பனவை பாலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பனவை பாலா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-May-2015
பார்த்தவர்கள்:  593
புள்ளி:  158

என்னைப் பற்றி...

வெகுகாலத்துக்கு முன்
தொலைந்து போயின...
என் காதலும்,
கவிதைகளும்...
தேடிக்கொண்டிருக்கிறேன்.
காதலையும்,
கவிதைகளையும்...
கவிதைகள் கூட
அகப்படுகிறது,
அவ்வபோது.....

என் படைப்புகள்
பனவை பாலா செய்திகள்
பனவை பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2019 11:52 am

ஏதோ ஒரு புள்ளியில்.... யாரோ ஒருவரின் தேடலில் தொடங்கிய இந்த பயணம்...சிலராகி...பலராகி...பல்கி பெருகி பயணித்த தடங்கள்தான் இந்த பரந்த மானுடம்.பயணித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.அப்படிபட்ட காரணங்களும்....தேடல்களுமே இந்த மானுடத்தை செழுமைப்படுத்தியது. இப்போதும் செழுமைபடுத்துகிறது...

பயணங்கள் ஒருபோதும் பயணங்களாய் இருப்பதில்லை. படிக்கட்டுகளாய்தான் மாறுகின்றன. இந்த படிக்கட்டுகளை எவ்வளவு வேகமாய் கடக்கிறோம் என்பதில்தான் ஒரு மனிதனின் வளர்ச்சியும்... தளர்ச்சியும்... இருக்கிறது.

யார் யாரோ செப்பனிட்ட தடங்களில் நாம் இன்று சுகமாய் பயணித்துவிடுகிறோம். செப்பனிட்ட கைகளின் வலியையு

மேலும்

பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2018 10:47 pm

இங்கே சனநாயகம்
ஒரு வழுக்கு மரம்...
மாற்றமென்பது
மரத்தின் உச்சாணி கொம்பில்,
எட்டுவதற்குள்
வழுக்கி விடுகிறது
கையூட்டு...
வழுக்கி விழுபவன்
வாக்காளன்...
***************
தூக்கம் தொலைந்த
என் திண்ணை இரவுகளில்
தூக்கணாங்குருவி கூட்டின்
மின்மினி பூச்சிகளே
வெளிச்சமிடும்,
மின்மினி பூச்சிகளின்
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு,
கூடுகளை தூக்கிலிட்டு
இப்போது
"செல்"அரித்து கொண்டிருக்கிறது
என் தூக்கத்தையும்,
தூக்கணாங்குருவிகளையும்....
******************
"செல்" அழித்த குருவிகள்
வீடு திரும்பாதென்பதை
அறியாது
செல்லரித்த கூடுகள்...

மேலும்

பனவை பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2018 10:47 pm

இங்கே சனநாயகம்
ஒரு வழுக்கு மரம்...
மாற்றமென்பது
மரத்தின் உச்சாணி கொம்பில்,
எட்டுவதற்குள்
வழுக்கி விடுகிறது
கையூட்டு...
வழுக்கி விழுபவன்
வாக்காளன்...
***************
தூக்கம் தொலைந்த
என் திண்ணை இரவுகளில்
தூக்கணாங்குருவி கூட்டின்
மின்மினி பூச்சிகளே
வெளிச்சமிடும்,
மின்மினி பூச்சிகளின்
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு,
கூடுகளை தூக்கிலிட்டு
இப்போது
"செல்"அரித்து கொண்டிருக்கிறது
என் தூக்கத்தையும்,
தூக்கணாங்குருவிகளையும்....
******************
"செல்" அழித்த குருவிகள்
வீடு திரும்பாதென்பதை
அறியாது
செல்லரித்த கூடுகள்...

மேலும்

பனவை பாலா அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2018 2:53 pm

ஒருபொழுதேனும்
என்னையும்,
என் காதலையும்
அவள் கண்டுகொண்டதேயில்லை...
என் காத்திருப்புக்களின்
வலியும்....சுகமும்....
அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

கன்னியவள்
கடைக்கண் பார்வைக்காக,
காத்திருந்து... காத்திருந்து....
கால் கடுத்ததுதான் மிச்சம்,
அவளின் பார்வையில்
எதுவோ இட்டுபோன எச்சம்
நான்.....

