அழைக்கிறாய் கண்ணாலென்னை அந்திவாசலக்கு

அழைக்கிறாய்கண் ணாலென்னை அந்திவாச லக்கு
மழைபோல் பொழிகிறாய் மௌனமாய் நெஞ்சில்
நனைகிறேன் நித்தம் நிலாமலர் போல்நின்
நினைவுச்சா ரல்தன்னில் நான்

-----இருவிகற்ப இன்னிசை வெண்பா

அடி எதுகை ---அழை மழை நனை நினை

சீர் மோனை --- 1 3 ஆம் சீரில் ---அ அ ம மௌ ந நி நி நா

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-24, 5:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே