திரும்பிப் பார்க்கிறேன் நூல் ஆசிரியர் இரா இரவி நூல் மதிப்புரை பேரா ஜி இராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை மாவட்டம்

திரும்பிப் பார்க்கிறேன்! நூல் ஆசிரியர் இரா. இரவி !

நூல் மதிப்புரை ;பேரா. ஜி. இராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர் மற்றும்
தலைவர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை மாவட்டம்.

முதல் பதிப்பு. 2025. வானதி வெளியீடு. 78 பக்கங்கள். ரூ.70/-

அணிந்துரை வழங்கிய ஏர்வாடி S. ராதாகிருஷ்ணன், ரவி, பேரா. ரா. மோகன் மூலம் கிடைத்த இலக்கியப் பரிசு என்கிறார். அவர் கண்ணில் எது பட்டாலும் பாடலாக்கி விடும் திறன் கொண்டவர் என்கிறார். இரவி, தன்னுரையில், இது தனது 33 - ஆவது நூல் என்றும், உண்மை நிகழ்வுகளைக் கட்டுரைகளாக்கி உள்ளார். இந்நூலில் பலர் விடுபட்டுள்ளார்கள், அவர்கள் 2- ஆவது பாகத்தில் வருவர் என்கிறார். இந்நூலில் 46 கட்டுரைகள் உள்ளன.

சுற்றுலாத் துறையில் பதிவுறு எழுத்தராக பணி தொடங்கிய இரவி, நேர்மையாகப் பணியாற்யதால், 1992 - இல் குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர் விருது பெற்றிருக்கிறார். உடல்நிலை மற்றும் இலக்கியப் பணி காரணமாகவும், 1 ஆண்டுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஆத்மார்த்த நட்பை அப்துல் கலாம் மற்றும் இறையன்பு மீது காட்டியுள்ளார். இவரின் கவிதையை வாசித்த நீதியரசர் கற்பக விநாயகம் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். தன் மூத்த மகன் பிரபாகரனுக்கு சென்னை கல்லூரியில் விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு முயற்சி எடுத்த இறையன்பு அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார். புதிதாகத் திருவிழாவில் இறையன்பு அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு மதிப்பபூதியம் பெறுவதில்லை என்ற தகவலையும் தருகிறார்.

அதுபோல், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களும் கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்குவதற்கும் பணம் பெறுவதில்லையா ம். பாப்பையா அவர்கர்கள் தன் மனைவி மீதுபாசம் வைத்திருந்ததை அவர் மறைந்தபோது, நேரில் கண்டதாகக் கூறுகிறார். நீதியரசர் மகாதேவன் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றபோதும் எழிமையைக் கடைப்பிடிக்கிறார். தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை நிறுவி வருடா வருடம் இலக்கியவாதிகளுக்கு ரூ.1/- லட்சம் பரிசளிக்கிறார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவையும் தன் எழுத்தால் கர்ந்துள்ளார். பெரியார் வேடத்தில் நடித்த சத்யராஜ் பற்றியும் கட்டுரை உண்டு. பேரா. ஞானசம்பந்தன் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் ஃபோனில் உரையாடிய தன் இனிய அனுபவத்தையும் கூறுகிறார். எழுதுததாளர் சோ. பரமசிவம் உடல் நலிந்த நிலையில், அவர் விரைவாக விமானப் பயணம் மேற்கொள்ள உதவியுள்ளார். தான் பயின்ற சேதுபதி மேல்நிலைப்பள்ளி பற்றியும், அதில் பணியாற்றிய தமிழ் அறிஞர் அரசன் சண்முகனார் பற்றியும் அரிய தகவல்களையும் அளிக்கிறார். HCL அதிபர் சிவ் நாடார் தான் படித்த மாநகராட்சிப் பள்ளியை, தனியார் பள்ளியை விட அதிக தரம் உயர்த்திய விவரத்தையும், இது பற்றி யாருக்கும் விளம்பரப்படுத்த வேண்டியதில்லை என்ற தகவலையும் தருகிறார்.

அம்மிக் கல்லைக் கொத்தாத கவிஞர் அப்துல் ரகுமான் பற்றி பெருமையாகக் கூறுகிறார். 90 வயதிலும் தமிழ் தொண்டாற்றிய சேதுராமன் பற்றியும், கவிமணி வீரபாண்டி தென்னவன், பெரியார் நெறியாளர் வரதராஜன், எர்வார்டியார் ராதாகிருஷ்ணன், இந்திரா சௌந்தரராஜன், கார்த்திகேயன் மணிமொழியன், பொறியாளர் சுரேஷ், செல்வகீதா, புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன், மனித நேயம் ஜேம்ஸ், ஜான் மோசஸ் போன்ற போன்ற பலரின் பெருமைகளையும், தொண்டுகளையும் போற்றுகிறார். மதுரையில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் இவரை தவறாது காணலாம்.

இவர் கண்ட காட்சியை உலகம் முழுவதும் பரப்புவதில் வல்லவர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செயல்படாமல் இருந்த சிற்றுண்டி சாலையை இறையன்புவின் உதவியை நாடி, மாணவர்களும், நூலகப் பயனாளிகளுக்கும் சிற்றுண்டி சாலை இப்போது பயன்படுகிறது. இது போன்ற பல நல்ல நூல்களை அவர் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

--

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (31-May-25, 8:41 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 8

மேலே