நெஞ்சோடு அடர்ந்தவளே

ஆயிரம் மைல்கள் கடந்தாலும்
அடங்காத உன் நினைவலைகள்
தொலைவில் இருந்தாலும்
அருகில் நின்றாலும் எந்தன்
நெஞ்சோடு அடர்ந்து படர்ந்திட்டவளே
எந்தன் விழிகளில் அரங்கேறி
மனதில் மெருகேறிவிட்டவளே
அதிகாலை விடியலும் அந்தி
சாய்ந்த இரவும் சொல்லும்
உந்தன் பிம்பம் எந்தன்
ஐந்தடி ஆறு அங்குலத்தோடு
கலந்திட்டது என்று.

எழுதியவர் : நிஜாம் (22-Jul-22, 11:29 am)
பார்வை : 302

மேலே