Ramasubramanian - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : Ramasubramanian |
| இடம் | : கோயம்புத்தூர் |
| பிறந்த தேதி | : 17-Apr-1959 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 15-Jun-2021 |
| பார்த்தவர்கள் | : 1629 |
| புள்ளி | : 614 |
நான் ஒரு குழந்தை, உணவை ருசித்து சாப்பிடுவதில்
நான் ஒரு மாணவன், வாழ்கை எனும் புதிரான பள்ளியில்
நான் ஒரு கலைஞன், என் கற்பனையை படைப்பதில்
நான் ஒரு பாடகன், எனக்கு விருப்பமான பாடல்களை பாடுவதில்
நான் ஒரு ரசிகன், நகைச்சுவையை, மனித இயல்புகளை சொல்லி, கேட்டு பார்ப்பதில்
நான் ஒரு மனிதன், பாசம், பண்பு, கருணை கொண்டவன் என்பதால்
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ என்ன பூ?
இதுதான் கேள்வி.
இதற்கு ஒவ்வொருவரும் என்ன பதில் சொல்கிறர்கள் என்று பாப்போம்.
பொது மருத்துவர்: சிரப்பு (cough)
சிறப்பு மருத்துவர்: உறுப்பு
பள்ளிமாணவன்: படிப்பு
கல்லூரி மாணவன்: இளிப்பு
பாகற்காய் வியாபாரி: கசப்பு
இனிப்பு கடைக்காரர்: இனிப்பு
சைவ மனிதருக்கு: பருப்பு
பாதுகாப்பு அமைச்சர்: துருப்பு
இளம் வாலிபர்: துடிப்பு
பாட்டா கடைக்காரர்: செருப்பு
குண்டு மனிதர்: தடிப்பு
மாவுமில் நடத்துபவர்: சலிப்பு
திமிரு பிடித்தவர்: கொழுப்பு
குணசித்ர நடிகர்: நடிப்பு
இடுப்பு ஒடிந்தவர்: பிடிப
கோயம்பத்தூர், வடவள்ளி காய்கறிச்சந்தைக்குச்சென்று காய்கறிகள் வாங்குவது எனது வழக்கம். இந்தச் சந்தை, வாரத்தில் எல்லா நாட்களிலும் உண்டு. சராசரி பத்துநாட்களுக்கு ஒருமுறை நான் சென்று வருவதால், அங்கு காய்கறிகள் விற்கும் பலரையும் எனக்குத் தெரியும்.
மனிதரின் குணத்தினால் அல்லது பேசும் தன்மை மற்றும் தரமான காய்கறி என்பதால், குறிப்பிட்ட சிலரிடம் நாம் சில காய்கறிகள் வாங்குவோம். அந்த வகையில் நான், பூசணி மற்றும் பரங்கிக்காய்களை முண்டாசுகட்டிய ஒருவரிடமிருந்துதான் வாங்குவேன். இவர் அன்புடன் பழகுபவர் மற்றும் தரமான காய்களைமட்டுமே எனக்கு விற்பவர்.
அடுத்தது, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற கீரைகளை, நான்
மெல்லிசை விஸ்வநாதன் பிறந்த நன்னாள் இன்று
கவிஞர் கண்ணதாசன் பிறந்த பொன்னாள் இன்று
இருவரும் இணைந்து சாதித்தது ஒன்றல்ல, அன்று
மாபெரும் இம்மேதைகளை இன்று பாடுதல் நன்று
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பாளர்கள்
இவர்களின் மெட்டினை நம்பிய தயாரிப்பாளர்கள்
இசை ஜோடி கற்பனை ஊற்றில் பிறந்த மெட்டுகள்
அம்மெட்டுகளுக்கு உயிர் தந்த கவியரசின் வரிகள்
மனைவியின் மீதான உயிர்ப்பற்றே 'பாலும் பழமும்'
கணவன்மீதான தெய்வபக்தி 'எங்கே நீயோ நானும்'
அண்ணா தங்கை உயிர்ப்பாசம் 'மலர்ந்தும் மலராத'
அப்பாவி தம்பி ஏமாற்றம் 'பொன் ஒன்று கண்டேன்'
மகளை இழந்த தந்தையின் சோகம் 'பார் மகளே பார்'
தந்தை மகனின் போராட்ட
ஆறாவது படிக்கையில் கிடைத்த அருமை நண்பன்
மனம் மாறாது இணைந்திருக்க விரும்பிய நண்பன்
செல்லுமிடமெங்கும் என் துணை கொண்ட நண்பன்
என் வார்த்தைகளில் நகைச்சுவை ரசித்த நண்பன்
எவ்வளவு வேலைகள் அவன் வீட்டில் இருப்பினும்
அவனெனை நாடி வந்து பேசாத நாளேயில்லை
பின்னணிப் பாடகர்கள் பலர் பாடிய பாடல்களை
நான் பாடக்கேட்டு வெகுவாக ரசித்த நண்பன்
செவ்வாய்தோறும் அதிகாலையில் மாங்காடு சென்று
காமாட்சிக்கு எலுமிச்சைத் தந்து தரிசனம் கண்டு
இதுபோல் தொடர்ந்து ஐம்பதியிரண்டு வாரங்கள் சென்று
நாங்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமன்று
வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லை என்பது சத்தியம்
எங்கள் உயிர
பசும்புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு பாலுடன் உடலையும் தந்திடும் ஆடு
அதன் பால் மட்டுமின்றி உடலையும் உரித்து சுவைக்கிறான் இந்த ஆளு
புல் புண்ணாக்கை அசைபோட்டுவிட்டு சுவையான பால் தருகிறது மாடு
பிறரை புண்ணாக்காக எண்ணி, அவனிடமே பிடுங்கி சாப்பிடுவது ஆளு
பசி எடுக்கும்போது, இன்னொரு விலங்கை கொன்று உண்டிடும் சிங்கம்
பசி தணிந்தாலும் பணருசி என்றுமே தணியாத பேராசைகொண்ட ஆளு
உடலால் உயர்ந்து பெருத்திருப்பினும் சைவ உணவே உண்ணும் யானை
உடல் மனம் சிறுத்திருப்பினும் அசைவத்தையே அதிகம் உண்ணும் ஆளு
எப்போதாவது ஒருமுறை கடித்தாலும், நன்றியுணர்வுடன் இருப்பது நாய்
எந்நேரமும் பிறரை உடலாலும் மனதாலும்
நமக்கு மிகவும் வியப்பையும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் பல சந்தேகங்களை கொடுக்கும் விஷயம்தான் கடவுள் எனும் சொல். என்னை பொறுத்த வரையில், உலகில் பிறந்த அல்லது பிறக்கும் எவரும் கடவுள் இல்லை. கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் கடவுளை கண்டதுமில்லை, பிறருக்கு காட்டியதும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத்தானே உணர்ந்தார் என்பதும், ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டினார் என்பதெல்லாம் பிறர்க்கு தெரிவிக்கமுடியும் சாதாரண விஷயங்கள் அல்ல. எப்படி ஒருவருக்கு தலைவலி என்றால் 'எனக்கு தலைவலி' என்று மட்டுமே கூறமுடியும், அதை பிறர் கண்ணுக்குத் தெரிய, அவர்கள் தெளிந்து உணர்ந்து கொள
சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும்
அப்போது என் வயது சுமார் பதிமூன்று. அந்தப் பின் மத்திய வேளையில் வீட்டில் என்னைச் சுற்றி யாரும் இல்லை. சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் என் வீட்டில் சாய்ந்து கொள்ளும் நாற்காலி ஒன்றில் நான் சாய்ந்த வண்ணம் இருந்தேன். அந்த நேரம் மதியமும் இல்லை மாலையும் இல்லை. வெயிலும் அதிகம் இல்லை. என் கண்களை மூடிய வண்ணம் இருந்தேன்.
"ஆஹா, எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. எங்களது சொந்த வீடு. இத்தனை வருடங்கள் இந்த வீட்டில் காலத்தை ஒட்டிவிட்டேன். இனி வரும் காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பேன். ஏன், நான் இதே சாய்வு நாற்காலியில் இந்த இடத்திலேதான் இறப்பேன். எனக்கு உலகில் வேறு எதுவும் தேவை இல்லை. பணம் வேண்டாம் ஆனால் அம்மாவின
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நல்லதை நினைப்போம்...!!
உதவிகள் செய்வோம்...!!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்...!!
'எழுத்து' குழுமத்தினருக்கும் மற்றும் என் நட்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து
அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால