எழிச்சி தமிழன் விக்னேஷ்

தியாகத்தின் அருஞ்சுடரே....!
இதயத்தின் மொழிகளையும்
இலக்குகளின் திசையையும்
அறிமுகப்படுத்திய ஆசிரியர் நீ !

தமிழுக்கு உயிர் கொடுத்தவனே..!
கடலாழம் கொண்ட மொழிப்பற்றும்
சிகரம் தொட்ட தமிழ் தேசியமும்
நம் நாட்டின் அந்நியர் ஆதிக்கமும்
நிழலாய் உன்னை தொடர்ந்தன.

தமிழரின் உரிமையைப் பெற
உன் வாழ்வை தியாகம் செய்தவனே..!
உன் வாழ்வின் முடிவு தான்
நம் தேசத்தின் விடிவு என்று வீறுகொண்டு எழுந்தவனே...!

உனது தியாகம் ஒரு தேசத்தின்
தமிழ் இனத்தின் அடையாளமடா..! உனது இறுதி மூச்சே தமிழ் தான்
என்று நிரூபித்து விட்டாயே...!

இவ்வுலக தமிழினமே
உன் தியாகத்தை பார்த்து
கண்ணீர் சிந்துகின்றனரே..!
நீ தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை
எம் தமிழர் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறாய்...!

அமைதியாக துயில் கொள்!
உன் கோரிக்கை நிறைவேறுமடா...!
தமிழரின் உரிமை மீட்கப்படும்
தொலைவில் அல்ல விரைவில்..

எழுதியவர் : சி.பிருந்தா (17-Sep-16, 4:26 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 122

மேலே