மகளிர் தினம் - பெண்ணே உனக்காக

ஆடை, ஆபரணத்தால்
பூட்டி வைத்தனர்

அரை, குறை ஆடை தான்
அழகு என்றனர்

ஒப்பனைக்குள் உன்னை
ஒளித்து வைத்தனர்

பாலியல் பகுப்பால்
பதிக்கி வைத்தனர்

பொய் கதைகள் பலகூறி
புனிதம் என்றனர்

இப்படியே
கதை கூறி
உன் சிந்தனையை
சிதைத்துவிட்டனர்!!!

உண்மை கண்ணாடி
உன் முன்பே...
உலகம் வெல்ல
வா பெண்ணே!!!

எழுதியவர் : எம் அம்மு (8-Mar-20, 9:42 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 151

மேலே