தோள்தழுவும் கூந்தலோ தென்றலின் வண்ணச் சோலை
சலசலக்கும் ஓடைச்சந் தம்நின் கவிதை
மலர்மலரும் போதிலுன் மௌனயெழில் புன்னகை
தோள்தழுவும் கூந்தலோ தென்றலின்வண் ணச்சோலை
வாள்வீசும் காதல் விழி
--- இரு விகற்ப இன்னிசை வெண்பா-
சலசலக்கும் ஓடைச்சந் தம்நின் கவிதை
மலரிலுன் புன்னகை மௌனம் --மெலிதாக
தோள்தழுவும் கூந்தலோ தென்றலின்வண் ணச்சோலை
வாள்வீசும் காதல் விழி
---- இரு விகற்ப நேரிசை வெண்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
