அனாதைகள் என்றழைத்தால் என் மனது நிரம்பி வழிகிறது வருத்தமிகு...
அனாதைகள் என்றழைத்தால்
என் மனது நிரம்பி வழிகிறது
வருத்தமிகு காட்சிகளளால் !
ஆழ் கடல் முழுதும் உள்ள
சோக அலைகள் எழுகிறது !
ஆதரவற்றவர் என உச்சரித்தால்
ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக !
நம்பி வந்தவருக்கு உதவிடுவார்
என்றெண்ணி இருந்த எவரும்
யாசித்து காத்திருந்த பலரை
யோசிக்க வைக்குது இந்நிலை !
வாழும் மனிதர்களை
வையகமே நினைத்திடு !
வறுமையின் சிக்கி தவிப்போரை
ஆதரவின்றி அகிலத்தில் வாழ்வோரை
நல் உள்ளங்களே இயன்றதை செய்திடுக !
பதனி குமார்