26-Nov-25, 3:12 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 6

மேலே