வஞ்சியாது வரம் தாராயோ
நின்னை நெருங்கி அணைத்திட வந்தேன்; இனி
நிகர்புத கவிகள் இயற்றிட வந்தேன்
என்னைத் தழுவி வரமொன்று தாராய்: தனி
எழிலே! கன்னித் தமிழே!
உன்னை நிகர்த்த மொழிகளும் உளவோ; உனை
உரைத்திட புலவர் நெடுமொழி எனவோ
அன்னைத் தமிழென முழங்கினர் பலவோ;அதை
அடியுறை அமைந்திட தொழவோ
சிந்தைவழி சேர்ந்தாள சீரோடு வருவாய்; யான்
செப்புமொழி யாவையுமே சிறந்துயர அருள்வாய்
வெற்பினுயர் நின்றிடாது வீசேற தருவாய்; பொருள்
பொற்புடை கவி யனைத்தும்
தஞ்சம் புகவந்தேன் தழுவாயோ மொழிமகளே
விஞ்சும் கனவுநிலை விளங்காயோ கனிவாயோ
நெஞ்சமெலாம் நீயிருக்க நிலையேதும் கூறாயோ
வஞ்சியாது வரம் தாராயோ