Ramasubramanian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ramasubramanian
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  17-Apr-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2021
பார்த்தவர்கள்:  1528
புள்ளி:  605

என்னைப் பற்றி...

நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்

என் படைப்புகள்
Ramasubramanian செய்திகள்
Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2025 12:22 pm

செய்தி: ருஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஓயாத சண்டை
குறும்பு செய்தி: இதென்ன பெரிய விஷயம், கடலில்கூடத்தான் ஓயாமல் அலைகள் மோதிக்கொண்டே இருக்கிறது.
&&&
செய்தி: சட்டவிரோதமாக அமரிக்காவில் வசிப்பவர்களை அதிபர் ட்ரம்ப் நாட்டைவிட்டு வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்.
குறும்பு செய்தி: நாமும் கூடத்தான் நம் உடலுக்குத்தேவையில்லாத பொருட்களை தினமும் வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம்.
&&&
செய்தி: இன்று இந்தியாவில் லஞ்சமும் உழலும் மிகவும் அதிகரித்துவிட்டன.
குறும்பு செய்தி: ஏன் அதிகரிக்காது? அன்றைய நாற்பது கோடி ஜனத்தொகை இன்று நூற்று நாற்பது கோடி ஆகிவிட்டது.
&&&
செய்தி: ஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாடு, தொடர்ந்

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2025 5:12 pm

ஒரு வயதான மனிதர் தடுமாறிய வண்ணம் நடந்து சென்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் கையில் ஒரு கைத்தடி இருந்தது. பின், அவர் ஏன் தடுமாறிய வண்ணம் நடந்து செல்கிறார்?
டாஸ்மாக்கில் அவரது தாகத்தை கொஞ்சம் போக்கிக்கொண்டு வந்தார்.
&&&
ஒரு பெண் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நாயைப்பார்த்துவிட்டு வீல் வீல் என்று சத்தமிட்டாள். ஏன்? அவளுடன் சென்றுகொண்டிருந்த அவளது நாயின் பெயர் வீல்.
&&&
புதிதாக பட்டினத்திற்கு வந்த ஒரு கிராமவாசி காய்கறி வியாபாரம் செய்கிறார். ஒரு மாத்திற்கு பின்பு கணக்கு பார்க்கும்போதுதான் தெரிகிறது, அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று. எப்படி?
அவரிடம் காய்கறி வாங்க வந்த அனைவரிடமும் அவர்

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2025 4:29 pm

எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்
மொழிகள் வேறு முறைகள் வேறு
உணவு முறையும் வேறு வேறு
இருந்தபோதும் ஒற்றுமைதான் நம் நாட்டின் ஆணிவேரு

(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்)

காந்திஜியின் கொள்கைகளை போற்றும் பாரதம்
காமராஜர் வாய்மையினை வாழ்த்தும் பாரதம்
அகில உலக நாடுகளும் வியக்கும் பாரதம்
வறுமை நிலை குறைந்து வரும் நல்ல பாரதம்
அருமையான கலாச்சாரம் நிறைந்த பாரதம்

வாங்க வாங்க நாமும் சேர்ந்து ஆடிப்பாடலாம்
பேதமின்றி நாம் உழைத்தால் உலகில் சிறக்கலாம்

(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடி

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2025 4:27 pm

நிகரற்றத் தலைவர்கள் வழிநடத்தினர்
எண்ணற்ற தொண்டர்கள் உயிர் கொடுத்தனர்
அடிமை வாழ்வு ஈனம் என்று தெளிவு கண்டனர்
அஹிம்சை எனும் வாளேந்தி போர் தொடுத்தனர்

சுதந்திரத்தை பெற்ற பின்னர் சுரம் இழந்தனர்
சாதி சமய வேற்றுமையில் விழுந்து உழன்றனர்
இடையிடையே முனிகள் தோன்றி அறிவுரைத்தனர்
இருந்தாலும் விஷமிகள் பலர் மாற்றம் வெறுத்தனர்

இந்த நாளில் நாட்டின் நிலைமை மாறி வருகுது
சாதி இனம் மொழி கடந்து ஜனங்கள் வாழுது
பொருளாதாரம் ஓங்கியே நம் நாடு மிளிருது
வல்லரசாய் உலகில் ஒளிர மிகவும் விழையுது

ஆங்காங்கே பெண்களுக்கு அநீதி நேருது
இதைத்தாண்டி பெண் வர்கம் ஓங்கி வளருது
விவசாய உற்பத்தி திருப்தி

மேலும்

Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2024 4:16 pm

பசும்புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு பாலுடன் உடலையும் தந்திடும் ஆடு
அதன் பால் மட்டுமின்றி உடலையும் உரித்து சுவைக்கிறான் இந்த ஆளு

புல் புண்ணாக்கை அசைபோட்டுவிட்டு சுவையான பால் தருகிறது மாடு
பிறரை புண்ணாக்காக எண்ணி, அவனிடமே பிடுங்கி சாப்பிடுவது ஆளு

பசி எடுக்கும்போது, இன்னொரு விலங்கை கொன்று உண்டிடும் சிங்கம்
பசி தணிந்தாலும் பணருசி என்றுமே தணியாத பேராசைகொண்ட ஆளு

உடலால் உயர்ந்து பெருத்திருப்பினும் சைவ உணவே உண்ணும் யானை
உடல் மனம் சிறுத்திருப்பினும் அசைவத்தையே அதிகம் உண்ணும் ஆளு

எப்போதாவது ஒருமுறை கடித்தாலும், நன்றியுணர்வுடன் இருப்பது நாய்
எந்நேரமும் பிறரை உடலாலும் மனதாலும்

மேலும்

நன்றி . என் கற்பனை வளம் எனும் கிணற்றிலிருந்து முங்கி எடுக்கப்பட்ட எழுத்துகள்தான் இவை. என்னுடைய சுயமான தனித்துவமான கருத்து. இதுதான் என் சிறப்பு. நான் இந்த கவிதைபோன்ற எண்ணங்களை, என் திருப்திக்கும் மற்றும் கலையுணர்வை தணிக்கும் எண்ணத்துடன்தான் எழுதுகிறேனே தவிர, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 04-Aug-2024 4:20 pm
உங்களின் ஒப்பிடும் தன்மை நன்றாக இருக்கிறது இருந்தாலும் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் 03-Aug-2024 8:49 pm
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2023 3:58 pm

நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள

மேலும்

திரு ராம சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம் நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதுவது கிடையாது. அப்படி உங்கள் மனம் புண் பட்டிருப்பின் மன்னிக்கவும் இருப்பினும் கடவுளை கண்டவன் யாரும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பலகோடி மக்கள் பக்தியில் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள்... காலங்காலமாக கடவுள் இல்லை என்கிறவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நீங்கள் இதை அறிந்திருந்தும் இதை வாசிப்பவர்கள் எவரேனும், நான் குறிப்பிடும் கடவுளை நேரில் கண்டிருந்தால், எனக்கு கொஞ்சம் தெரியப்படுத்துவீர்களா? இந்த கேள்வி கடவுளை எந்த இடத்தில் நீங்கள் வைத்துள்ளீர் என்பதை உணர்த்துகிறது. இது எனது மனதை வெகுவாக பாதித்தது விட்டது அதனால் தான்நான் அப்படி பதிலிட்டு விட்டேன். நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க யாரும் இல்லை என்பார்கள். அல்லது கடவுளைப் பழித்து சிரிப்பார்கள்... யாரும் கடவுள் மறுப்பு பற்றி பேசினால் எனக்கு பிடிக்காமல் என்னையுமறியாமல் உணர்ச்சி வசப்பட்டு இப்படி உடனே எழுதி விடுகிறேன் என்ன செய்வது..கடவுளின் நம்பிக்கை அப்படி எழுதத் தூண்டி விடுகிறது .. இப்பவும் சொல்கிறேன் சித்தர்களின் நூலில் கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக் கிறார்கள். ஆயிரமாயிரம் விஷயஙகளையெல்லாம் அவர்கள் கூறி யிருக்கிறார் கள்... ஆனால் ஒரு விஷயத்தையும் யாரும் படித்து அறிய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்ப்பதில்லை. பைபிளும் குரானும் கர்த்தரையும் அல்லாவையும் மறுப்பவனையும பட்வா செய்யச் சொல்கிறது. ஆனால் இந்துமதம் தூற்றுவதை கண்டு கொள்வதில்லை மலைக்கள்ளன் என்ற சினிமாவில் ஒரு பாட்டு வரும் அதில் கடவுள் இல்லை என்பது எதனாலே ? காலங்காலமாக மாக காத்திருந்தும் கடவுள் வரவில்லை அதனாலே என்ற பாட்டுத்தான் அது. நல்லவன் கெட்டவன் மாற்றான் மனைவியை அடைய நினைப்பான் சண்டாளன் நிறைந்ததிந்த உலகம். யாருமே கடவுளைக் காட்டு என்று சொல்லவில்லை. அன்று சொன்ன ஒரே ஆள் இரண்ணிய கஜபு இன்று பெரியார். விஷயங்கள் இருக்கிற சித்தர் நூலைப் படித்துக் கடவுளைத் தேடுவோம்.... திரு மூலனை விட்டு விட்டு ஜக்கி வாசுவிடமும் நித்தியானந்தாவிடமும் பதில் கேட்டால் எப்படி கிடைக்கும் 22-Aug-2023 10:51 pm
திரு பழனி ராஜன் அவர்களே உங்களின் எண்ணங்களை கண்டேன். ஒருவர் எழுதிய விஷயங்களை சரியாக உள்வாங்கி சிந்திக்காமல், அவர் குறிப்பிட்ட விஷயங்களை ஆழமாக அலசி ஆராயாமல் , அவர் எழுதிய விஷயம் உங்களது நம்பிக்கைக்கு மாறுபட்டுள்ளது என்கிற ஒரே காரணத்தால், இந்த கட்டுரையை நீங்கள் இவ்வாறு ஏசியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த கட்டுரைக்கு நீங்கள் எங்கே ஒரு பொருத்தமான எதிர் கட்டுரையை பதிவு செய்யுங்கள், பார்க்கலாம் . அதை நான் வரவேற்பேன். ஆனால், நீங்கள் கடவுளை நேராக காணாமல், மெய்யாக உணராமல், திருமூலர் சொன்னார் , முன்னோர்கள் சொன்னார்கள் என்று பலர் அரைத்த மாவையே அரைக்கிறீர்கள். முதலில், ஒருவரது மனதை புண்படும் விதமாக எழுதாமலிருக்க பழகிக்கொள்ளுங்கள். தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய கட்டுரைக்கு சவுக்கடி கொடுக்கும் உங்களது கட்டுரையை இந்த வலயத்தளத்தில் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன். இந்த கட்டுரையில் நீங்கள், பழனி ராஜன் என்கிற தனி மனிதர், கடவுளை கண்டார் என்பதற்கான சான்றையும் கொடுக்கவேண்டும். நன்றி. 22-Aug-2023 4:17 pm
எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க 21-Aug-2023 10:09 pm
ராம சுப்ரமணி அவர்களுக்கு வணக்கம் இதுதானே அந்த படிப்படியா ஈ வெ ராமசாமியும் சொன்னது. கடவுள் இருப்பதையும் பற்றி நம் முன்னோர் என்ன குறிப்பு விட்டுச் சென்றார்.அ தில் நீங்கள் படித்தது என்ன பட்டியலிடுங்கள் பார்க்கலாம். கடவுள் இல்லையென்று எதையும் படிக்காது ஏ வெ ரா சொல்லலாம் .. ஆனால் நீங்ககள் ஏன் எதையும் படிக்காது இப்படி ஒரு .உடிவுக்கு வர வேண்டும். முதலில் உங்களுக்கு கடவுள் ஏன் காட்சி தர வேண்டும்.அதற்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். நீயும் சிவனாகலாம் என்று திரு . மூலர் சொன்னதைப் படிக்க வில்லையா..... திருமூலர் சொன்னது நீ உனது சாவை முதலில் தள்ளி போட்டு நூறு அல்லது இரு நூறு வருடம் வாழ முயற்சி செய் என்கிறார். தேகம் இருந்தாலோ சித்தெட்டும் ஆடலாம். தேகம் இருந்தாலோ ஞான த்தைத் தேடலாம் என்கிறார்..... நூற்றுக் கணக்கான சித்தர் புத்தகங்கள் கடவுளைப் பார்க்கும் வழிகளை சொல்லுகிறது.. அல்லது படித்த வர்களை அனுகுங்கள். பூமிக்கும் சூரியன் சந்திரன் சனி குரு வெள்ளி புதன் கிரகங்களின் தூ ரத்தை நாலாயிரம் வருடத்திற்கு முன்னமே ஆரிய பட்டன் சொன்னதை பாருங்கள்.. இத்த்தானே ஏ டு தேடுங்கள் கிடைக்கும் என்றான். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... இதைப் பற்றி உங்களுக்கு வேண்டுமானால் எனக்கு ஆறு மாதமாவது தேவைப் ப்படும்.. அவ்வவுக் கவ்வளவு உண்மைகள் ....பதினெண் சித்தர்கள் விளக்கிச் சென்றி ருக்ககிறார்கள்....... எத்தனை படித்தீர் எதைப் புரிந்து கொண்டீர் முதலில் அதைச் சொல்லுங்கள் . 21-Aug-2023 10:08 pm
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2023 4:00 pm

சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்

மேலும்

பெரிய அளவில் நான் ஒன்றும் எழுதவில்லை, ஐயா. கேரளா கோவில்களில் உள்ள சுத்தம்தான் என்னை இந்த கட்டுரையை எழுதவைத்தது. காலடி சென்று வந்ததைப்பற்றி சிறிதளவில் தான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால், ஆதி சங்கரரை பற்றி எழுதுகையில் என்னையறியாமல் கொஞ்சம் கட்டுரையின் தன்மையை ஆன்மீகத்துடன் இணைத்துவிட்டேன். உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். 16-Aug-2023 8:08 pm
ராம என்று பிழையை நீக்கிப் படிக்கவும் 16-Aug-2023 5:12 pm
ராமா சுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கம். உண்மையில் நல்லத் தரமான பயணக்கட்டுரை. பழைய கால ஆனந்த விகடனில் மணியன் எழுதிய பயணக் கட்டுரையைப் படித்தது போல அழகான நேர்த்தியான தாகத் தெரிந்தது.. ஒருவேளை மணியனின் பெயரும் ராமசுப்பிரமணியன் ஆக இருக்குமோ? அருமை மணியன். வாழ்த்துக்கள், இரு விகற்பக் குறள் வெண்பா கோயில் குருவாயூர் கோமான் தொழுதிட புண்ணியமாம் கோடி பொறு 16-Aug-2023 5:10 pm
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2023 9:14 pm

அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின

மேலும்

பழனி ராஜன் நண்பரே நான் இந்தக்கட்டுரையைப் பதிவுசெய்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நீங்கள் அதைப்படித்துவிட்டு உடனுக்குடன் உங்களின் அருமையான கருத்துக்களையும் தெரிவித்து என் தாய்ப்பாசத்துடன் ஒன்றிப்போய்விட்டர்கள்.உங்களைப்போன்ற ஒரு வலைதள நண்பர் அமைந்ததை என் பாக்கியமாகக்கருத்துகிறேன். மிக்க நன்றி! 23-Jan-2023 9:50 pm
தங்களுக்கு பிடித்தமான தாய் அமைந்தது தங்கள் கொடுப்பினை. . என்னுடைய அனுபவத்தில் தாய்க்கு தாய் பலவிதம் கண்டுள்ளேன். சில தாய்மார்கள் பெண்ணைக் கட்டிக்கொடுத்து அவளுடன் அவளுக்கு பாதுகாப்பாக சென்று மகன் அனுப்பும் எல்லாப் பணத்தை மகள் குடும்பத் திற்கே செலவழிப்பவர்களுமுண்டு. பணமனுப்பும் எந்திரமாக மகனை நினைப்பவர்களும் உண்டு. உங்கள் பாச பிணைப்பு உண்மையில் நெகிழ வைக்கிறது. 23-Jan-2023 9:35 pm
Ramasubramanian - மணிவாசன் வாசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2015 11:22 pm

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!


'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மேலும்

வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 14-Apr-2015 5:43 pm
மிகவும் நன்றி ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! 14-Apr-2015 2:36 pm
நன்றி... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:43 am
நன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:26 am
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2022 8:37 pm

தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து

மேலும்

Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2022 4:16 pm

அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே