Ramasubramanian - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramasubramanian |
இடம் | : ஹைதராபாத் |
பிறந்த தேதி | : 17-Apr-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 1097 |
புள்ளி | : 336 |
நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்
நாசா: வாழ்த்துக்கள். சந்திரனின் தெற்கு பகுதியில் வெற்றிகரமாக இறங்கிவிட்டீர்கள்.
இஸ்ரோ: நன்றி. நீங்கள் அடுத்த விண்கலத்தை சந்திரனின் எந்த பகுதிக்கு அனுப்பப்போகிறீர்கள்?
நாசா: நாங்கள் மேற்கத்திய நாடு என்பதால், சந்திரனின் தெற்கு பக்கத்திற்கு எங்களது அடுத்த விண்கலத்தை அனுப்பப்போகிறோம்.
இஸ்ரோ: அப்படி என்றால் நாங்கள் சென்ற பக்கத்திற்குத்தான் அடுத்த விண்கலத்தை அனுப்புகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?
நாசா: நீங்கள் கண்டுபிடிக்காததை நாங்கள் கண்டுபிடிப்போம்
இஸ்ரோ: நாங்கள் கண்டவைகளை பிடிக்கவில்லை. வெறுமனே புகைப்படம் எடுத்தோம். அவ்வளவுதான். நீங்கள் எதைக்கண்டு அதை பிடிக்கப்போகிறீர்கள்?
நா
அன்று நல்ல வெயில்! சேதுராமன் வியர்வை விறுவிறுக்க பழைய இரும்பு சாமான்களை லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்தான். அவன் உயர்பள்ளி வரை படித்துவிட்டு, வீட்டின் பொருளாதாரம் காரணமாக சின்ன சின்ன வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு கொடுத்து உதவி வந்தான்.
அவனுக்கு உடன் பிறந்தவர்கள், இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. தந்தை ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்து வந்து வந்தார். நஷ்டம் காரணமாக கம்பெனியை இழுத்து மூடி விட்டனர். மேலும் அவருக்கு மாரடைப்பு வந்து, கால்கள் சுவாதீனமின்றி நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தாய் சில வீடுகளுக்கு சென்று, சமையல் செய்து கொடுத்து, கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தாள்
ஒருவர்: சார், உங்க பெயர் என்ன?
இன்னொருவ: அய்யங்கார்
ஒருவர்: நான் உங்கள் குலத்தை கேட்கவில்லை.
இன்னொருவர்: நானும் என் பெயரைத்தான் சொன்னேன்.
ஒருவர்: ஓ, அப்படியா, சரி நீங்கள் வடகலையா தென்கலையா?
இன்னொருவர்: நான் இடைகலை
ஒருவர்: புரியவில்லையே?
இன்னொருவர்: இடைக்காலத்தில் என்னுள் ஏற்பட்ட சில மாறுதல்களால் நான் என் நெற்றியில், காலையில் நாமம் வைக்கிறேன். மாலையில் விபூதி வைத்துக்கொள்கிறேன்.
ஒருவர்: வைணவராக இருந்துகொண்டு விபூதி வைப்பது வைணவ சம்பிரதாயத்திற்கு புறம்பானது அல்லவா?
இன்னொருவர்: மக்கள் எல்லோருமே ஐம்பது வருடத்திற்கு முன்பு வாழ்ந்ததுபோல இப்போது வாழ்வதில்லை. என்னை பொறுத்தவரை ஹரியும் சிவ
இன்றிலிருந்து நூற்றியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ் சகாப்தம், ஏன் ஒரு இந்திய சரித்திரம், காலத்துடன் கலந்து ஐக்கியமானது. புதிய தமிழ் கவிதையின் தந்தை, தேசியகவி சுப்ரமணிய பாரதியார் மிகவும் குறைந்த வயதில், தனது முப்பத்தியொன்பதாவது வயதில் இறந்தார். சுதந்திர தாகத்தை கொடுத்த மாமனிதர், நம் நாடு சுதந்திரம் அடைந்ததை காணக் கொடுத்துவைக்கவில்லை.
பாரதி குறுகிய காலமே வாழ்ந்தார்
காலம் வென்ற கவிஞராக சிறந்தார்
நம் சுதந்திரத்திற்கு கூக்குரலிட்டார்
இறுதியில் ஏழையாகவே இறந்தார்
குறுகிய கால வாழ்க்கையில் சாதனை புரிந்து சென்றவர்கள் பலருண்டு. ஆதி சங்கரர் முப்பத்தியிரண்டு வயது மட்டுமே வாழ்ந்து, அத்வைத
நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள
சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்
அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!
'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து
அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால
சிறு வயதில் படாத பாடு பட்டு, கேட்டேன் சினிமா பாட்டு
பெரிய வயதில் நான் பாடுவதை கேட்டு, ஓடுகிறாரே இருக்கையை விட்டு!
ஏழாம் வகுப்பில் ஒரு முறை வாங்கினேன் மதிப்பெண் இரண்டு
நல்ல வேளை, நான் சைவம் என்பதால், கிடைக்கவில்லை முட்டை ஒன்று!
நான் சின்ன பையனாக இருந்தபோது, என் பாட்டி செய்தார், ஜாங்கிரி
ரகசியமாக அதை ருசிக்கப் போனேன், விழுந்தேன் வழுக்கி வாரி!
பள்ளியில் படிக்கையில் நான் ஆடவில்லை ஒருபோதும் விளையாட்டு
இப்போது தெரிகிறது வாழ்க்கையே ஒரு விளையாட்டு!