நீ மீண்டும் வருவாயென

கோடி பேர்கள் இருந்ததுண்டு
என்னை மட்டும் உன் கண்கள் கண்டதேனோ
பொருத்தம் இல்லையென்று பலபேர் வெறுத்ததுண்டு
உனையும் நான் அப்படியே நினைத்ததுண்டு
தொட்டுவிட நீ எத்தனித்ததும்
தழுவிக்கொள்ள நான் தத்தளிக்கிறேன்
சுமைகளல்ல நீ எனக்கு
சுகமாகவே சுமக்கிறேன் - உன்
விரல்பற்றி நடந்த பொழுதுகளும்
எனைப்பற்றி நீ சிலாகித்த வரிகளும்
இன்னும் திகட்டாமல் இனிக்குதடா
உன்னோடு நான்கண்ட பொழுதுகள்
ஆயிரமாயிரம் என்றிருக்க
சட்டென தவிர்;த்தாயே
சடங்கென நினைத்தாயோ
சலனமற்றுக்கிடக்கிறேன் செருப்பென
நீ மீண்டும் வருவாயென

எழுதியவர் : அ சார்லி கிருபாகரன் (2-Feb-23, 3:04 pm)
பார்வை : 227

மேலே