H ஹாஜா மொஹினுதீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  H ஹாஜா மொஹினுதீன்
இடம்:  இரவாஞ்சேரி
பிறந்த தேதி :  02-Apr-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2015
பார்த்தவர்கள்:  7676
புள்ளி:  252

என் படைப்புகள்
H ஹாஜா மொஹினுதீன் செய்திகள்
H ஹாஜா மொஹினுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2025 3:51 pm

விருந்து நடக்குது,
வீதியைங்கும் மணக்குது!
விழாக் கோலத்திலே,
விதானமும் ஜொலிக்குது!

வந்தவர்கள் வாய் பிளக்க,
வலையோசை கலகலக்க!
வக்கணையில் வயதானோர்,
வாயெல்லாம் சிவக்குது!

சிறார்களின் சிரிப்பொலியில்,
சிந்தனையும் மறக்குது!
சிகை அலங் காரதிலே,
சிலந்தி வலையும் தோற்குது!

சாமந்தி பூ கூட,
சங்கமத்தில் மிளிருது!
இளந்தாரி மனமெல்லாம்,
இமயத்திலே பறக்குது!

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

பெருச்சாளிகள் உள்ளே நுழைய நிறைய ஓட்டை உள்ளது. 18-Dec-2025 4:47 pm
இருக்கோ இல்லையோ ....... சீட்டு முறைக்கு வந்தால் இவ்வளவு சந்தேகமும் இல்லை சண்டையும் இல்லை. நான் வாழும் இங்கிலாந்தில் ஒரு சீட்டு தபாலில் வரும் அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே . அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே முடிவு . அந்த இடைவெளியில் ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!! இது வேண்டாமே என்பதே என் தாழ்மையான எண்ணம் 29-Mar-2024 10:26 pm
இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
H ஹாஜா மொஹினுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 2:06 am

தலைகோதும் என் தாயே ;
தவிக்க விட்டுசென்றாயே !
உன் வரவை நான் நோக்க ;
உரக்கத்திலே வருவாயா !

தூரம் சென்ற என் தாயே ;
துக்கம் களைய வாராயோ !
கண்ணீரும் நிற்கவில்லை ;
கவலை போக்க வாராயோ !

செப்பாய் நான் இருந்தாலும் ;
தங்கமாய் எனை காண்பாயே !
தங்குமிடம் அத்தனையும் ;
தனிமையிலே தவிக்கின்றன !

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2022 3:52 pm

பெயரைச்சொல்லி மகிழ்கின்றோம் அவர்
பெயரால் ஸலவாத் ஓதுகின்றோம் !
கண்களை போல காக்கின்றோம் அவர் பெயருக்கு
களங்கம் வராது போற்றுகின்றோம் !

கண்ணியம் தந்து படுகின்றோம் .. அவர்
காலடித்தடத்தை தேடுகின்றோம் !
கண்மணி நாயகம் காண்பதற்கு அவர்
பெயரால் ஸலவாத் ஓதுகின்றோம் ! (ஸல்லல்லாஹு...)

நபிகளாரின் ஆசைப்படி ,
நாயன் அருளை பெறவேண்டி :
நாளும் நாங்கள் பாடுகின்றோம் !
நல்ல ஸலவாத் தினமும் ஓதுகின்றோம் !

பூமான் நபியின் மனம் குளிர ;
புகளுக்குரியவன் அருளவேண்டி :
நாளும் நங்கள் போற்றுகின்றோம் ;
நல்ல ஸலவாத் அதனை ஓதுகின்றோம் (ஸல்லல்லாஹு ......)

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2022 7:58 pm

மதம் என்னை மாற்றவில்லை !
மனிதம் இன்னும் சாகவில்லை !

கோபம் கரைந்தது ;
கோவிலுக்குள்ளே !
சாந்தமும் கிடைத்தது ;
சர்ச்சுக்குள்ளே !

மன நிம்மதியும் கொண்டேன் ;
மசூதிக்குள்ளே !
மலராய் உணர்ந்தேன் ;
மனதுக்குள்ளே !

