சார்லி கிருபாகரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சார்லி கிருபாகரன் |
இடம் | : thoothukudi |
பிறந்த தேதி | : 28-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1006 |
புள்ளி | : 112 |
நான் நானாகவேயிருக்கிறேன்
நாடகங்களின் முடிவுகளிலும்
நான் நானாகவேயிருக்கிறேன்
நம்பிவிடு ஒன்றைமட்டும்
நான் நானாகவேயிருக்கிறேன்
நடுவழியில் பயணம் தெரிவுசெய்பவன் நான் அல்ல
பயணத்திற்காய் வழியை சமைப்பவன்
உனக்குத் தெரிந்த
நான் நானாகவேயிருக்கிறேன்!!
ஆயிரம் பூக்கள் அடுக்கிவைத்தேன் பரன்மேல்
அறைக்குள் நுழைந்தால் அவள்மேல் விழுமென்று
தோரண துண்டுகள் துவைத்து வைத்தேன்
வியர்த்தால் முகமேனும் துடைப்பாளென்று
தோதான இருக்கைகள் துடைத்து வைத்தேன்
இடமின்றி இடக்கையை தொடுவாளென்று
விழித்தால் கனவென மாயுமென்று
புரண்டேன் பின்னுமோர் நாழிகையும்
தடதடவென்ற தாழ்பாள் சத்தத்தில்
தடையேதுமின்றி தொகையிட்டதெல்லாம்
நடக்குமென்றிருந்தேன்
கேட்டிட்ட சத்தமென்னவோ
தெருமுனை டீக்கடைக்காரனது
நேற்றைக்கு தருவதாய் சொன்ன
பாக்கித்தொகையை இன்றைக்கே தரச்சொல்லி
ஆகாயம் அழுதாலும்
விலக்காது நெஞ்சம்
தோதாக விரல் பற்றி
இதழோடு தஞ்சம்
நேற்றைக்கு நீ தந்த இளஞ்சூட்டு முத்தம்
தவறாமல் தேடுதே இடஞ்சுட்டி நித்தம்
ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டோம்
அவமானமே அடையாளமாய்
அதிகாரம் மறந்தோம்
ஆளுமைகள் தொலைத்தோம்
கல்வி மறுக்கப்பட்டோம்
கழிவாய் ஒதுக்கப்பட்டோம்
உரிமைகள் உண்டென்றார் சிற்பி!
உன்னை நீ யார் என்று கற்பி!!
தன்மானம் மறைப்பதே
தகுமானம் எனச் சொல்லி
தன்னாள் தோறும்
தனியென நிற்கச் செய்தார் முன்
தடையேதும் இலவென்று ஒன்றுசேர்!
நீ தீண்டவும் சட்டம் இதுவே எனச் சொல்லி
யாண்டும் தீட்டென தள்ளி நின்றார் தனக்கும்
மீளவே செய்தான் சொற்படி நடந்திட
உனக்கும் கீழே கிடப்பவர் கோடி
சமனாய் நிற்கவே புரட்சி செய்! !!
பூரண சந்திரன் போல் பொதுமி நான் நின்றதில்லை
புறங்கை முத்தமிட வளைகள் பூண்டதில்லை
ஆரணங்கள் பூட்டி அரியணை ஏறியதில்லை
தோரண சடைகள் பூண்டு விழாவினை கண்டதில்லை
வயிற்றுக் கோடுகளில் வடிவம் கண்டதில்லை
வலக்கை ஊன்றி எழுவதில் யாரும் ஆருடம் சொன்னதில்லை
மாவடு ருசிப்பதில் மயக்கமேதுமில்லை
மாதவிலக்கங்களில் மாற்றங்கள் ஏதுமில்லை
பருத்துமெலிந்த நாட்காட்டிகளில் தவணைகோடுகள் ஏதுமில்லை
பற்றுவைத்த வைத்தியசாலைகளில் ஏதும் தோதாண சொற்களில்லை
சுற்றிவந்த அரசமரங்களின் எண்ணிக்கை குறையவில்லை
தவிர்க்கிறேன் எனக்கொரு உயிர் எனக்குள்ளேயிருந்து என்ற கனவினை
ஆயிரமடி பயணங்களில் அடைந்திருக்கிறேன் ஆனந்தமடி
அடைக்கல சிறகுகளை விரித்துக்கொண
கோடை கதிர் அவன்
ஓடவிட்டான்
மேலிருந்து கீழாக
ஆடைக்குள் ஓடையை;
வெப்பகாற்றும் வேகமாய்
பாய்ந்து
ஈரக்குலையின் ஈரமும் காய்ந்தது;
மலிவுகட்டண மாநகரபேருந்துக்காய்
மாநாட்டு கூட்டமாய்
மக்கள்
எண்ணெய் தொய்ந்த முகத் 'ஓடு'
நின்ற கூட்டத்தில்
வெந்த கிழவன்
கும்பிட்டு கொண்டானோ.......?!
இரைதேட
ஈயக்கம்பியில் பூமிதித்த காகம்
பொறுக்காமல்
கதரி கரைந்ததோ....?!
கோடை விடுப்பில்
குதுகலமான
மட்டைபந்து விளையாட்டை
முட்டு கட்டை போட்ட வெயிலை எண்ணி
தன் ஏட்டு மேகத்தை
குழந்தை ஏக்கதில் தொட்டதோ......?!!?
பசிக்கு வீசிய தானியமாய்
பக்தன் உடைத்த தேங்காயய்
பல துளிகளாய் மேகத்தண்ணீர் சிதற
வெயிலுக்கு
கோடி பேர்கள் இருந்ததுண்டு
என்னை மட்டும் உன் கண்கள் கண்டதேனோ
பொருத்தம் இல்லையென்று பலபேர் வெறுத்ததுண்டு
உனையும் நான் அப்படியே நினைத்ததுண்டு
தொட்டுவிட நீ எத்தனித்ததும்
தழுவிக்கொள்ள நான் தத்தளிக்கிறேன்
சுமைகளல்ல நீ எனக்கு
சுகமாகவே சுமக்கிறேன் - உன்
விரல்பற்றி நடந்த பொழுதுகளும்
எனைப்பற்றி நீ சிலாகித்த வரிகளும்
இன்னும் திகட்டாமல் இனிக்குதடா
உன்னோடு நான்கண்ட பொழுதுகள்
ஆயிரமாயிரம் என்றிருக்க
சட்டென தவிர்;த்தாயே
சடங்கென நினைத்தாயோ
சலனமற்றுக்கிடக்கிறேன் செருப்பென
நீ மீண்டும் வருவாயென
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
இடைவெளி இல்லா இரவுகள் தோறும்
இடையிடமாய் எச்சில் படுத்தியவென்
இதழ்களை இறுகக் கடித்தபடி
மெல்லினமாய் நீ
உச்சரித்த மகரமெய் ஒன்றுமட்டும்
அறைதனிலெங்கும் மோதி ஒலிக்குதடி
நண்பர்கள் (24)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

ப திலீபன்
பெங்களூரு

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
