முகம்மது ஹாரித் - சுயவிவரம்
(Profile)
 
                                
வாசகர்
| இயற்பெயர் | : முகம்மது ஹாரித் | 
| இடம் | : இலங்கை | 
| பிறந்த தேதி | : | 
| பாலினம் | : | 
| சேர்ந்த நாள் | : 05-Jun-2016 | 
| பார்த்தவர்கள் | : 124 | 
| புள்ளி | : 0 | 
துவண்ட நெஞ்சில் ஆறுதல் 
****துடிப்பாய்த் தேடி அலைந்திடும் !
அவல நிலையில் நசுங்கிட 
****அபயக் குரலும் எழுப்பிடும் !
சிவந்த விழியில் வேதனை 
****தெரிந்த இமையும் மூடிடும் !
கவலை மறக்கச் செய்திடும் 
****கண்ணீர் துடைக்கும் கவிதையே !
அன்னமே தூதுசென்(று) அந்திப் பொழுதினில் 
மன்னன் மனமறிந்து வா,விரைந்து!- துன்பத்தில் 
வாடும் நிலைதனைச்சொல் வாய்விட்டு! என்னுடன் 
கூடும்நன் னாளைக் குறி.
தப்பென்ன நீயேசொல்! தங்கமாய்த் தாங்கினேன் 
அப்படியும் குற்றமென்றா லாகுமோ? - அப்பப்பா !
போதுமிவ் வாழ்வெனப் போராடி நொந்துவிட்டேன் 
ஏதுநான் செய்தேன் எதிர்த்து ?
இமைமூட வில்லை இளைத்திட்டா ளென்றே
அமைதியாய்க் கூறி அமர்வாய் !- குமைந்து 
குமுறுமென் நெஞ்சக் கொதிப்பைத் தணிக்க
அமுதாய் வருவா னவன் . 
வாராமல் போனானேல் மாய்த்துக்கொள் வேனுயிரைத்
தீராப் பழிச்சொல்லும் சேர்ந்திடும்! - வீராப்பு
வேண்டா மெனவுரைத்து வேண்டி விரும்பியே 
மீண்டுவரச் செய
ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும்
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும் 
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும் 
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் !
இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும் 
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும் 
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும் 
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ?
ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும் 
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும் 
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும் 
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே !
துளி 
துளியாய் இம் 
மண்ணில் விழுந்த
மாணிக்கமே !
முதற் கோடி மனிதனுக்கும்  
கடை கோடி மனிதனுக்கும் 
கடவுள் அளித்த வரமே 
மழையே !
மண்ணில் நீ வீழ்ந்து 
மனிதனை பசி போரில் 
வெற்றி பெற செய்பவனே 
விவசாயிகளின் விருப்ப 
புதல்வனே !
அன்னையாய் நீ 
எங்கள் தாகம் தீர்க்க 
விண்ணில் இருந்து  
மண்ணில் இறங்கி வந்த 
அமுதசுரபியே !
தரையில் வீழ்ந்து 
தரணியில் ஓடி 
திக்கெட்டு திசைகளையும் 
ஆள்பவனே நீ இன்றி 
அமையாது இவ்வுலகம் 
ஒருபோதும் !
உணவும் ஊராது 
உயிர்களும் தங்காது
உன் துணையின்றி 
இம்மண்ணில் !
 உரக்க சொல்வோம் 
 உணர்ந்து கொள்ளவோம் 
 மழை நீர் சேகரிப்பு 
 நம் ஆயுள் நீட்டிப்பு 
நண்பர்கள் (3)
 
                                                    செந்தமிழ் பிரியன் பிரசாந்த்
வந்தவாசி [தமிழ்நாடு ]
 
                                                    அன்னை பிரியன் மணிகண்டன்
வந்தவாசி (தமிழ்நாடு)
 
                                                    Shyamala Rajasekar
சென்னை
இவரை பின்தொடர்பவர்கள் (3)
 
                                                    Shyamala Rajasekar
சென்னை
 
                                                    அன்னை பிரியன் மணிகண்டன்
வந்தவாசி (தமிழ்நாடு)
 
                                                     
                     
 
					 
 
					 
 
					