அறிவை தேடினேன் ஆன்றோரிடம் !
கல்வியை தேடினேன் கற்றோரிடம் !
வாழ்வை தேடினேன் வயோதிகரிடம் !
தேடல் மட்டுமே தெளிவாய் இருந்ததால் ;
தெய்வத்தை எல்லா
மதத்திலும் கண்டேன்

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2018 11:53 am

வரக்கூடிய நாள் வறுமையை குறைக்கக்கூடிய நாளும் அல்ல, வசந்தத்தை கூட்டக்கூடிய நாளும் அல்ல வியாபார உக்திக்கு உங்கள் வக்கிர புத்தியை வருடிவிடும் ஒரு தினம் தான் இந்த காதலர் தினம்.கவனம் சிதறினால் நீ காணாமல் போய்விடுவாய்.பூப்பெய்த்த உன்னை கண்டு பூரிப்படையும் உன் தாய் தந்தையரை விடவா ஒரு கொத்து பூ கொடுப்பவன் உயர்ந்தவன் ஆகின்றான்? . கவனமாய் இரு சகோதரி.எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் எதுவும் செய்ததாக சரித்திரம் இல்லை.ஏமாளிப்பெண்ணே
என்ன சொன்னாலும் காதில் விழவில்லைதானே. ஆதங்கம் !

மனைவியை காதலித்தாலும் சரி மற்றவர் மகளை காதலித்தாலும் சரி, யாரோ ஒருவன் சொல்லும் அந்த ஒரு நாள் மட்டும்தான் காதலிக்கவேண்டுமா? அப்

மேலும்

நன்றி தோழா 11-Feb-2018 6:35 pm
நல்லபடைப்பு !! இதுவும் ஒரு சமுதாயத்தொண்டுதான் ............ வாழ்த்துக்கள் .................. 11-Feb-2018 1:20 pm
H ஹாஜா மொஹினுதீன் - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2018 10:44 am

சகுனிகளின் சூழ்ச்சியின் உதித்ததே ;
"சாகர்மாலா" !
சாமானியருக்கு புரியாத ;
சமஸ்கிரத வார்த்தை !

கடலை சுற்றி காவலர் கண்காணிப்பு !
கட்டுமரங்களும் காணாமல் போகும் !
காற்று வாங்கவும் கடிவாளம் !
சுவாசிக்கும் காற்றுக்கும் சுங்க சாவடி !

கண்ணுக்கு தெரியாத கடல் வளமெல்லாம் ;
கண்ணெதிரே காணாமல் போகும் !
வீதியில் நிற்கும் மக்களோடு ;
வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் !

எதிர்க்க துணிவிருந்தாலும் -
எதிர்க்கட்சி என்பது வலுவில்லாததால் ;
ஏக்கம் மட்டுமே !
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்லவே நமக்கு !

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2018 2:10 pm

விழித்திடு தமிழா! உலகம் உனது !
வீதிக்கு வந்தால் வீண் வம்பு வருமே என்று :
வீட்டோடு நீ இருந்தால் :
வில்லங்கம் தேடி வரும் !

தனி ஒருவன் நான், என் செய்வேன் என நீயும் :
தயங்காதே ஒரு பொழுதும் :
தன்மானம் கூட -
தரை நோக்கி வீழ்ந்திடுமே !

சாதி மதம் பாராமல் :
சகோதரராய் பழகிப்பார் !
சாத்தான் கூட்டத்திற்கு -
சாகுமணி சப்தம் கேட்கும் !

ஆசை ஒன்றே :
அன்பை முறிக்கும் !
ஒருவனுக்காக ஓசை கொடு !
ஒற்றுமை தானாய் வளரும் !

மேலும்

நன்றி நண்பா 01-Feb-2018 11:28 am
நல்ல எண்ணங்களை மனதால் சுமந்தாலே நாம் வாழும் வாழ்க்கை பொக்கிஷமாகி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 8:23 pm
உண்மைதான் நட்பே.... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..... . உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே.... 27-Jan-2018 7:22 pm
H ஹாஜா மொஹினுதீன் - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
H ஹாஜா மொஹினுதீன் - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Feb-2016 1:50 pm

-ஏங்க தோக்க போற ஜாதி கச்சியில போய் கூட்டனி வச்சிகிட்டின்களே டெபாசிட் போய்டாது ?

-எப்படி போகும், யாருக்கும் தெரியாம தான் பல வங்கில டெபாசிட் பண்ணிட்டேன்ல.

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2016 10:10 am

இந்த்த வார தினமணி கவிதை மணியில் "இன்று புதிதாய் பிறந்தோம்" கவிதை வந்துள்ளது தோழர்களே

மேலும்

H ஹாஜா மொஹினுதீன் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2016 7:25 pm

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலைக்கழகம்
ரியாத்: எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியாவில்தான் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக  உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ளது. ரியாத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் Riyadh University for Women என்ற பெயரில் இருந்தது பின்பு இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் 60 ஆயிரம் பேர் கல்வி கற்கின்றனர். இங்கு 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் ...
மேலும் படிக்க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
UL அலி அஷ்ரப்

UL அலி அஷ்ரப்

பாலமுனை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நேதாஜி

நேதாஜி

சென்னை
மலர்91

மலர்91

தமிழகம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே