வேண்டும் காதல் மீண்டும்

அன்பாய் எந்தன் விடல்கள் பிணைத்த
அத்தனை நொடியும் கசக்கும் நிலையேன்
அவளை மறக்க நிலையுமின்றி யான்
அலைந்து திரியும் மனமும் இனியேன்

ஒன்றாய்ச் சுழன்ற நாட்கள் எல்லாம்
உணர்வாய்க் கலந்து நினைவை சுடுதே
ஒருமுறை மீண்டும் வாழ்ந்து பார்க்க
புதிராய் மனமும் விதைகள் இடுதே

விதிதான் இதுவென ஏற்கத் துணிந்தால்
விரும்பிய இதயம் வலியும் பெறுதே
சரிதான் போகட்டும் என்று சொல்ல
சற்று மனமும் முரண்படும் இதுயேன்

கண்ணீர் ஆயிரம் கடலாய் ஓடியும்
காதல் காயம் கரைய மறுக்குதே
கடவுள் வந்து கேட்கும் பொழுதிலும்
காதல் வேண்டும் என்றே சொல்லுதே

எழுதியவர் : வேத்தகன் (24-Dec-18, 10:47 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 591

மேலே