Dr.V.K.Kanniappan- கருத்துகள்
Dr.V.K.Kanniappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [60]
- கவின் சாரலன் [42]
- Dr.V.K.Kanniappan [33]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [24]
- மலர்91 [16]
போராடு தென்நெஞ்சம் போ!
என்றால் பொழிப்பு மோனையும் சிறக்கும், பாடலும் மேலும் சிறக்கும்!
தலைப்பில்,
நாணிடும் மங்கையிட்ட நல்விரல் ஓவியம்! - இன்னிசை வெண்பா
என்று காட்ட வேண்டும்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் நான்கடிகளிலும் அமைந்த மிகச் சிறந்த ’ஒரு விகற்ப இன்னிசை வெண்பா’! என் இனிய வாழ்த்துகள். கோலமும் சிறப்பு
தலைப்பில் இன்னிசை நேரிசை வெண்பா எனக் குறிக்காமல்,
அந்தந்தப் பாடலில் மேல்
இன்னிசை வெண்பா என்றும்,
நேரிசை வெண்பா என்றும் குறித்தால் மேலும் பொருத்தமாயிருக்கும்.
வெண்பாவிற்கு ஈற்றடியே தலைப்பாக வைப்பது முறை! என்னவகைப் பா என்றும் குறிக்க வேண்டும்.
சோலைக்கு ளிர்நீலப் - சோலைக் குளிர்நீலப்
பேருக்கு + எத்தனை - பேருக் கெத்தனை - தளை தட்டும்
தகுத பொழிப்பு மோனையும், எதுகையும் அமைந்த
பஃறொடை வெண்பா
ஓடிவரும் நீரோடை ஓசையி லேதாளம்
பாடிவரும் தென்றலோ பாடிடும் பூபாளம்
கூடிவந்து பூங்குயில் கூட்டம் இசைபாடும்
வாடிக் கிடக்குமிவ் வண்ணப்பூக் கள்சிரிக்கும்
வாடிரசிப் போம்நாமும் வா!
சிறப்பு! வாழ்த்துகள்.
கிடக்கும்இவ் - மூன்று அசையாக வரலாகாது!
கிடக்/குமிவ் - சரி
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா நன்று!
ஒரு விகற்பக் குறள் வெண்பா
நற்செயல் செய்வோரை பாராட்டி போற்றலந்த
நற்செயலை செய்வதற் கீடு!
கோவில்பட்டியைச் சேர்ந்தவர்; சு.அய்யப்பன் என்ற பெயரில் 2023 வரை இந்த தளத்தில் எழுதி வந்தார். சிறந்த மரபுக் கவிஞர். இப்பொழுது தினமும் முகநூலில் எழுதி வருகிறார். நானும் தொடர்பில் இருக்கிறேன்!
கண்ணென ஆற்றுங் கடன்! - நேரிசை வெண்பா
என்று தலைப்பில் பதிந்தால் மேலும் சிறக்கும்.
இதே ஈற்றடிக்கு நானும் ஒரு வெண்பா எழுதி இருக்கிறேன்.
அந்/தி/அன் - அவலோகிதம் மூன்று அசையாகக் காட்டும், எனவே அந்தியன்.புப்பரிசு எனக் காட்டலாம்!.
பாடல் 2 சீர்கள் சரியாக அமையவில்லை! தோல்வி என்பதும் சரியில்லை!
குறட்பா
போதையில் கெட்டவழி போவது கேடாம்;நற்
பாதையில் செல்வாய் பணிந்து!
ஈற்றடி தந்த கவிஞர் கவின் சாரலன் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
முதலடி தந்த கவிஞர் வாலிக்கும் நன்றி! நன்றி! நன்றி!
சு.அய்யப்பன் • 04-Aug-2015 5:14 pm
புலமை மிக்க நீங்கள் இருவரும் செய்யும் இவ்வரிய சேவை எம்போன்றோருக்கு நல்லதோர் இலக்கிய வழிகாட்டலாய் அமைகின்றது
தங்கள் சேவை எங்களுக்கு தேவை
இன்னிசை 200 ம்
விளக்க உரையும் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்
வணக்கம் அம்மா சாந்தி! தகுந்த எதுகை, மோனைகளுடன், பொருளுடன் அமைந்த நேரிசை வெண்பா சிறப்பு! வாழ்த்துகள்! .
கண்ணென ஆற்றுங் கடன்! ஈற்றடியைத் தலைப்பாகக் கொடுங்கள்!
இதென்ன கருப்புக் கொமுடி?
சொல்லியல்த் தேனும் பருகு! - த் வராது!
ஒரு விகற்பக் குறள் வெண்பா
அளவறியா நல்லமுதும் நஞ்சது போல
உளமறியா மல்செலுத்தும் அன்பு!
ஒரு விகற்பக் குறள் வெண்பா
மாற்/றமதின் ஆற்றல் அழியாமல் என்றுமதை
ஏற்றால் எளிதாகும் வாழ்வு!