சொ பாஸ்கரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சொ பாஸ்கரன்
இடம்:  விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
பிறந்த தேதி :  04-Jun-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2015
பார்த்தவர்கள்:  311
புள்ளி:  371

என்னைப் பற்றி...

நான் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன். எனது ஊர் விளந்தை
ஆண்டிமடம்.

என் படைப்புகள்
சொ பாஸ்கரன் செய்திகள்
சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2023 9:43 pm

அறிவுகாட்டும் பாதையிலே அன்றாடம் போகணும்
ஆணும்பெண்ணும் சூழ்நிலையை அனுசரிச்சே நடக்கணும்
அனைவருமே உயர்ந்துவாழ ஆர்வத்தோட உழைக்கணும்
அடுத்தவரின் உழைப்பிலுண்ண அடியோடு வெறுக்கணும்

சாதிசமய பிரிவுகளைக் கேட்கும்நிலை மாறணூம்
சின்னபுத்தி மாறிநாட்டில் சமாதானம் மலரணும்
அர்த்தமற்ற சடங்குகளை அடியோடு ஒழிக்கணும்
அனைவருக்கும் பகுத்தறிவு பாடங்களை புகட்டணும்

உறவினோடு நட்பினோடும் உண்மையாக இருக்கணும்
உள்ளிருக்கும் பகமைநீங்கி ஊள்அன்போடு பழகணும்
உலகபொது மறையின்படி வாழ்வுதனை அமைக்கணும்
உள்ளதெல்லாம் பொதுவில் வைத்து சங்கடத்தை தவிர்க்கணும்

காலைநேரம் கண

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2023 9:06 pm

களவுபோகும் கனிமவளம்

கனிமவளம் உயிரென்று எல்லோரும் அறிவோம்
கண்ணைஇமை காப்பதுபோல் காத்திடவே எழுவோம்
கொள்ளைகொள்ளும் கூட்டத்தைக் காவுதர துணிவோம்
கூடிஒன்று சேர்ந்துநாம் இணைந்தொன்றாய் முயல்வோம்

மரம்வெட்டும் கூட்டத்தை மண்டியிடச் செய்வோம்
உரமாகும் படிஇந்த மண்ணுக்குள் புதைப்போம்
வழிந்தோடும் நதிகாக்கும் மணல்திருடும் பேரை
பழிபாவம் பார்க்காமல் குழியிலிட்டு எரிப்போம்

கனிமவளம் காக்கின்ற ஆர்வலரைக் கண்டால்
கடவுளென கால்தொட்டு கைகொண்டு தொழுவோம்
வைராக்யம் கொண்டிங்கு எல்லோரும் முயன்றால்
வையகத்தின் கனிமவளம் உயரும்நிலைத் தோன்றும்

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2023 9:04 pm

எழுச்சி பெறட்டும் இளைஞர் படை

இளைஞர் படையே எழுச்சிபெறு – நீ
இளைத்தவன் அல்ல துள்ளியெழு
உடலின் நரம்பினை முறுக்கேற்று – பெருங்
கடலலை போன்று செயலாற்று

மண்புழுவாய் உன்னை எண்ணாதே – இரு
கண்ணொளி வழிதரும் கலங்காதே!
நகக்கண் கொண்ட விரல்களினால் – உன்
நாட்டிற்கு உழைத்திட தயங்காதே!

நஞ்சாய் உலவிடும் கூட்டங்களை – இங்கு
பஞ்சாய் பறந்திட பாதையிடு
எஞ்சிடும் ஓரிரு தடைகளுமே – உனை
தஞ்சம் புகுந்தே மாலையிடும்

நீசரைக் கண்டால் விலகாமல் – நீ
நேருக்கு நேராய் மோதிவிடு
கூசிடும் காரியம் செய்வார்க்கு – நீ
கூரிய வாளாய் மாறிவிடு

அச்சத்தை உச்சத்தில் கொள்

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2023 9:03 pm

எழுஎழு தமிழா!

எழுஎழு தமிழா விழித்தெழு – உனை
அழுத்திடும் சோம்பலை பலியிடு
இரண்டினில் ஒன்று முடிவெடு – உனை
மிரட்டிடும் தடைகளை அழித்திடு

காலங்கள் உனக்குத் துணையாகும் – புது
கோலம்கொள் தடைகள் தூளாகும்
ஞாலமுன் அறிவால் ஒளிபெறட்டும் – உன்
சீலத்தை காசினி கைதொழட்டும்

முன்னேறி செல்லும் மனம்கொண்டு – நீ
,இன்றே தொடங்கு உன்பணியை
எண்ணிய எண்ணம் ஈடேறும் _ உன்
திண்ணிய நெஞ்சால் விதிமாறும்

கண்ணியம் உனக்கு உறவாக – உன்
கடமைகள் உயர்வுக்கு எருவாக
சூதுகள் அனைத்தும் பறந்தோடும் – உன்
சூத்திரம் கண்டு பகைமாறும்

தடைகளை உடைத்து படியாக்கு – அதில்
மடைபல

மேலும்

சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2018 6:37 am

எரிமலை நிகர்த்த இளையவனே – நீ
இன்னும் ஏனிங்கு உறங்குகிறாய்
கடமைகள் கோடி கிடக்கையிலே – உன்
கண்மூடி எதற்கு பதுங்குகிறாய்?

ஒன்றும் என்னிடம் இல்லையென – நீ
உளறித் திரிவது சரிதானா?
வென்றிட வையகம் இருக்கையிலே – நீ
வேதனை கொள்வது முறைதானா?

பாறையில் ஒன்றும் விளையாது - நீ
படுத்தே கிடந்தால் வாழ்வேது
மாலையின் பரிதியில் சூடேது – நீ
மலைத்தால் வெற்றியும் தீண்டாது

கால்கள் இரண்டையும் முன்னெடுத்து – நீ
கடலலை போன்று புறப்படு
தடுத்திடும் தடைகளை தவிடாக்கி – இந்த
தரணிக்கு யாரென காட்டிடு

மேலும்

நன்றி 14-Sep-2018 11:58 am
நன்றி 14-Sep-2018 11:56 am
Vira varikal nanpare 01-Sep-2018 10:39 pm
ஆஹா ஆஹா அருமை . அதிலும் இறுதி நான்கு வரிகள் 14-Aug-2018 7:17 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 7:06 pm

நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
---------நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
--------பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
-------- வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
----------மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே

விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
-----விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
------ உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொ

மேலும்

Thamizh therikkirathu... Arumai nanpare 01-Sep-2018 10:44 pm
mikka nanri 28-Jun-2018 7:42 pm
அருமை.வார்த்தைகளின் அலங்காரம் நாட்டின் அலங்கோலத்தை எடுத்துரைக்கிறது. 22-Jun-2018 8:46 pm
சொ பாஸ்கரன் - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2018 11:17 am

விரைந்து செல்லும்
கார்மேகமெல்லாம்
நிலம்தனை நனைத்துச்
செல்வதைப் போல உன்
பார்வை மழை சிறிதே
என்னையும் நனைக்கிறது!

ஒவ்வொரு நாளும்
என் வீட்டு ஜன்னல்களை
திறக்கும்போது
புன்னகைக்கின்றாய்
தோட்டத்து
ரோஜாவாயிருந்து!

என் இதய
சாம்ராஜ்யத்தில்
முடிசூடா ராணி
நீ!நீ!நீ!

என் இதய ராகங்கள்
யாவும் வீணையாகிய
உன்னிடமிருந்து
மீட்கப்பட்டவைதான்!

நீயில்லாத அத்தனை
இரவுகளையும்
கழித்திருக்கிறேன் ஆனால்
அந்த ஒருபகல்தனை
கழித்திட இயலாதவனாய்
இருப்பேன்!உனது
விடுமுறை நாட்களின் போது!

மேலும்

உண்மைதான்.நன்றி 20-Jun-2018 3:21 pm
காதல் தூண்டில் கவிதை யாகும் 20-Jun-2018 2:55 pm
மிக்க நன்றி சகோ 20-Jun-2018 9:51 am
அழகான பதிவு... இன்னும் எழுதுங்கள் 20-Jun-2018 4:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (103)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கௌடில்யன்

கௌடில்யன்

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .

இவர் பின்தொடர்பவர்கள் (106)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (107)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே