வ.கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வ.கார்த்திக் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Nov-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 401 |
புள்ளி | : 51 |
சதுமறை சற்றறியேன்;
சகருவம் தான் வேண்டேன்
மூதறிவு படைத்திலேன்;
முத்தமிழும் கற்றிலேன்
கடுகளவும் கவியறியேன்;
கடுநடை யான் சொல்லேன்
மந்தி, மனம்சொல்லும் ;
பித்துரை என்செய்வேன்
வன்மொழி யாதிருப்பினும்
வசைப்பா யாதிருப்பினும்
பித்தன் உளரலேன;நீவிர்
பிழை பொறுப்பீர்
பின்னேந்தன் அவையடக்கம் தான் ஏற்பீர்
நின்னை நெருங்கி அணைத்திட வந்தேன்; இனி
நிகர்புத கவிகள் இயற்றிட வந்தேன்
என்னைத் தழுவி வரமொன்று தாராய்: தனி
எழிலே! கன்னித் தமிழே!
உன்னை நிகர்த்த மொழிகளும் உளவோ; உனை
உரைத்திட புலவர் நெடுமொழி எனவோ
அன்னைத் தமிழென முழங்கினர் பலவோ;அதை
அடியுறை அமைந்திட தொழவோ
சிந்தைவழி சேர்ந்தாள சீரோடு வருவாய்; யான்
செப்புமொழி யாவையுமே சிறந்துயர அருள்வாய்
வெற்பினுயர் நின்றிடாது வீசேற தருவாய்; பொருள்
பொற்புடை கவி யனைத்தும்
தஞ்சம் புகவந்தேன் தழுவாயோ மொழிமகளே
விஞ்சும் கனவுநிலை விளங்காயோ கனிவாயோ
நெஞ்சமெலாம் நீயிருக்க நிலையேதும் கூறாயோ
வஞ்சியாது வரம் தாராயோ
அங்கம் சிலிர்க்கும், நல்ல
அதிகாலைப் பொழுதில்
அல்லி இதழ்விரிக்கும், பின்
அசைந்தாடி மணம்பரப்பும்
அசுணம் கண்விழிக்கும், அங்கு
கின்னரம் பண்பாடும்
தேகம் மயங்க, இளைய
தென்றல் வீசிடும்
தாழை தலையசைக்கும், அழகு
தாமரை தான்சிரிக்கும்
தேன்போல இனித்திருக்கும், மனம்
தெவிட்டாத இவ்வழகு
வாசமலர் மணம்கண்டு, சின்ன
வண்டுகள் பறந்துவரும்
வண்ணமலர் நிறம்கண்டு, அந்த
வானவில்லும் மனம் மயங்கும்
வாழ்கை இதுதானென்று, உடல்
வாடும்வரை மலர் சிரிக்கும்
போகும் இடமெல்லாம், எழில்
பொன்வண்ண மகரந்தம்
காணும் இடமெல்லாம், பொழில்
கவின்மிகு மலரங்கம்
கண்கொண்டு பார்த்தாலோ, எனக்கு
காலநேரம
மாற்றான் பாதங்களுக்கு மலர் தூவியே
போற்றா திருந்தோம் புகழ் வாழ்வையே
ஈற்றால் வரும் பேற்றை எண்ணிடாமலே
ஆற்றார் புறக்கணித்து அறம் இழப்பதோ
பற்றார் பழியுற பயம் கொண்டே
சுற்றார் இகழ்ந்திட பகை கொண்டே
கற்றார் கடிந்திட கலி கொண்டே
நற்றேதும் புரிந்திளீர் நுளை யுற்றீர்
கூற்றான் வருங்காலை குமைந்திடுவோம் நிதம்
ஆற்றா மனத்துயரில் அகப்படுவோம்
உற்றார், தூற்றத் துடிபட மிதிபடுவோம்
ஏற்ற ஊழ்வினை முந்துறவே மடிந்திடுவோம்
நாற்ற நல்லுடல் நலமழுக, அழனமென
சாற்றிடுவோம் சதைத் தீயில் ஏற்றிடுவோம்
காற்றோடு அலைந்திட கலந்திடுவோம், இகம்
வீற்றாது பேயெனத் திரிந் திடுவோம்
மாற்றவியலா மாயப் பிறப்பத
யாது படைத்தாய் நெஞ்சே – உனை
யாரும் முழுதாய் உணராதிருக்க
தீது தீக்குறி எல்லாம் – நின்னை
திணுக்குற, பிழைத்திடல் கண்டேன்
மோதும் ஊழ்வினைத் தானும் – உனில்
மூளாது செய்திடல் வேணும்
ஓதும் நின் அறிவுரைக்கே – உளம்
ஒத்திசைக்க, திடம் காணும்
காரென இருண்ட நெஞ்சம் – பலர்
காட்டிட கவலை யுற்றேன்
கடிதென திரண்ட வஞ்சம் – உயிர்
துடித்திட மருட்சி யுற்றேன்
கூரென பிறந்த சொல்லால் – உனை
குத்திக் கிழித்திடக் கண்டேன்
“ பாரடா ” என நீயும் – பக்குவம்
கொண்டிட, மானுடம் வென்றேன்
சீரென சிந்தை கொண்டு – நெஞ்சம்
சிரித்திட அன்பு செய்வார்
பாரினில் பல்லோர் உளரே – இறைவன்
படைத்திட்டான் நீயொக்
அன்பாய் எந்தன் விடல்கள் பிணைத்த
அத்தனை நொடியும் கசக்கும் நிலையேன்
அவளை மறக்க நிலையுமின்றி யான்
அலைந்து திரியும் மனமும் இனியேன்
ஒன்றாய்ச் சுழன்ற நாட்கள் எல்லாம்
உணர்வாய்க் கலந்து நினைவை சுடுதே
ஒருமுறை மீண்டும் வாழ்ந்து பார்க்க
புதிராய் மனமும் விதைகள் இடுதே
விதிதான் இதுவென ஏற்கத் துணிந்தால்
விரும்பிய இதயம் வலியும் பெறுதே
சரிதான் போகட்டும் என்று சொல்ல
சற்று மனமும் முரண்படும் இதுயேன்
கண்ணீர் ஆயிரம் கடலாய் ஓடியும்
காதல் காயம் கரைய மறுக்குதே
கடவுள் வந்து கேட்கும் பொழுதிலும்
காதல் வேண்டும் என்றே சொல்லுதே
அல்லிடைக் காத்த எனதாருயிர் நண்பா...! யான்
சொல்லிடத் தகுமோ...! நின் சோதிமிக்க நட்பதனை;
உள்ளிடைக் கொண்ட உணர்வெல்லாம், எந்தன்
ஊனிடைக் கலந்து உயிராய் நிற்பதன்ரோ...!
புல்லிடைப் பிறக்கின்ற பனித்துளியும் பெரிதாமோ
பூவிடைப் பிறக்கின்ற தேன்துளியும் பெரிதாமோ
கல்லிடைப் பிறக்கின்ற நீர்த்துளியும் பெரிதாமோ
நம்மிடைப் பிறக்கின்ற நட்பன்ரோ பெரிதினும்பெரிது
மண்ணிடைப் பிறந்த உயிரெல்லாம், உந்தன்
மாதகு நட்பினைப் பெற்றிடுமோ; எந்தன்
கண்ணிடைக் கலந்த கருமணியோ...! நீஎன்
கவியிடைக் கலந்த தமிழ் மொழியோ...!
பண்ணிடைப் பிறந்த இசைகூட, உந்தன்
பாசமொ
“மக்களால் மக்களுக்காக மக்களே உருவாக்கியது தான் மக்களாட்சி ”
சற்று பழக்கப்பட்ட வாசகம்தான் .
“மாக்களால் மக்களுக்காக மாக்களே நடத்துவுது”
சற்று பழகவேண்டிய வாசகம் .
தன்னைத் தானே மறந்துபோன மனிதா, உந்தன்
தன்மானம் விற்கவும் துணிந்தாயோ ...?
முன்னை வாழ்ந்த அரசியல் தலைவர்கள்
மூச்சின் கனலை அறியாயோ ...?
அரசியல் சாக்கடைப் புழுக்களாய் நீயும்
அலைந்து திரிய நினைத்தாயா ...?
மனிதஇனத்தின் மகத்துவம் மறந்து
மடையர்களாகத் திரிந்தாயா ...?
தீரம்;வீரம்;வாதம்; மறந்தே நிதம்
தீவிரவாதம் வளர்த்தாயா ...?
தகுதியில்லாத் தலைவர்கள் புகழை
தரணியெங்கும் உரைத்தாயா ...?
தன்பெண்டு தன்பிள்ளை சீரழிய நீயும்
உனக்காய் நானும் எனக்காய் நீயும்
இருந்தால் போதும் இதயம் வாழும்
நீயும் சென்றாய் நினைவைச் சுமந்தேன்
நிகழும் தருணம் எனையே மறந்தேன்
எனக்காய்ப் பிறந்தாய் எழிலாய் மலர்ந்தாய்
இருந்தும் ஏனோ பிரிவைக் கொடுத்தாய்
ஆழிப்பேரலை வந்தாலென்ன
அகிலம் தீயில் வெந்தாலென்ன
நாழிகை கடந்து சென்றாலென்ன
நானிலம் என்னைக் கொன்றாலென்ன
ஊனிலும் உயிரிலும் ஒன்றாய்ப்போன
தேனினை மறவேனே; எந்தன்
தேவதை இவள்தானோ
இடைவெளியும் குறையுமென
இவள்விழியும் கரையுமென
எனைத் தேடியே அலையுமென
நிமிடங்களைக் கரைத்தேனே; இவள்
நினைவுகளால் தவித்தேனே
பகல் முழுதும் தனியாக
இவள் நினைவும் துணையாக
துகள் துகளாய் உடைந்தேனே
மன
அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய்
நெடுந்தூரம் விரல்கோர்த்து நடைபோட - எனை
நெருங்காமல் விழியாலே சிறைபோட
கடந்தோடும் நொடியாவும் சுகமாக - அவள்
கலந்தாலே நெஞ்சோடு இதமாக
இதழ்தந்த மொழியாவும் கவியாக - இன்பத்
தமிழ்தந்த சுவையாவும் அவளாக
எனைதந்து மனம்வென்று பதியாக - சங்கத்
தமிழ்கொண்டு இவையாவும் வரியாக
இமைக்காது அவள்தூக்கம் காண்பேனே - மண்ணில்
இவள்போல அழகேது என்பேனே
தமிழ்கூட அவளென்றே சொல்வேனே - கண்ணில்
இருகாட்சி தமிழொன்று அவளிரண்டு என்பேனே
இரவோடு எழில்கொண்ட நிலவோடு - கார்
முகிலோடு மணம்கொண்ட மழையோடு
இணைகூற எதுவுண்டு என்றாலோ - கன்னித்
தமிழுண்டு
பல்லுயிரின் கூட்டமைப்பாய்
பசுமையதன் ஆர்பரிப்பாய்
தொல்லுலகம் கண்டதெல்லாம்
தூய்மையான தேசமன்றோ
நெல்லுறைந்த கழனிகளும்
நீருறைந்த நெடுநிலமும்
அல்லுறைந்த கானகமும்
அதிலுறைந்த தானியமும்
விண்ணுறைந்த கார்முகிலும்
விதையுறைந்த நன்னிலமும்
மண்ணுலகம் கண்டதன்று
மறைந்தழியும் நிலையுமின்று
முன்னை வளர்த்த இயற்கையதை
முழுதாய் கொல்லத் துணிந்தோமே
மண்ணை இன்று மலடாக்கி; பல
மாசுக்குவியலை வளர்த்தோமே
விண்ணை முட்டும் வனமெல்லாம்
வீணாய் வெட்டிக் களைந்தோமே
மண்ணை சுரண்டி நதியெல்லாம்
மறையும் நிலையை கொணர்ந்தோமே
உயிரி