Dr.V.K.Kanniappan- கருத்துகள்
Dr.V.K.Kanniappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்(கு) அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்கா(து) ஒடுக்கிடுவோம்!
கலித்தளை
13 (87%)
வணங்கா(து) ஒடுக்கிடுவோம்! = மா முன் நிரை - கொச்சகக் கலிப்பா எனலாம்!
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
சான்று:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசி வாயவே. (அப்பர் தேவாரம்)
மேலேயுள்ள வாய்பாட்டில் ஒரு பாடல் முயற்சியுங்கள்.
கலிவிருத்தம்
(மா விளம் விளம் விளம்) நன்று!
மூன்றும் நல்ல பாடல்கள்!
ஆட்சியுற்றே ஆர்ப்பரிப்போர்
ஊரார்க்கும் -- ஆக்கமிலா
நேரிசை வெண்பா
கானகத்தின் பச்சை கரியமிலம் நீக்குவதால்
வானம் உயிர்க்காற்றை வாங்குவதால் - மானிடரும்
வாயதன் தேவைக்காய் வாய்த்தவனம் தீர்த்திட
தேயமே காய்ந்திடவோ தீர்வு!
அருமையான கட்டளைக்கலித்துறை! வாழ்த்துகள்.
ஒரு விகற்பக் குறள் வெண்பா
என்னுள் நிறைந்தே எனக்காக நீபிறந்தாய்
உன்னுள் உயிராய் உளேன்!
இருவிகற்ப நேரிசை வெண்பா
சிக்கனம் கொண்டவர் சிந்தையில் பார்க்கையில்
இக்கணம் இன்பம் எளிதினில் - சொக்கி
முகத்தில் சுழிப்பின்றி முன்னே அடைவார்
அகத்தில் வரவாம் அறிவு!
நேரிசை வெண்பா
நாயினை வைப்பராம் நன்றாக வீடுகளில்
தாயினைத் தூற்றுவர் தாங்காது-- தூயவர்,
நேயமிகுந் தோரென நின்றிடும் நீசரை
பேயினம் என்றுநீ கூறு!
கட்டளைக் கலித்துறை)
நேயமி குந்தோராய்ப் பூமியில் சேர்ந்திட்ட நீசரினம் ;
நாயினை வைப்பராம் சோடித்து வீட்டின் நடுவறையில்!
பேயின மாய்த்தி கழுமிவ் வரக்கப் பிறப்பினங்கள் ;
தாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் தரங்கெடவே!
கட்டளைக் கலித்துறை
சந்திரன் போலவே பல்வகைக் கோள்கள் படைத்துவிட்டார்
முந்தைய நாட்களின் ஞானியர் கண்டிரா ஞானியானார்
பிந்தைய நாட்களில் என்றுமே வாழக் கனவுகண்டோர்
விந்தையாய்ப், பூமியின் பல்வளம் எங்கே விழிப்பதுமே!
கலிவிருத்தம்
(மா / விளம் / விளம் / விளம்)
ஆனைக் காவுறை அண்ணலை நினைத்திட
ஏனை யின்னலும் இலாதநி லையுறும் ;
வானைக் கேட்பினும் வரமது கிடைத்திட
ஆனைக் காவுறை அகிலம வனருளே!
நன்று!
தகுந்த வாய்பாட்டுடன் அமைந்த கலித்துறை நன்று!
குறள் வெண்பா
தந்தைக்(கு) அவர்மகனாற் றும்நன்றி எப்பொழுதும்
முந்தியவர் எண்ணம் முனைப்பு!
நேரிசை ஆசிரியப்பா
முக்திக் கவனே மூத்தோன் மாலவன்
பக்தியால் தொழுவார்க்கு பரமன்
வல்வினைப் போக்கி ஆனந்தம் அருள்வானே
வெண்டளை 3 (30%)
ஆசிரியத்தளை 5 (50%)
கலித்தளை 2 (20%)
ஆசிரியப்பாவிற்கு 45 % ஆவது ஆசிரியத்தளை வேண்டுமென்கிறது அவலோகிடம்.
1. கலிவிருத்தம் ( விளம் /மா /காய் / விளம்)
வேலனைப் போற்றும் வேல்மாறல் துதித்திட ;
காலனும் நம்மைக் காணாமல் ஒதுங்குவன்!
ஆலடி ஆர்ந்த ஆசானை நினைத்திட ;
ஓலமிட் டோடும் ஓயாத வினைகளே!
3. குறள் வெண்பா
******
வேதனைக்கு மாறலோதி, நற்கதி சேர்தர்க்கு ;
வேதனைச் சார்ந்தே உருகு!
பாக்கள் மூன்றும் நன்று! வாழ்த்துகள்.
பூனைக் கெலிபடைத்தான் பார்.அருமையான நேரிசை வெண்பா! வாழ்த்துகள்.
அருமையான கருத்தும், ஒருவிகற்ப நேரிசை வெண்பாவும் சிறப்பு!
கலித்துறை
(கூவிளம் தேமா காய் காய் தேமா)
பாடல் நன்று!
அருமையான கருத்தமைந்த பாடல்! தங்கள் தந்தையார் போல நூறாண்டுகளுக்கு மேல் நலமுற வேண்டும்!
தங்கள் முயற்சியை மனமகிழ்ந்து வரவேற்கிறேன்;வாழ்த்துகிறேன்.