Ramasubramanian - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramasubramanian |
இடம் | : ஹைதராபாத் |
பிறந்த தேதி | : 17-Apr-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 1167 |
புள்ளி | : 452 |
நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்
நாம் அனைவரும் பாசத்தால் பிணைக்கப்பட்ட மரக்கிளைகள்
பந்தத்தால் சிறைக்கைதி போல் கட்டுண்ட அற்ப மானிடர்கள்
அன்பு எனும் கண்ணாடியை உடைத்து நம்மை காண்பவர்கள்
நச்சு கலந்த நட்பெனும் பாலில் நெய்யை போல் இருப்பவர்கள்
நேசமெனும் கைப்பிடியில்லாத தடியைப் பற்றிச்செல்பவர்கள்
ஆசை சமுத்திரத்தில் பேராசை டைடானிக்கில் மூழ்குபவர்கள்
மோகப் புதைமணலில் புதைந்து, மீண்டு(ம்) புதைகின்றவர்கள்
காமப்பசிக்கு ஆளாகித் தன்மானம் மறந்து உழல்கின்றவர்கள்
பொருளுக்காக மனசாட்சியை ஒடுக்கிவைக்க துணிந்தவர்கள்
புகழுக்கு ஏங்கி இழுக்கை தேடிக்கொள்ளும் மனமுடையவர்கள்
அன்பை வெளியே போதித்து மனித ரத்தத்தை உறிஞ்சுபவர
சந்திரமோகன்: சந்திரமுகி, உன் மேக் அப் எப்போது முடியும்? இன்னும் ஒரு மணி நேரத்தில் விண்கலம்-10 பூமிக்கு புறப்பட்டுவிடும். நாம் பத்து நிமிடங்களுக்கு முன்பாக விண்கல நிலையத்தில் இருக்கவேண்டும். பூமியில், இந்தியாவில், மதுரையில் நாளை என் தம்பியின் திருமணம்.
சந்திரமுகி: சந்து, உனக்கு எவ்வளவு தடவை சொல்வது. விஞ்ஞானத்தால் எல்லாமே வேகமாக செயல்படமுடியும், ஆனால் பெண்களுக்கான மேக் அப் நேரத்தில் அதிக மாற்றமே இல்லை. 2023 இல் ஒரு பெண்ணுக்கு மேக் அப் செய்ய சராசரியாக அரைமணி நேரம் எடுக்குமாம். ஆனால் அப்போது மூன்று அல்லது நான்கு முகப்பூச்சுகள் மட்டுமே இருந்தது. இந்த 2222 இல் குறைந்தது இருபத்தி ஐந்து முகப்பூச
நேற்று நான் ஒரு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆங்கில தொலைக்காட்சித் தொடரை பார்த்தேன். அதன் பெயர் ' good doctor ', அதாவது நல்ல மருத்துவர். நேற்றைய தொடரில் நான் ஆச்சரியமுடன் கண்ட சில காட்சிகளை தொகுத்து கீழே தருகிறேன்.
ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவர்கள் அவருக்கு வேறு இருதயத்தை பொருத்தவேண்டும் என்று தீர்மானித்து, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையை துவக்குகின்றனர். அவரது மார்பு பகுதியை திறந்து மாற்று இருதயத்தை பொருத்தவேண்டும் என்னும் தருணத்தில், அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் மருத்துவர் அந்த மாற்று இதயத்தை பரிசோதித்துவிட்டு அதில் பழுது இருக்கிறது என்று சொல்லி இதயமாற்று அற
காண்பவர் கண்களை கவரும் மீன்களை வலைவீசி பிடிக்கிறோம்
தாய்க்கோழி பொரித்த குஞ்சுகளை வாணலியில் பொரிக்கிறோம்
குஞ்சுகளை பிரிந்த தாய்க்கோழிகளின் இறகுகளை உரிக்கிறோம்
அன்புடன் ஊட்டி வளர்த்த ஆடுகளை உணவுக்காக வெட்டுகிறோம்
பச்சை குழந்தை போன்ற ஆட்டுகுட்டிகளின் தலையை சீவுகிறோம்
நிரபராதி பன்னிகளை பரிதாபமாக ஓலமிடவிட்டு அறுக்கின்றோம்
அப்பாவி மாடுகளை மேய விடாமல் கொன்று தின்று மகிழ்கிறோம்!
இத்துடன் நின்றுவிடவில்லை மனித முன்னேற்றம், இன்னும் உள்ளது
பொன்னுக்காக பொருளுக்காக மனிதனை மனிதனே கொல்கிறான்
மண்ணுக்காக பெண்ணுக்காக தனது இனத்தினரையே அழிக்கிறான்
பேராசையால், புகழாசையால் மற்றவர்களை சுட்டுக்கொல
நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள
சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்
அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!
'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து
அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால
சிறு வயதில் படாத பாடு பட்டு, கேட்டேன் சினிமா பாட்டு
பெரிய வயதில் நான் பாடுவதை கேட்டு, ஓடுகிறாரே இருக்கையை விட்டு!
ஏழாம் வகுப்பில் ஒரு முறை வாங்கினேன் மதிப்பெண் இரண்டு
நல்ல வேளை, நான் சைவம் என்பதால், கிடைக்கவில்லை முட்டை ஒன்று!
நான் சின்ன பையனாக இருந்தபோது, என் பாட்டி செய்தார், ஜாங்கிரி
ரகசியமாக அதை ருசிக்கப் போனேன், விழுந்தேன் வழுக்கி வாரி!
பள்ளியில் படிக்கையில் நான் ஆடவில்லை ஒருபோதும் விளையாட்டு
இப்போது தெரிகிறது வாழ்க்கையே ஒரு விளையாட்டு!