எம் அம்மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எம் அம்மு
இடம்:  Chennai
பிறந்த தேதி :  23-May-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Feb-2017
பார்த்தவர்கள்:  713
புள்ளி:  47

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
எம் அம்மு செய்திகள்
எம் அம்மு - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2020 9:25 pm

🟩🟦🟪🟧🟨🟫🟩🟦🟪🟦🟩

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🟥🟧🟨🟩🟦🟪⬛🟫🟥🟧⬛

கீதையை வைத்திருந்தாலும்

ஞானம் வரவில்லை

புத்தகக்கடைக்கு

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

பூக்கடை

வாடியிருக்கிறது

பூ விற்பவரின் முகம்

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

உழவன் வீட்டில்

பொங்கல் பொங்கியது

உடைந்த கலப்பையில்

◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️◼️

தூணிலும் இருக்கிறது

துரும்பிலும் இருக்கிறது

ஊழல்

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

எதிர் வீட்டில் திருமணம்

உறங்க முடியவில்லை

முதிர்கன்னன்


*கவிதை ரசிகன்*

⬛🟩🟧🟦🟥🟪🟫⬛🟩🟧🟦

மேலும்

அருமையான ஹைகூ... 10-Oct-2020 11:12 pm
எம் அம்மு - மன்னை சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2020 9:37 am

சலூன் கடைக்காரர்
கூட்டி பெருக்கி
ஓரம் தள்ளினார்
எல்லா ஜாதி
மயிரையும்

மேலும்

தம்பி கவின் சாரலருக்கு வணக்கம் எழுத்து தளத்தில் எண்ணம் என்ற பிறிவில் திருக்குறளிலற்கு உரை எழுதியவர்களின் தில்லுமுல்லை எழுதியுள்ளேன் . தயவு செய்து இருட்டடிபபு பட்டி உங்களின் கருத்தை பதிவு செய்ய கோறுகிறேன் 03-Apr-2022 7:25 pm
ஆம் இதுவும் உண்மை 01-Apr-2022 6:05 pm
தம்பி கவின் சாரலருக்கு வணக்கம் உதிர்ந்தபின் ஒன்றாகவில்லை. ! வெட்டித்தளளிய பின்னரே ஒன்றானது 01-Apr-2022 11:11 am
ஒன்றானாயோ ...என்று படிக்கவும் 01-Apr-2022 9:02 am
எம் அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2020 9:42 am

ஆடை, ஆபரணத்தால்
பூட்டி வைத்தனர்

அரை, குறை ஆடை தான்
அழகு என்றனர்

ஒப்பனைக்குள் உன்னை
ஒளித்து வைத்தனர்

பாலியல் பகுப்பால்
பதிக்கி வைத்தனர்

பொய் கதைகள் பலகூறி
புனிதம் என்றனர்

இப்படியே
கதை கூறி
உன் சிந்தனையை
சிதைத்துவிட்டனர்!!!

உண்மை கண்ணாடி
உன் முன்பே...
உலகம் வெல்ல
வா பெண்ணே!!!

மேலும்

இன்னும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தடையை உடைத்தே நடைபோடும் சூழல். 06-Nov-2022 4:06 pm
உண்மை ! ஆண் என்பதால் மட்டும் அறிவாளி அல்ல . பெண் என்பதால் மட்டும் அவள் மடமை என்றல்ல .எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதுமட்டும் உண்மை . இயற்க்கை விதியைத்தவிர . நல்ல கவிதை வாழ்த்துக்கள் . 03-May-2022 10:04 am
எம் அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2020 1:06 am

புனிதம் இங்கே உடையட்டும் !
புதுமைகள் பலவும் பிறக்கட்டும்!!

சாதிகள் எல்லாம் ஒளியட்டும்!
சமத்துவம் இங்கே பிறக்கட்டும்!

பாரினில் உன் புகழ் மிளிரட்டும்!
பாரதியின் கனவு பலிக்கட்டும்!

வாழிய பெண்மை வாழியவே!!
நின் தேசம் போற்ற !!வாழியவே!!!

மேலும்

எம் அம்மு - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2020 11:09 am

சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...

உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...

இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..

மேலும்

உண்மை... தோழரே... 01-Mar-2020 2:17 pm
முதுமை வரை காதல் வருமென்றால் அதுவே நிதர்சனமான அன்பு 29-Feb-2020 5:40 pm
எம் அம்மு - ஜீசஸ் பிரபா௧ரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Feb-2020 1:16 pm

சும்மா என் ஃலைப் நடந்த ஒரு ௧ாமெடியான விஷயத்த இங்௧ ஷேர் பண்றேன்....
அப்ப நான் +1 படிச்சுகிட்டு இருந்தேன். எங்க டவுன்-ல உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரில  அறிவியல் கண்காட்சி வச்சுருந்தாங்௧... எல்லா பள்ளி மாணவர்களும்
அதுல கலந்து௧்௧ அழைப்பும் விடுத்திருந்தாங்௧.
எங்க ஸ்கூல்-ல இருந்து யார தேர்ந்தெடுத்து அனுப்பலாம்ங்௧ிற  பொறுப்பு எங்க பிஸிக்ஸ் வாத்தியார்ட ஒப்படைக்கப் பட்டுருந்திச்சு.
அவரு +2 பசங்களுக்கு பப்ளிக் எக்ஸாம்கிறதால
+1ல இருந்து பசங்௧ல அனுப்ப முடிவு பண்ணிட்டாரு... நேரா எங்க வகுப்புக்கு வந்தவரு
டாப் 10 ரேங்கர்ஸ்லாம் எந்திருச்சு நில்லுங்க
அப்பிடினாரு..... எந்திருச்சு நின்

மேலும்

படிக்க படிக்க சிரிப்பு வருது.. மலரும் நினைவுகள் என்றும் இனிமை.. நானும் பள்ளிஅறிவியல் கண் காட்சிக்கு ஒரு அட்டை பாக்ஸ்ல போலீஸ் ஸ்டேஷன் என் அப்பா செஞ்சு கொடுத்தார். பள்ளிக்கு எடுத்துக்கிட்டு போனேன். என் தோழிகள் எல்லாம் நான் பார்க்கிறேன் பார்கிறேன்னு சொல்லி பிச்சு போட்டாலுக. மறுபடியும் நான் அதை சரிபண்ணி கொடுத்தேன். எல்லாம் தலைகீழாக ஓட்டி குழப்பி அள்ளி கொண்டுபோய் வச்சேன். இப்போ நினைத்தால் சிரிப்பு ஆனால் அன்று கவலை... 29-Feb-2020 4:09 pm
எம் அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2020 11:09 am

சதையாக
அழகாக
வருவது அன்பு அல்ல...

உயிராக
உணர்வாக
வருவது மட்டுமே அன்பு...

இது தான்
உண்மை காதல்..
இது தான்
உண்மை அழகு..

மேலும்

உண்மை... தோழரே... 01-Mar-2020 2:17 pm
முதுமை வரை காதல் வருமென்றால் அதுவே நிதர்சனமான அன்பு 29-Feb-2020 5:40 pm
எம் அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2019 6:35 am

யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!

தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!

தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!

உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!

உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!

சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!

அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!

பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!

வாழ்க ! பெண்மை வாழியவே!

மேலும்

நன்றி... தோழரே... 01-Mar-2020 2:15 pm
சிங்கப்பெண்ணே உன் கையில் பேணா உள்ளது எதற்கும் அஞ்சா 29-Feb-2020 5:45 pm
தங்களின் மகளிர்தின சிறப்பு கவிதைகள் அனைத்தும் மிக அருமை.எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.தங்களுக்கு என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் 09-Mar-2019 1:44 am
நன்றி அய்யா.. 08-Mar-2019 11:16 pm
எம் அம்மு - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 4:06 pm

மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை....
திருமணமான புது தம்பதிகளிடம் உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று மருத்துவர் கூறும்போது ,, பெண் சந்தோசப்படுகிறாள், ஆண் பெருமைப்படுகிறான்..
பெண் மனதில் ஒன்பது மாத காலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பாள்,,
ஆனால் ஒரு ஆண் மனைவி , குழந்தை இருவரையும் எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பான்.
பெண் மனதில் பத்து சதவிகித அன்பு இருந்தாலும் அதை நூறு சதவிகிதமாய் வெளிப்படுத்துவாள். ஆனால், ஒரு ஆண் மனதில் நூறு சதவிகித அன்பு இருந்தாலும் அதை பத்து சதவிகிதம் கூட வெளிப்படுத்த தெரியாது,,
ஆண்களுக்கு கோபத்தை

மேலும்

எம் அம்மு - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2017 3:55 am

வெள்ளிப்பனியென
விழும் பெரும் துளியென
கண்ணில் திரையென
காற்றின் துணையென
சட சட இசையென
சலனமும் நானென
வானக்கொடையென
வானவர் வரமென
உழவர்தம் உயிரென
உயிர்தரும் உயர்வென
சமத்துவம் பாரென
சமதர்ம வேரென
நீர்க்கணை நானென
நிலம்தொடும் போரென
பொழியுது மழை
பெரும் இறைவனின் கலை!

நீர்த்துளி சேருது
நிலத்தினில் உருது.,
நிலம்தொட்ட நீரதன்
நிறத்தினை மாற்றுது.
நதிகளாய் பிறக்குது
நளினமாய் நெளியுது.
நீர்விழும் அதிசயம்
அருவியாய் ஜொலிக்குது.
தரையினில் வெடிப்புகள்
தழுவலில் குலையுது.
தழும்புகள் மறையுது.
புற்களும் பிழைக்குது
பெரும் சிறு மரங்களும்
தலைக்குது சிலிர்க்குது!.
காய்களும் கனி

மேலும்

நன்றி நண்பா ! 05-Feb-2018 2:26 pm
கார்முகில் வார்த்த மழையென்றே மதுர கவி. இன்னிசை சந்தம்போல் இனித்தது. வாழ்த்துகள் நண்பரே.. 31-Jan-2018 2:47 pm
உன்மை முகமது.வாழ்வின் அர்த்தங்களை பிரதிபலிக்கிறது மழையின் வாழ்வு.நன்றி 30-Sep-2017 12:50 am
நண்பர் முபா அவர்களின் கருத்து பின்னூட்டம் என்றுமே தனி சிறப்பு நன்றி 30-Sep-2017 12:48 am
எம் அம்மு - பெருவை கிபார்த்தசாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2017 6:01 pm


பறவைகளின் பிரார்த்தனை..!

சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
—சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?


பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!


அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!


கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
—கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!


பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?


யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!


வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
—அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!


சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!


இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…

===============================================

வல்லமை மின் இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில், இன்றுமுதல் சனிக்கிழமை வரை சிறந்த கவிஞரென பாராட்டுபெற்ற கவிதை..

நன்றி பட உதவி:: கூகிள் இமேஜ்

மேலும்

கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளின் உள்ளத்தின் சுவாசங்களை ஆறறிவு மொழிபெயர்த்துள்ளது என்பேன் எத்தனை இனிமைக்குள் அடைப்பட்டு வாழும் அடிமை வாழ்நிலையில் பறவைகளை போல் மனிதர்களும் இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சுமைகளின் தேசத்தில் சுகங்களை தேடியலைகிறது இளவேனிற் காலம் 15-Jul-2017 8:03 pm
மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி..திரு ரஹ்மான்.. 15-Jul-2017 6:18 pm
அழகிய வரிகள், பறவைகளுடய மனதின் காட்சிப்பேழையாய் இக்கவிதை!!!! 14-Jul-2017 8:32 pm
கவிதைப்போட்டியில் இடம்பெற்ற இணையத்தின் லின்க்கை இங்கே காப்பி செய்ய முடியவில்லை, ஆதலால் அதில் இடம்பெற்ற முடிவுகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ...மணிமிடைபவளம். இக்கவிதை பற்றிய நடுவர் அவர்களின் கருத்து.. ============================================ ’சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என முழக்கமிடும் மனிதன் அதனைப் பறவையினத்துக்கு மறுப்பது ஏன்? குற்றவாளிகளை மட்டுமே கூண்டிலடைப்பது வழக்கமாயிருக்க, குற்றமேதும் செய்யாத அப்பாவிப் பறவைகளைப் பாவி மனிதன் கூண்டிலடைப்பது எதனால்? சிறைப்பட்டிருக்கும் பறவைகள் எமக்குச் சிறகுகள் எதற்காக? என்று புறாக்களின் கேள்விகளால் தன் கவிதையில் வேள்வி செய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு! 14-Jul-2017 7:10 pm
எம் அம்மு - பானு Maa அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2016 3:17 pm

என் நிவாரணம்!இயற்கையின் நிர்வாணம்! 

ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும் 
உரசிக் கொண்டு எப்படி 
உன்னால் மட்டும்!

எங்கு பார்ப்பினும் 
நீ துவக்கமனால்
எப்படி பார்த்து முடிப்பேன்!

எத்தனை சுகங்கள் 
மழை வெயில் குளிர் என்று 
அனுபவித்துக் கொண்டே போகி்றாய்!

இதோ பார்
மீண்டும் மீண்டும் இப்படியே 
ரசிக்க வைக்கிறாய் 
முகத்தைத் திருப்பாமல்
போதும் !

கட்டியணைத்துக் கொண்டு 
பிணமாகி்ட போகிறேன்!

எத்தனைப் பேர் தான்
உன்னைக்கா தல் கொள்ள,
பொறாமை அதிகம் 
உன்னை நான் மட்டும் சொந்தம் 
கொண்டாடிட !

முதலில்,
வெட்கத்தில் 
இலைகளாய் உதிர்வதை நிறுத்து,
மெதுவாக 
அசைந்து என் மீது விழும் 
நிழலை நிறுத்து! நிறுத்து!

என் மனம் சலனம் 
ஆகிக் கொண்டே போயிகிறது 
யார் உன்னை ரசித்தாலும்
கோபம் வராமல் 
அவர்களையும் ரசிக்கத் 
தோன்றுகிறது !

உன் மீதான ஒரு தலைக் காதல் 
நான் மட்டும் ரசிப்பேன்!
அனுபவிப்பேன்!ஏனென்றால்,

உன் நிர்வாணம் மட்டும்
என் நிவாரணம்  !

மேலும்

முதலில், வெட்கத்தில் இலைகளாய் உதிர்வதை நிறுத்து, மெதுவாக அசைந்து என் மீது விழும் நிழலை நிறுத்து! நிறுத்து! அழகிய வரிகள்... 16-Jul-2017 3:20 am
முதலில் வெட்கத்தில் இலைகளாய் உதிர்வதை நிறுத்து... மிக அழகு... இயற்கையின் ரசனை மிக அருமை 14-Jul-2017 2:06 pm
இயற்கையை அழகாய் ரசித்து எழுத்து இருக்கிறீர்கள் ...நன்று 14-Jul-2017 10:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

மன்னை சுரேஷ்

மன்னை சுரேஷ்

காட்டுமன்னார்குடி
செந்தில் லோகு

செந்தில் லோகு

திருநெல்வேலி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (20)

ஆநவீன் குமார்

ஆநவீன் குமார்

கோயமுத்தூர்
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மேலே