என் நேசிப்பை
அவளிடம் வாசித்துவிட
முயலும் தருணங்களில்,
காற்றை மட்டுமே உமிழும்
ஊர்க்குழாய் போலாகிறது
குரல்வளை...

அவளுக்காக
காத்திருந்த பொழுதுகளை,
கருமமே கண்ணென
கடந்திருந்தால்,
காதல் நிரம்பிய
காகிதத்தை சுமந்த
என் சட்டை பை
கொஞ்சம் காசையும் சுமந்திருக்கும்....
ஏனோ,
சில ஆண்களின் க

மேலும்

வருகைக்கும்.... வாசிப்பிற்கும்.... இனிதான கருத்துக்களுக்கும்... மிக்க நன்றி நண்பரே.... 27-Apr-2018 3:39 pm
தங்களது வரிகள் அனைத்து அருமை 👌 24-Apr-2018 10:26 pm
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே... 16-Jan-2018 10:05 pm
Superbly written... Nice one.. Keep Going to reach new heights... 10-Jan-2018 2:32 pm
பனவை பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2018 2:53 pm

ஒருபொழுதேனும்
என்னையும்,
என் காதலையும்
அவள் கண்டுகொண்டதேயில்லை...
என் காத்திருப்புக்களின்
வலியும்....சுகமும்....
அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

கன்னியவள்
கடைக்கண் பார்வைக்காக,
காத்திருந்து... காத்திருந்து....
கால் கடுத்ததுதான் மிச்சம்,
அவளின் பார்வையில்
எதுவோ இட்டுபோன எச்சம்
நான்.....

என் நேசிப்பை
அவளிடம் வாசித்துவிட
முயலும் தருணங்களில்,
காற்றை மட்டுமே உமிழும்
ஊர்க்குழாய் போலாகிறது
குரல்வளை...

அவளுக்காக
காத்திருந்த பொழுதுகளை,
கருமமே கண்ணென
கடந்திருந்தால்,
காதல் நிரம்பிய
காகிதத்தை சுமந்த
என் சட்டை பை
கொஞ்சம் காசையும் சுமந்திருக்கும்....
ஏனோ,
சில ஆண்களின் க

மேலும்

வருகைக்கும்.... வாசிப்பிற்கும்.... இனிதான கருத்துக்களுக்கும்... மிக்க நன்றி நண்பரே.... 27-Apr-2018 3:39 pm
தங்களது வரிகள் அனைத்து அருமை 👌 24-Apr-2018 10:26 pm
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே... 16-Jan-2018 10:05 pm
Superbly written... Nice one.. Keep Going to reach new heights... 10-Jan-2018 2:32 pm
பனவை பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 6:11 pm

உள்ளே மொத்தம் நாலு பேர்... பார்ப்பதற்கு அவ்வளவு ஒன்றும் நல்லவர்களாக தெரியவில்லை. அந்த பெண் தனியே நடுங்கி கொண்டிருந்தாள். தாலி ஒன்று கட்டிலின் மேலே கிடந்தது.
" யார்ரா நீங்க... என்ன பண்றீங்க...?"
"ஸார்... என்ன காப்பாத்துங்க ஸார்... இவன் என்னை ஏமாத்தி கூட்டியாந்துட்டான் ஸார்... என்னோட வாழ்க்கையே போச்சு ஸார்..." அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.
"யோவ்... இவங்கள கூட்டிபோய் வண்டியில ஏத்துய்யா..."
போலிஸ் ஸ்டேஷன்...
" கான்ஸ்டபிள்... இவங்க அப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லு.

மேலும்

பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 12:07 pm

மழை...
துளித்துளியாய்
தித்திக்கும் தேன்துளியாய்
நான் ரசித்த அதே மழை...
மெல்லிய சத்தத்துடன்
பூமிதொட்டு
மண்வாசனை பரப்பிய மழை....
சடசடவென்று பெய்துவிட்டு
அதிகாலையில்
வாசலில் நீர்தெளிக்கும்
அம்மாவை நினைவுபடுத்திய மழை...

முதல்துளியை
முகத்தில் முத்தமிடசெய்து
பரவசப்பட்ட பன்னீர்மழை...
இன்றோ,
கழுத்தளவு தண்ணீரில்
கலங்கடிக்கும் கண்ணீர் மழை...
கூரைவழி சொட்டியநீரில்
குடம்நிறைத்து
குதூகலித்த மழை...
இன்று,
கூரைபிரித்து
குடிசை நிரப்பியதும் அதே மழை...

