Dr.V.K.Kanniappan- கருத்துகள்

எல்லையிலா இன்பம் எனக்கு!

என்ற ஈற்றடிக்கு தமிழைப் பற்றி ஒரு நேரிசை வெண்பா எழுதுங்களேன்.

தலைப்பை,

திரும்பிப் பார்க்கிறேன் நூல் ஆசிரியர் இரா இரவி

என நிறுத்தி,

;நூல் மதிப்புரை பேரா ஜி இராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை மாவட்டம்’ என்பது கீழே வரலாமே!

தங்கள் ‘கலைத்திடும் பூங்கூந்தல் காவிரி ஆறோ’ - தகுந்த எதுகை, பொழிப்பு மோனையுடன் அமைந்த பல விகற்ப இன்னிசை வெண்பா நன்று.

தேனூறும் இன்பமெனத் தேர்ந்து! என்ற ஈற்றடிக்கு தகுந்த எதுகை, பொழிப்பு மோனையுடன் அமைந்த ஒரு நேரிசை அல்லது இன்னிசை வெண்பா எழுதுங்களேன்

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன் றெழுந்தேன் - செழித்தே
மொழிந்ததுபூ மௌனமாய் முந்துதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து!

இரண்டு வெண்பாக்களுமே மிகச் சிறப்பு! வாழ்த்துகள்.

பல விகற்ப இன்னிசை வெண்பா எனத் தலைப்பிட்ட வேண்டும்.

மூன்று அருமையான.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமாங்காய் 6 / தேமா)

ஏன் இதை மேலே குறிக்கவில்லை? இவற்றின் அருமையும், இதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் எத்தனை பேருக்குத் தெரியும்? என் இனிய வாழ்த்துகள்!

மனத்தில் நினைப்பதை சொற்கட்டுகளாக அடுக்குகிறீர்கள்; இதைக் கவிதையெனச் சொல்வதெப்படி?

நேரிசை வெண்பா
(‘ர்’ ‘ய்’ இடையின ஆசு)
(’க்’ ;’போ’ ‘பூ’ எதுகை)

பூக்களெல்லாம் புன்னகை பூத்து வரவேற்க
பா’ர்’க்காமல் நீபோனால் பூமணம் - வா’ய்’க்காதோ
தே’ர்’போல் அசைந்திளம் தென்றல்போல் செல்பவளே
பா’ர்’பூவுக் குன்மலர்க்கை காட்டு!

இன்னிசை வெண்பா

எல்லாம் இதுபோலச் சென்றிடக் காரணம்
செல்லம் கொடுத்திடும் பெற்றோர் அதனாலே
செல்லாத காசென பிள்ளையும் மாறிட
நல்லவர் மாறினர்பா தை!.

அதென்ன ’எதிரி குதிச்ச’?

பக்கம் பெருமைதரும் பாட்டு!
நேரிசை வெண்பா

கருத்தோ டெழுந்த,நற்பா கச்சிதமாய் நல்ல
பொருள்தந்து காட்டுகின்ற போக்கை - அருமையென்பேன்;
தக்க எதுகைமோனை தந்துபெறும் வெண்பாவே
பக்கம் பெருமைதரும் பாட்டு!

- வ.க.கன்னியப்பன்

இதென்ன கதையா கவிதையா?
ஒன்றும் புரியவில்லை;.
சொல்வதைச் சுருக்கமாய்ச் சொல்லுங்கள்.

தகுந்த எதுகை மோனையுடன் அமைந்த பாடல் நன்று!

அன்புள்ள ராம்,
இனிய புத்தாண்ட்ய் வாழ்த்துகள். தங்கள் பாடலில் சிற்சில மாற்றங்கள் செய்து நிலைமண்டில ஆசிரியப்பாவாக ஆக்கினேன். நன்றி.

டாக்டர் வ.க.கன்னியப்பன், மதுரை.

2025 புத்தாண்டு பிறந்தது!
நிலைமண்டில ஆசிரியப்பா

நாடு நலம்பெற நன்மைகள் பெருகிட
நம்உடலும் மனமும் குதூகலம் அடைந்திட
நண்பர்கள் யாவரும் நாளெலாம் கொண்டாட
சிறுமைகள் ஒழிந்திட செழுமை ஓங்கிட
சிறப்புகள் வளர்ந்திட சீர்குலைவு மறைந்திட
விடியும் காலையில் வரவிருக்கும் ஆண்டினை
புத்தாண்டும் பிறந்தது பொலிவும் வந்ததென
மகிழ்வுடன் வரவேற்(று) ஆடிமகிழ் வோமே!


Dr.V.K.Kanniappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே