அப்பா என்றழைக்கிறது கவிதை

#அப்பா என்றழைக்கிறது கவிதை..!

கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!

எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!

கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (22-Jul-24, 11:26 am)
பார்வை : 77

மேலே