என் பால்யத்தின் கரைகளில்
காகிதகப்பல்கள் மிதந்த மழைநீரில்...
இன்று,
கார்கள் மிதக்கிறது,
நான்விட்ட
காகிதகப்பலேறி
கரைஒதுங்கிய எறும்

மேலும்

தங்களது இனிதான கருத்துக்களில்... உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே... 28-Dec-2017 6:14 pm
தோற்றுப்போன மனிதங்கள் வீதியில் நிர்வாணமாகும் போது இயற்கையும் சீற்றமாய் மனிதனுக்குள் கண்ணீரை சிந்தி உள்ளங்களுக்குள் அவைகளை சுவாசமாய் நுழைத்தது. இந்த வானம் இடியும் அந்த நாள் வரை நல்ல எண்ணங்கள் உலகை ஆட்சி செய்தால் பூங்காற்றும் ஆயுளை நீடிய மடலை கொண்டு வந்து சேர்க்கும். அனர்த்தங்களின் போது அணை கட்டிய மனிதம் இயல்பான வாழ்க்கையில் கிடைப்பதில்லை என்பதே என்றும் உறுத்தல். ஆலயம் எங்கும் மனிதர்கள் குடித்தனம் தெருவெங்கும் கடமைகளின் தூய்மைகள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 11:19 am
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன். 08-Dec-2017 2:18 pm
வருகைக்கும்...வாசிப்பிற்கும் இனிதான கருத்திற்கும் நன்றி நண்பரே.... 08-Dec-2017 2:15 pm
பனவை பாலா - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த ம

மேலும்

நன்றி 28-Dec-2017 8:57 am
மின்னஞ்சல் முகவரியை இங்கே பகிர்வதற்கான ஆப்ஷன் எழுத்து.காம்மில் இல்லை. அதனாலேயே உள்பெட்டியில் பகிர்கிறோம். மின்னஞ்சல் முகவரியை உங்களது உள்பெட்டிக்கு அனுப்பியிருக்கிறோம். நன்றி. 27-Dec-2017 3:36 pm
மின்னஞ்சல் முகவரியை இங்கேயே பகிரலாமே. 27-Dec-2017 1:52 pm
மின்னஞ்சல் முகவரியை உங்களது உள்பெட்டிக்கு அனுப்பியிருக்கிறோம். நன்றி. 26-Dec-2017 5:13 pm
பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 12:07 pm

மழை...
துளித்துளியாய்
தித்திக்கும் தேன்துளியாய்
நான் ரசித்த அதே மழை...
மெல்லிய சத்தத்துடன்
பூமிதொட்டு
மண்வாசனை பரப்பிய மழை....
சடசடவென்று பெய்துவிட்டு
அதிகாலையில்
வாசலில் நீர்தெளிக்கும்
அம்மாவை நினைவுபடுத்திய மழை...

முதல்துளியை
முகத்தில் முத்தமிடசெய்து
பரவசப்பட்ட பன்னீர்மழை...
இன்றோ,
கழுத்தளவு தண்ணீரில்
கலங்கடிக்கும் கண்ணீர் மழை...
கூரைவழி சொட்டியநீரில்
குடம்நிறைத்து
குதூகலித்த மழை...
இன்று,
கூரைபிரித்து
குடிசை நிரப்பியதும் அதே மழை...

என் பால்யத்தின் கரைகளில்
காகிதகப்பல்கள் மிதந்த மழைநீரில்...
இன்று,
கார்கள் மிதக்கிறது,
நான்விட்ட
காகிதகப்பலேறி
கரைஒதுங்கிய எறும்

மேலும்

தங்களது இனிதான கருத்துக்களில்... உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே... 28-Dec-2017 6:14 pm
தோற்றுப்போன மனிதங்கள் வீதியில் நிர்வாணமாகும் போது இயற்கையும் சீற்றமாய் மனிதனுக்குள் கண்ணீரை சிந்தி உள்ளங்களுக்குள் அவைகளை சுவாசமாய் நுழைத்தது. இந்த வானம் இடியும் அந்த நாள் வரை நல்ல எண்ணங்கள் உலகை ஆட்சி செய்தால் பூங்காற்றும் ஆயுளை நீடிய மடலை கொண்டு வந்து சேர்க்கும். அனர்த்தங்களின் போது அணை கட்டிய மனிதம் இயல்பான வாழ்க்கையில் கிடைப்பதில்லை என்பதே என்றும் உறுத்தல். ஆலயம் எங்கும் மனிதர்கள் குடித்தனம் தெருவெங்கும் கடமைகளின் தூய்மைகள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 11:19 am
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன். 08-Dec-2017 2:18 pm
வருகைக்கும்...வாசிப்பிற்கும் இனிதான கருத்திற்கும் நன்றி நண்பரே.... 08-Dec-2017 2:15 pm
பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2017 10:58 am

உன்னிடமிருந்து
எனக்கான எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை,
கண்டவுடன்
தலை கலைத்து
"ஏஞ்செல்லம்" என்றோர் அழைப்பு...

கன்னந்தடவி
வாயில் இட்டுகொள்ளும்
ஒர் முத்தம்...

எலும்புகள் நொறுங்கும்
ஒர் இறுக்கமான அணைப்பு...
உன்னை விட்டு
விலகும் தருணங்களில்
உச்சி முகர்ந்தொரு முத்தம்...

இவை தவிர
வேறு யாதொன்றுமில்லை,
உன்னிடமிருந்து
எனக்கான
எதிர்பார்ப்புகள் ...

மேலும்

வரவிற்கும், இனிதான கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 31-Jul-2017 4:40 pm
மனம் நிறைந்தொரு அழைப்பு முத்தத்தோடொரு அணைப்பு போதும்தான் .இது சிறப்பு ! 30-Jul-2017 1:03 pm
பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 5:03 pm

அடங்கமறு...
ஆர்ப்பரி...
விழித்தெழு...
வீறுகொள்...
காளையை பூட்டிய கயிறுகள் தெறிக்கட்டும்,
எம்தமிழின காளைகளின் திமிறு ஜெயிக்கட்டும்,
ஏறுதழுவுதல் எம்தமிழினத்தின் பெருமை,
அதை தடுப்பதற்கு எவர்க்கும் இல்லை உரிமை....

இங்கே தட்டினால் கதவுகள் திறக்காது,
முட்டினாலொழிய முடிவுகள் கிடைக்காது,
சோர்வதற்கு தமிழர்கள் ஒன்றும்
கலப்பின காளைகள் கிடையாது,
காங்கேயம் காளைகள்....
சீறிப்பாய்ந்தால் சிறகு முளைக்கும்,
சீற்றங்கொண்டால் சிலுவாய் தெறிக்கும்....

புலியை முறத்தால் விரட்டிய
மறத்தமிழச்சியின் மக்கள் நாங்கள்,
காதலுக்கென்று,
வீரத்திற்கென்று,
அறம்...பொருள்...இன்பமென்று,
தரம்பிரித்து...தமிழ் குட

மேலும்

மிகச்சரியே, மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள் - மு.ரா. 18-Jan-2017 7:00 pm
பனவை பாலா - பனவை பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2015 4:46 pm

அது மிக நீண்டதொரு விவாதம்...

இடைவெளி இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது.அந்த விவாதத்தில் கடவுள் முக்கிய பங்கேற்றிருந்தார்.இருக்கிறாரா...? இல்லையா.?என்பதே அது.

இருக்கிறார் என்பது அவர் வாதம்... இல்லை என்பது என் வாதம்... தொடர்ந்தது எங்கள் விவாதம். இருக்கிறார் என்பதற்கு அவர் நூறு எக்ஸாம்ல்ஸ்...இல்லை என்பதற்கு நான் நூறு எக்ஸாம்ல்ஸ்....

இருவரும் அவரவர் கொள்கையை விடுவதாயில்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு வாதம்தான் நியாயம்...எனக்கும் அப்படித்தான்...

எப்போது...எதற்காக... அந்த வாதம் தொடங்கியது.

எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை.இந்த அரசாங்க வேலையும் அப்படித்தான்...மூன்று வருட முயற்சிக்கு ப

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (102)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
சஜூ

சஜூ

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (103)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
user photo

L.S.Dhandapani

chennai
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (103)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி
மேலே