Ramasubramanian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ramasubramanian
இடம்:  ஹைதராபாத்
பிறந்த தேதி :  17-Apr-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2021
பார்த்தவர்கள்:  904
புள்ளி:  336

என்னைப் பற்றி...

நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்

என் படைப்புகள்
Ramasubramanian செய்திகள்
Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2023 4:45 pm

தசரதராமன் உன்னதமான கடவுளின் அவதாரம்
உத்தமியான புனித ஜானகியோ ராமனின் தாரம்
அனுமனுக்கு இவ்விருவரே வாழ்வின் ஆதாரம்

ராவணன் அழிந்தான் ராமனுடைய வாழ்வும்தான்
ஊரார் பேச்சைக்கேட்டு பத்தினியை சோதித்தான்
தீப்பிரவேசம் செய்தும் சீதைக்கு வனவாசம்தான்
எனவே ராமன் வாழ்க்கை ததிங்கிணத்தோம்தான்

தர்மம் காத்தவன் அவன் மனைவியை காத்தானா?
ராஜமகுடம் சூடியவன், குடும்பத்தைக் காத்தானா?

ராமாயணம் தரும் வாழ்க்கை கோட்பாடுகள் இதுவே
தீயவர்கள் (இராவணன்) இறுதியில் தோற்பது உறுதி
அதற்கு தெய்வசக்தியும் (அனுமன்) கூட்டிடும் உறுதி
தெய்வமெனினும் (ராமன்) பாபம் புரியுமென்பது நியதி
உத்தமியாய் (சீதை) வாழ்

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2023 3:53 pm

நன்கு உறங்கி எழுந்த பின்னர் என்ன புளிக்குழம்பு வைக்க வேண்டும்? பரங்கி.

சைவமாக இருந்தால் இந்தக்காயை தவிர்க்க வேண்டும்? முட்டை கோஸ்.

ஆண்டவன் அருளைப்பெற இந்தக்காயை உண்ணவேண்டும். உருளை.

பெருங்காயம் இல்லாம சமாளித்துவிடலாம். ஆனால் வெங்காயம் இல்லாமல் முடியாது.

எந்தக்காயை வெட்ட கத்தரிக்கோல் தேவையில்லை? கத்தரிக்காய்.

முள்ளங்கி வெட்டுவதற்கு முக்கிய தகுதி, உள்ளங்கி அணியவேண்டும்.

கடைத்தெருவுக்கு போனா வெறுங்கையுடன் வரக்கூடாது. முருங்கை மட்டுமாவது வாங்கிவரவேண்டும்.

சுண்டைக்காய் புளிகுழம்புக்கு ஏற்ற பொரியல் வெண்டைக்காய்.

பெரிய குடும்பமா இருந்தா பெரிய வெங்காயம். சின்ன குடும்பமா இருந

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2023 8:43 pm

ஒரு நோயாளி டாக்டர் அறையில் நுழைகிறார். அங்கிருந்தவர் அவரிடம் " உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்கிறார்.

நோயாளி " தாங்க முடியாத வயிற்று வலி டாக்டர் ".

இன்னொருவர்: எத்தனை நாளாக இருக்கிறது?

நோயாளி: மூன்று நாட்களாக

இன்னொருவர்: அப்படி என்றால் ஏன் முன்பே வரவில்லை?

நோயாளி: என்ன செய்வது டாக்டர், தொழிற்சாலையில் வருடக் கடைசி என்பதால் விடுப்பு கிடைக்கவில்லை

இன்னொருவர்: ஏம்பா, உனக்கு உன் உடம்பு முக்கியமா இல்லை தொழில் முக்கியமா?

நோயாளி: தொழில் தான் டாக்டர். அப்போது தான் வருமானம் கிடைக்கும் . என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும்.

இன்னொருவர்: இதற்கு முன் இப்படிப் பட்ட

மேலும்

Ramasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2023 9:19 pm

மனிதனை அல்லது ஞானி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு சந்நியாசியை அசைவம் உண்பவர் என்றால், அதனால் நாம் ஆச்சரியம் அடைவதில்லை. ஆனால் அகில உலக அளவில் மதித்துப் பேசப்படும், இந்தியாவின் மகிமை நிறைந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அசைவம் உண்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களால் ஏற்கமுடிகிறதா என்பது எனக்குத்தெரியாது. இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் புலால் உண்ணாத குடும்பத்தில்தான் பிறந்தார் என்னும் செய்தி, மனதிற்கு சங்கடத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது..

இவருடைய பிரதம சீடரான விவேகானந்தர் அசைவம் உண்ணும் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சீடரான பின்னும் விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிட்

மேலும்

Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2023 9:14 pm

அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின

மேலும்

பழனி ராஜன் நண்பரே நான் இந்தக்கட்டுரையைப் பதிவுசெய்து அரைமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நீங்கள் அதைப்படித்துவிட்டு உடனுக்குடன் உங்களின் அருமையான கருத்துக்களையும் தெரிவித்து என் தாய்ப்பாசத்துடன் ஒன்றிப்போய்விட்டர்கள்.உங்களைப்போன்ற ஒரு வலைதள நண்பர் அமைந்ததை என் பாக்கியமாகக்கருத்துகிறேன். மிக்க நன்றி! 23-Jan-2023 9:50 pm
தங்களுக்கு பிடித்தமான தாய் அமைந்தது தங்கள் கொடுப்பினை. . என்னுடைய அனுபவத்தில் தாய்க்கு தாய் பலவிதம் கண்டுள்ளேன். சில தாய்மார்கள் பெண்ணைக் கட்டிக்கொடுத்து அவளுடன் அவளுக்கு பாதுகாப்பாக சென்று மகன் அனுப்பும் எல்லாப் பணத்தை மகள் குடும்பத் திற்கே செலவழிப்பவர்களுமுண்டு. பணமனுப்பும் எந்திரமாக மகனை நினைப்பவர்களும் உண்டு. உங்கள் பாச பிணைப்பு உண்மையில் நெகிழ வைக்கிறது. 23-Jan-2023 9:35 pm
Ramasubramanian - மணிவாசன் வாசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2015 11:22 pm

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!


'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மேலும்

வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 14-Apr-2015 5:43 pm
மிகவும் நன்றி ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! 14-Apr-2015 2:36 pm
நன்றி... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:43 am
நன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 7:26 am
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2022 8:37 pm

தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து

மேலும்

Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2022 4:16 pm

அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால

மேலும்

Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2022 8:49 pm

சிறு வயதில் படாத பாடு பட்டு, கேட்டேன் சினிமா பாட்டு
பெரிய வயதில் நான் பாடுவதை கேட்டு, ஓடுகிறாரே இருக்கையை விட்டு!

ஏழாம் வகுப்பில் ஒரு முறை வாங்கினேன் மதிப்பெண் இரண்டு
நல்ல வேளை, நான் சைவம் என்பதால், கிடைக்கவில்லை முட்டை ஒன்று!

நான் சின்ன பையனாக இருந்தபோது, என் பாட்டி செய்தார், ஜாங்கிரி
ரகசியமாக அதை ருசிக்கப் போனேன், விழுந்தேன் வழுக்கி வாரி!

பள்ளியில் படிக்கையில் நான் ஆடவில்லை ஒருபோதும் விளையாட்டு
இப்போது தெரிகிறது வாழ்க்கையே ஒரு விளையாட்டு!

மேலும்

திரு பழநி ராஜன் அவர்களே உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். நான் இந்த செய்தியை கவிதை என்ற பகுதியில் அல்லாது நகைச்சுவை என்ற பகுதியில் தான் பதிவு செய்திருக்கிறேன். இது வெறும் நகைச்சுவை மட்டுமே அன்றி, கவிதை அல்ல பாடல் அல்ல என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். நன்றி! 15-Apr-2022 10:37 am
உங்கள் பாடல் இப்படி செய்திருப்பின் அது ஆனந்த களிப்பு என்று சொல்வார்கள் இருப்பினும் பல கருத்தைத் உள்ளடக்கி எழுதுதல் இன்றி ஒருகருத்து பற்றி இருக்க வேண்டும் தலைவாரி பூச்சூட்டி உன்னை -- பாட சாலைக்குப் போவென்று சொன்னாள் உன்அன்னை ( பாரதி தாசன்) சின்னப்பக் கேட்பேன் பாட்டு --- நானும் இன்றுபாட ஓடுகிறார் வேட்டெனக் கேட்டு என்டீச்சர் போட்டமார்க் இரண்டு -- சைவம் என்பதால் போடவில்லை முட்டை ஒன்று என்பாட்டி செய்தார் ஜாங்கிரி -- அதையும் தின்னப் போனயென்னை தள்ளினானே போக்கிரி முன்நாளி லாடவில்லை விளையாட்டு -- எனக்கு பின்நாளில் தெரிந்தது வாழ்க்கையே விளையாட்டு இதிலும் எதுகை மோனைகளைக் காணலாம் 14-Apr-2022 11:28 am
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2022 4:49 pm

கொடுக்கும் மனம் படைத்தவர்கள் மிகவும் குறைவு தான். ஏனெனில் அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். கெடுக்கும் மனம் படைத்தவர்களும் குறைவே. இவர்களும் கெடுத்து வைத்தது அவ்வளவு தான். இதைப் போலவே படுத்தால் தூங்கும் சுகவாசிகளும் குறைவு தான். ஏனெனில் இவர்கள் படுத்து வைத்தது அவ்வளவு தான்.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். என் உறவினர்கள் சிலர் கொடுக்காமலே காலம் ஓட்ட மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி பட்ட கொடுக்கா சிகாமணி ஒருவருடன் நிகழ்ந்த ஓரிரு சுவையான சம்பவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் சிரிப்புடன் கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த உறவினருக்கு மிகவும் அதிகமாகவே பணம் இருக்கிறது. ஆனால் கொடுக்கும்

மேலும்

இனிய தோழர் கோபிநாத் உங்கள் பின்னோட்டம் கண்டு என் மகிழ்ச்சி முன்னோட்டம் கண்டது. நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இரு தீவிர நிலைகள் என்று தான் எனக்கு படுகிறது. என் கணிப்பில் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. நான் குறிப்பிடும் உறவினருக்கு ஒரே மகன். அமெரிக்க குடிமகன். பெரிய பன்னாட்டு கம்பெனி, உயர்ந்த பதவி. இவரும் இவர் மனைவியும் தான் வீட்டில். சில கோடிகள் இருக்கும் இவரது சொத்துக்கள். இருப்பினும் செலவழிக்க மனமே வராது. இவரை 40 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்த பின் தான் இந்த உண்மை நகைச்சுவையை பகிர்ந்து கொண்டேன். என் கூற்றில் ஏதேனும் குறை இருப்பின், பொறுத்தருள வேண்டுகிறேன். வாழ்க வளமுடன், புன் சிரிப்புடன்! 👍👍 08-Apr-2022 10:39 am
எதையும் சேர்த்து வைக்காது ஊதாரித்தனமாக செலவழித்த அப்பாவுக்கு ஓட்டாண்டி என்ற பட்டப்பெயர். சிக்கனமாக செலவு பண்ணி, எதிர்காலத்திற்கென ஓரளவு சேர்த்துவைத்திருக்கும் எனக்கு கஞ்சப்பிசினாறி என்ற பட்டப்பெயர். இவ்வளவுதாங்க வாழ்க்கை! நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் பின்னிப் பெடலெடுத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். 08-Apr-2022 9:38 am
Ramasubramanian - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2022 11:30 am

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

இனிப்பு தான் எப்போதும் என் உற்ற தோழன் மற்றும் தயாதி
அதற்கு இப்போது வரை இல்லை சர்க்கரை வியாதி!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

டி எம் எஸ், எஸ் பி பி, ஏசுதாஸ் அருமையான பாடகர்கள் தான்!
ஆனால் அவர்கள் பாடல்கள், நான் பாடும் அவர்களின் பாடல்களுக்கு பிறகு தான்!

எனக்கு இருக்கும் ஆசைகளுக்கு குறைவே இல்லை!
என் வயதோ அறுபதுக்கு மேல் தாண்டவில்லை!

சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன் நல்ல கதை ஆசிரியர்கள் தான்!
என் கதை கேட்டால் அவர்கள் கதை எல்லாம் கதறிக் கொண்டு

மேலும்

இனிய ஜீவன் தோழரே ஒரு இளைய தலைமுறை வாலிபர் என் எழுத்துக்களை பசித்து, ரசித்து, ருசித்து, புசித்து மகிழ்ந்து, அகம் நெகிழ்ந்து, உளமார போற்றியதை எனக்கு இளைஞர் சமுதாயத்தின் ஒரு சிறப்பு பரிசாக கருதுகிறேன். வாழ்க நீங்கள், வாழ்க உங்கள் பெரிய மனது! 👍👍👍 07-Apr-2022 7:19 pm
அன்பு ராமசுப்ரமணியம் அவர்களே...உங்கள் 'வயதுக்கு ஆசைகள் உண்டு' படித்தேன். உங்கள் ஆசைகளை மதிக்கிறேன். அதைவிட உங்கள் தன்னம்பிக்கை வியப்பில் ஆழ்த்தியது. இளைய சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. தொடருங்கள் ...தொடர்பில் இருங்கள். விடாமல் பாடுங்கள்...எழுதுங்கள்...வெள்ளத்திற்கு அணைபோட முடியுமா? மகிழ்ச்சி.... 07-Apr-2022 6:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே