நிர்வாண உலகம்
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
பழனி குமார்
10.09.25