சொ பாஸ்கரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சொ பாஸ்கரன்
இடம்:  விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
பிறந்த தேதி :  04-Jun-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2015
பார்த்தவர்கள்:  335
புள்ளி:  384

என்னைப் பற்றி...

நான் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன். எனது ஊர் விளந்தை
ஆண்டிமடம்.

என் படைப்புகள்
சொ பாஸ்கரன் செய்திகள்
சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2023 6:39 pm

தமிழ் வாழ்க!
வாழியநீ தமிழ்மகளே!
வளம்தரும் திருமகளே!
வற்றாத சொல்வளத்தால்
வான்புகழ் கொண்டவளே!

உனைதினம் ஓதுவாரை
உலகறிய செய்பவளே!
உள்ளத்தின் துடிப்பாக
உயிரோடு இணைந்தவளே!

செம்மொழியாய் சிறப்புற்று
செம்மாந்து நிற்பவளே!
காப்பியங்கள் பலதந்து
காசினியில் உயர்ந்தவளே!

தலைநிமிர்ந்து நீநின்று
கலைபலவும் வளர்த்தவளே!
தனிச்சிறப்பு பலபெற்று
இனிமைபல சேர்ப்பவளே!

புலம்பெயர்ந்த தமிழருக்கும்
புதுமைபல சேர்ப்பவளே!
தமிழினத்தை தினம்காத்து
தாங்கிவரும் திருமகளே!

மின்னுலகில் நாள்தோறும்
மின்மினியாய் உலவுகிறாய்
கணினிக்கும் நீபொருந்தி
கனிச்சாறாய் இனிக்கின்றாய்!

புதி

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2023 8:28 am

தமிழன்
தமிழன் தரணியில் சிறந்தவனாம்
தாழ்ந்து பணிந்திடும் பண்பினனாம்
யாரையும் உறவாய் நினைப்பவனாம்
நீரையும் நிலத்தையும் துதிப்பவனாம்

கோழை குணத்தை வெறுப்பவனாம்
மேழித் தொழிலில் உயர்ந்தவனாம்
அகிலத்தின் கலைபல அறிந்தவனாம்
ஆடிப் பட்டத்தில் விதைப்பவனாம்

நிமிர்ந்து நிற்கும் அடையாளம்
நிலையாய் ஆயிரம் கொண்டவனாம்
இயலிசை நாடகம் இன்தமிழை
அயலவர் வியந்திட மொழிபவனாம்

ஈனச் செயல்களை புறம்தள்ளி
மானம் பெரிதென வாழ்பவனாம்
ஈந்திடும் குணத்தை இயல்பாக
இதயம் தன்னில் கொண்டவனாம்

வீரமும் காதலும் இருகண்ணாய்
விளங்கும் எண்ணத்தில் வல்லவனாம்
தயையும் தந்தையும் தெய்வமென
தாங்கிடு

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2023 8:50 pm

சிரிப்பின் சிறப்பு

சிரிப்பின் சிறப்பை சொல்வதற்கு
சிற்சில வார்த்தைகள் போதாது
சிரித்து வாழும் மனிதர்களை
சீர்கேடு எதுவும் சீண்டாது.

சிரித்த முகத்துடன் இருந்தாலே
திருமகள் உன்னில் தங்கிடுவாள்
அன்பிடும் புன்னகை நீசெய்தால்
அலைமகள் உன்னைக் கும்பிடுவாள்

பூவினும் மெல்லிய உதடுகளில்
புன்னகை நீயும் செய்கையிலே
புத்தொளி தோன்றும் முகத்தினிலே
புதுபலம் பொங்கும் அகத்தினிலே

வாய்விட்டு சிரிக்கும் மனிதரிடம்
நோய்கள் நெருங்கிட அஞ்சிடுமே
மெல்லிய புன்னகை செய்தாலே
மேன்மைகள் உனைவந்து கொஞ்சிடுமே

நகைச்சுவை உணர்வு இல்லார்க்கு
நாளும் இருளாய்த் தோன்றிடுமே

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2023 2:50 pm

வாழ்வு உன் வசமாகும்

கல்லும் முள்ளும் கலந்தது வாழ்வு
கவலையில் வீழ்ந்தால் ஏற்படும் தாழ்வு
உள்ளத்தில் வேண்டாம் எப்போதும் சோர்வு
உழைப்பு ஒன்றே வறுமைக்குத் தீர்வு

வாழ்வில் உயரும் எண்ணம் வந்தால்
வருகின்ற தடைகள் நடைக்கல் ஆகும்
விதியென்று சொல்லி விரக்தி அடைந்தால்
வீதியில் நிற்கும் நிலை உண்டாகும்

நிமிர்ந்து நிற்கும் மரமது புயலில்
நிலையது குலைந்து வேரோடு சாயும்
வளைந்து கொடுக்கும் நாணல் மீண்டும்
வளைவுகள் நிமிர்ந்து வீழ்ச்சியை வெல்லும்

ஊக்கம் உள்ளத்தில் திரண்டு வந்தாலே
தேக்கமும் தடைகளும் மிரண்டு ஓடும்
சுறுசுறுப் பென்ற மந்திரம் போட்டு
சூழ்ந்திட

மேலும்

சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2018 6:37 am

எரிமலை நிகர்த்த இளையவனே – நீ
இன்னும் ஏனிங்கு உறங்குகிறாய்
கடமைகள் கோடி கிடக்கையிலே – உன்
கண்மூடி எதற்கு பதுங்குகிறாய்?

ஒன்றும் என்னிடம் இல்லையென – நீ
உளறித் திரிவது சரிதானா?
வென்றிட வையகம் இருக்கையிலே – நீ
வேதனை கொள்வது முறைதானா?

பாறையில் ஒன்றும் விளையாது - நீ
படுத்தே கிடந்தால் வாழ்வேது
மாலையின் பரிதியில் சூடேது – நீ
மலைத்தால் வெற்றியும் தீண்டாது

கால்கள் இரண்டையும் முன்னெடுத்து – நீ
கடலலை போன்று புறப்படு
தடுத்திடும் தடைகளை தவிடாக்கி – இந்த
தரணிக்கு யாரென காட்டிடு

மேலும்

நன்றி 14-Sep-2018 11:58 am
நன்றி 14-Sep-2018 11:56 am
Vira varikal nanpare 01-Sep-2018 10:39 pm
ஆஹா ஆஹா அருமை . அதிலும் இறுதி நான்கு வரிகள் 14-Aug-2018 7:17 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 7:06 pm

நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
---------நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
--------பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
-------- வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
----------மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே

விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
-----விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
------ உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொ

மேலும்

Thamizh therikkirathu... Arumai nanpare 01-Sep-2018 10:44 pm
mikka nanri 28-Jun-2018 7:42 pm
அருமை.வார்த்தைகளின் அலங்காரம் நாட்டின் அலங்கோலத்தை எடுத்துரைக்கிறது. 22-Jun-2018 8:46 pm
சொ பாஸ்கரன் - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2018 11:17 am

விரைந்து செல்லும்
கார்மேகமெல்லாம்
நிலம்தனை நனைத்துச்
செல்வதைப் போல உன்
பார்வை மழை சிறிதே
என்னையும் நனைக்கிறது!

ஒவ்வொரு நாளும்
என் வீட்டு ஜன்னல்களை
திறக்கும்போது
புன்னகைக்கின்றாய்
தோட்டத்து
ரோஜாவாயிருந்து!

என் இதய
சாம்ராஜ்யத்தில்
முடிசூடா ராணி
நீ!நீ!நீ!

என் இதய ராகங்கள்
யாவும் வீணையாகிய
உன்னிடமிருந்து
மீட்கப்பட்டவைதான்!

நீயில்லாத அத்தனை
இரவுகளையும்
கழித்திருக்கிறேன் ஆனால்
அந்த ஒருபகல்தனை
கழித்திட இயலாதவனாய்
இருப்பேன்!உனது
விடுமுறை நாட்களின் போது!

மேலும்

உண்மைதான்.நன்றி 20-Jun-2018 3:21 pm
காதல் தூண்டில் கவிதை யாகும் 20-Jun-2018 2:55 pm
மிக்க நன்றி சகோ 20-Jun-2018 9:51 am
அழகான பதிவு... இன்னும் எழுதுங்கள் 20-Jun-2018 4:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (103)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கௌடில்யன்

கௌடில்யன்

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .

இவர் பின்தொடர்பவர்கள் (106)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (107)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே