Ramasubramanian - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramasubramanian |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 17-Apr-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 1528 |
புள்ளி | : 605 |
நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்
செய்தி: ருஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஓயாத சண்டை
குறும்பு செய்தி: இதென்ன பெரிய விஷயம், கடலில்கூடத்தான் ஓயாமல் அலைகள் மோதிக்கொண்டே இருக்கிறது.
&&&
செய்தி: சட்டவிரோதமாக அமரிக்காவில் வசிப்பவர்களை அதிபர் ட்ரம்ப் நாட்டைவிட்டு வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்.
குறும்பு செய்தி: நாமும் கூடத்தான் நம் உடலுக்குத்தேவையில்லாத பொருட்களை தினமும் வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம்.
&&&
செய்தி: இன்று இந்தியாவில் லஞ்சமும் உழலும் மிகவும் அதிகரித்துவிட்டன.
குறும்பு செய்தி: ஏன் அதிகரிக்காது? அன்றைய நாற்பது கோடி ஜனத்தொகை இன்று நூற்று நாற்பது கோடி ஆகிவிட்டது.
&&&
செய்தி: ஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாடு, தொடர்ந்
ஒரு வயதான மனிதர் தடுமாறிய வண்ணம் நடந்து சென்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் கையில் ஒரு கைத்தடி இருந்தது. பின், அவர் ஏன் தடுமாறிய வண்ணம் நடந்து செல்கிறார்?
டாஸ்மாக்கில் அவரது தாகத்தை கொஞ்சம் போக்கிக்கொண்டு வந்தார்.
&&&
ஒரு பெண் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நாயைப்பார்த்துவிட்டு வீல் வீல் என்று சத்தமிட்டாள். ஏன்? அவளுடன் சென்றுகொண்டிருந்த அவளது நாயின் பெயர் வீல்.
&&&
புதிதாக பட்டினத்திற்கு வந்த ஒரு கிராமவாசி காய்கறி வியாபாரம் செய்கிறார். ஒரு மாத்திற்கு பின்பு கணக்கு பார்க்கும்போதுதான் தெரிகிறது, அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று. எப்படி?
அவரிடம் காய்கறி வாங்க வந்த அனைவரிடமும் அவர்
எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்
மொழிகள் வேறு முறைகள் வேறு
உணவு முறையும் வேறு வேறு
இருந்தபோதும் ஒற்றுமைதான் நம் நாட்டின் ஆணிவேரு
(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடியரசாய் திகழுகின்ற அற்புதம்)
காந்திஜியின் கொள்கைகளை போற்றும் பாரதம்
காமராஜர் வாய்மையினை வாழ்த்தும் பாரதம்
அகில உலக நாடுகளும் வியக்கும் பாரதம்
வறுமை நிலை குறைந்து வரும் நல்ல பாரதம்
அருமையான கலாச்சாரம் நிறைந்த பாரதம்
வாங்க வாங்க நாமும் சேர்ந்து ஆடிப்பாடலாம்
பேதமின்றி நாம் உழைத்தால் உலகில் சிறக்கலாம்
(எமது தேசம் பாரதம் எமக்கு இது பெருமிதம்
ஜனநாயக குடி
நிகரற்றத் தலைவர்கள் வழிநடத்தினர்
எண்ணற்ற தொண்டர்கள் உயிர் கொடுத்தனர்
அடிமை வாழ்வு ஈனம் என்று தெளிவு கண்டனர்
அஹிம்சை எனும் வாளேந்தி போர் தொடுத்தனர்
சுதந்திரத்தை பெற்ற பின்னர் சுரம் இழந்தனர்
சாதி சமய வேற்றுமையில் விழுந்து உழன்றனர்
இடையிடையே முனிகள் தோன்றி அறிவுரைத்தனர்
இருந்தாலும் விஷமிகள் பலர் மாற்றம் வெறுத்தனர்
இந்த நாளில் நாட்டின் நிலைமை மாறி வருகுது
சாதி இனம் மொழி கடந்து ஜனங்கள் வாழுது
பொருளாதாரம் ஓங்கியே நம் நாடு மிளிருது
வல்லரசாய் உலகில் ஒளிர மிகவும் விழையுது
ஆங்காங்கே பெண்களுக்கு அநீதி நேருது
இதைத்தாண்டி பெண் வர்கம் ஓங்கி வளருது
விவசாய உற்பத்தி திருப்தி
பசும்புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு பாலுடன் உடலையும் தந்திடும் ஆடு
அதன் பால் மட்டுமின்றி உடலையும் உரித்து சுவைக்கிறான் இந்த ஆளு
புல் புண்ணாக்கை அசைபோட்டுவிட்டு சுவையான பால் தருகிறது மாடு
பிறரை புண்ணாக்காக எண்ணி, அவனிடமே பிடுங்கி சாப்பிடுவது ஆளு
பசி எடுக்கும்போது, இன்னொரு விலங்கை கொன்று உண்டிடும் சிங்கம்
பசி தணிந்தாலும் பணருசி என்றுமே தணியாத பேராசைகொண்ட ஆளு
உடலால் உயர்ந்து பெருத்திருப்பினும் சைவ உணவே உண்ணும் யானை
உடல் மனம் சிறுத்திருப்பினும் அசைவத்தையே அதிகம் உண்ணும் ஆளு
எப்போதாவது ஒருமுறை கடித்தாலும், நன்றியுணர்வுடன் இருப்பது நாய்
எந்நேரமும் பிறரை உடலாலும் மனதாலும்
நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள
சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்
அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!
'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து
அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால