கண்ணில் கயல்துள்ளும் காதல் ராதை வந்தாள்
கண்ணன் குழலிசை காற்றில் தவழ்ந்துவர
கண்ணில் கயல்துள்ளும் காதல்ரா தைவந்தாள்
வெண்நிலா வீசும் யமுனா நதிக்கரையில்
கண்கள் மயங்கினாள் கண்ணன் மடியினில்
பெண்ணெழில் பூவிழிரா தை

