மென் விரலின் ஸ்பரிசத்தில்

மலர்தொட்ட பூந்தென்றல் மௌனமாய் வீச
மனம்தொடும் புன்னகை யில்நீயும் வந்து
மலர்பறிக்கை யில்மென் விரலின் ஸ்பரிசத்தில்
மார்கழியா னேன்நான் குளிர்ந்து !

---ம ம ம மா --அடிமோனை அழகு செய்யும் கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-22, 11:18 am)
பார்வை : 68

மேலே