பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
![](https://eluthu.com/images/loading.gif)
நானா எழுதுகிறேன் நின்னை நிலவெழிலே
பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
மானே மயிலினி மௌனமென் புன்னகையே
தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது
நானா எழுதுகிறேன் நற்றமிழ் பூங்கவிதை
பேனாவில் பாயும் புனல்
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
எதுகை நானா பேனா மானே தேனா நானா பேனா
மோனா 1 3 ஆம் சீரில் ந நீ பே பெ ம மெ தே செ நா ந பெ பு