நிர்வாண உலகம்

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

எழுதியவர் : பழனி குமார் (10-Sep-25, 3:08 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 16

மேலே