நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

~~~ பச்சிளம் குழந்தைகள் குப்பைகளில் கண்டே
பாலியல் துன்பங்கள் பள்ளிகளில் கண்டே ~~~
~~~ கல்வி நிறுவனங்களில் கொள்ளைகள் கண்டே
கள்ள உறவுகளில் கலாச்சாரம் கண்டே ~~~

~~~ முத்தப் போராட்டத்தில் முன்னுரை கண்டே
முதியோர் இல்லத்தில் முடிவுரை கண்டே ~~~
~~~ போதைக்கு அடிமையான பேதைகள் கண்டே
போலியான உறவுகளின் போதனைகள் கண்டே ~~~

~~~ சாதிக்க பிறந்தவன் சாதியில் கண்டே
சாட்சிகள் பொய்யான சாதனைகள் கண்டே ~~~
~~~ மண உறவுகள் மடியக் கண்டே
மதம் மாற்றும் மடமைகள் கண்டே ~~~

~~~ காதல் பெயரில் காமம் கண்டே
காற்றில் பெருகும் மாசுகள் கண்டே ~~~
~~~ தவறான கொள்கைகள் தவழக் கண்டே
தரணியில் தருமம் மடியக் கண்டே ~~~

~~~ தாய்மொழி தமிழ் அழியக் கண்டே ,
பிறமொழி ஆட்சியில் ஆதிக்கம் கண்டே ~~~
~~~ உலகை உலுக்கும் நோய்கள் கண்டே
ஊழலும் லஞ்சமும் உயரக் கண்டே ~~~

-- கற்குவேல் .பா --

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-Feb-15, 8:30 pm)
பார்வை : 176

மேலே