உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்கு - ஆசாரக் கோவை 20

இன்னிசை வெண்பா

உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் ...கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு!. 20

- ஆசாரக்கோவை

பொருளுரை:

ஒருவன் உண்ணும்பொழுது கிழக்கு திசை பார்த்து அமர்ந்து தூங்காமல், அசைந்தாடாமல் நன்றாக இருந்து எவ்விடத்தும் வேறொன்றனையும் பார்க்காமல், வேறொன்றும் பேசாமல் உண்கின்ற உணவைத் தொழுது கையாலெடுத்து சிந்தாமல் நன்கு உண்ண வேண்டும்.

கருத்துரை:

கிழக்கு மங்கலத் திசையாதலின் உணவு உண்பவன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையவனாக உண்ணவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-25, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே